நீ இல்லா நேரம் – 2

(Tamil Sex Stories - Nee Illa Neram 2)

Raja 2016-04-29 Comments

This story is part of a series:

Ilampen Pundai Nakkum Tamil Sex Stories – சௌமி காபி போட்டு எடுத்துக்கொண்டு போனபோது.. அவளது அண்ணன் பூந்துகிலன் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள் ஷாலினி.

ஷாலினி.. பக்கத்து வீட்டு பெண்களில் ஒருத்தி..! அவளது அண்ணனுக்கு ஒரு தோழியும் கூட..!!
காபியை அவர்களுக்கு கொடுத்துவிட்டு.. எதிர் சோபாவில் உட்கார்ந்தாள் சௌமி.

சாதாரனமாக ஷாலினியின் பேச்சுக்கள் அப்படி ஒன்றும் ரசிக்கும்படியாக இருக்காது என்பது சௌமியின் அபிப்ராயம்..!!
ஷாலினி உதட்டில் புன்னகை தவழ.. நுணி நாக்கு ஆங்கிலத்தை சற்று அலட்டலாக பேசுவாள்..!!
அந்தவிதமான அலட்டலான பேச்சுக்களில் எல்லாம் சௌமிக்கு எப்போதுமே உடன்பாடு இருக்காது..!!
ஷாலினியின் தன் முனைப்பான பேச்சைக்கேட்டு.. சௌமி சட்டென வாய்விட்டு சிரித்து விட்டாள்..!!

அவளது கேலிச்சிரிப்பை பார்த்து.. தன் பேச்சை நிறுத்திக்கொண்டாள் ஷாலினி.
”என்ன சௌமி.. திடீர் சிரிப்பு..??”

வெறுமனே தலையை அட்டிச் சிரித்தாள்.
”நீ பேசு..”

பூந்துகிலும் கேட்டான்.
”இப்ப எதுக்கு சிரிச்ச நீ..?? ஷாலு அப்படி ஒன்னும் நீ சிரிக்கற மாதிரி பேசலயே..??”

அவர்களது பேச்சுக்கு தடையாக இருக்க சௌமி விரும்பவில்லை.
தலையை ஆட்டிக்கொண்டே.. எழுந்தாள்..!
”நீங்க பேசுங்க..!!” என அந்த இடம் விட்டு நகர்ந்தாள்.

”சௌமிய புரிஞ்சுக்கவே முடியாது..! நிருதிதான் பாவம்..!!” தன் அண்ணனிடம் ஷாலினி சொல்வது கேட்டது..!!

தன் அறைக்குள் போய்.. கட்டிலில் உட்கார்ந்தாள். செய்வதற்கும் வேலைகள் ஒன்றும் இல்லை. கட்டிலில் கால் நீட்டிப் படுத்து கண்களை மூடினாள்..!!
அவளது இளம் மார்பகங்கள் விம்மியெழ.. ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள்..!!
சில நொடிகளில் அவளது எண்ணச்சிதறல்களை முழுமையக்கி.. அவளது கவனத்தை.. அவள் உடம்பின்மீது நிலை கொள்ளச் செய்தாள்..!!
அவளின் இதயம் துடிப்பதை.. துள்ளியமாக கவனித்தாள்..!!

அப்படியே எந்த எண்ணங்களுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல்.. அவளது இதயம் துடிக்கும்.. வெறும் உணர்வுடன் கலந்து போனாள்..!!

எத்தனை நேரம் அப்படி இருந்தாள் என்று தெரியவில்லை.

”சௌமி..!!” கௌரியின் குரல் கேட்டு கலைந்தாள். கண்களை திறந்து கௌரியை பார்த்தாள்.
”தூங்கிட்டிருந்தியா.. ஸாரி..” பக்கத்தில் வந்தாள் கௌரி.

எழுந்து உட்கார்ந்தாள்.
”தூங்கல.. ‘சும்மா ‘ படுத்திட்டிருந்தேன்..! ஸ்ருதி..??”

”தூங்கிட்டிருக்கா..!! பக்கத்துல அம்மா இருக்கு..! உன்ன பாக்கலாம்னு வந்தேன்..!!”

”உக்காரு..”

”ஒரு சின்ன டவுட் சௌமி..” கட்டிலில் உட்கார்ந்தாள் கௌரி.

”என்ன..??”

”கனவுகளுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா..??”

”ஒரு கோப்பை தேனீர்..!!” சிரித்தாள் சௌமி.

”அது.. கனவா நெஜமான்னே.. எனக்கு புரியல…”

” எதுவானாலும் அதை ஒதுக்கிரு..!! விழிச்சிக்கோ..!! அதான் அழகு..!!”

”ஆனா.. சௌமி.. இப்பவும் அது எனக்கு கனவா தோணல..”

” ம்.. ம்ம்..!!”

”ஆனா.. அது நிஜமும் இல்ல..!!”

”கரெக்ட்…”

”அப்ப அது என்ன..??”

”எனக்கும் தெரியாது..!!”

”சரி.. சொல்றேன் கேளு..!! நேத்து மிட் நைட்டுக்கு மேல இருக்கும்.. எண்ணங்களை வேற நான் கவனிச்சிட்டு இருக்கேனா.. ஒரே கனவு மயமா இருக்கு. தூக்கம்கூட நிறைவா தோணல. படுத்து ஒரு பத்து நிமிசத்துல எழுந்துட்ட மாதிரி இருக்கு..! ஆனா.. காலைலதான் எந்திரிச்சுருக்கேன்..! என் கனவு என்னன்னா… நேத்து நைட்.. எங்க ரூம் புல்லா பிரைட் ஆகிருச்சு.. பகல் மாதிரியே.. அப்படி ஒரு பிரைட்னஸ்.. நான் கீழ படுத்துருக்கேன்.. ஆனா.. என்னை போலவே இன்னொரு கௌரி.. என் முன்னால நின்னுட்டு டான்ஸ் பண்றா.. என்னை நானே பாக்கறதுல எனக்கு ஏக பயம்..! அந்த பயத்தோடவே என் மனசுல ஒரு அசட்டு தைரியம்.. என்ன நடக்குதுனு பாக்கலாங்கற மாதிரி..!! அப்ப என் சுய உணர்வு எனக்கு நல்லாவே இருக்கு.. நான் பயப்படறது எனக்கு தெரியுது..! எனக்கு நானே தைரியம் சொல்லிக்கறேன்.!
அப்பதான் என் முன்னால நிக்கற கௌரி டான்ஸ் பண்றா.. பண்ணிட்டே கீழ படுத்துருக்கற எனக்கு கை குடுக்கறா.. நானும் கை கொடுக்கறேன்.. ஆனா ரெண்டு பேரும் இணைய முடியல.. எனக்கு ரொம்ப பயமாகி நான் கத்திட்டேன்..!! அதுல படுத்துருக்கற கௌரியாதான் என்னை பீல் பண்ணேன்..!! பயத்துல சட்னு முழிச்சிட்டேன்..!!
முழிச்சு பாத்தா.. ரூம் நார்மலாதான் இருக்கு.. சந்தர் என் பக்கத்துல சாதுவா படுத்து தூங்கிட்டிருக்காரு..!! இப்பவரை அதை என்னால ஒரு கனவா ஏத்துக்க முடியல..!! அதான் உன்ன கேக்க வந்தேன்..?? உனக்கு இந்த மாதிரி நடந்திருக்கா..??”

சிரித்தாள் சௌமி.
”நெறைய தடவை நடந்துருக்கு..!! இப்பகூட சமயத்துல எப்பவாவது வரும்..!! ஆனா நான் அதுலாம் ஆராய்ச்சி பண்றதே இல்ல..!! உனக்கு மறுபடி அந்த மாதிரி மயக்க நிலை வரும்.. அதுல பயப்பட ஒன்னுமே இல்ல..!! உனக்குள்ள என்னமோ நடக்குதுனு நெனச்சிட்டு அப்படியே மறந்துரு அத..!!”

”ம்..ம்ம்.. சரி..!!”

”முடிஞ்சவரை கடந்த காலத்தை கை விட்டர்றது நல்லது..! அதாவது காலத்தை கடந்த நிலை..!! நிகழ்காலம் ஒன்னு மட்டும் நிஜம்..!! கடந்த காலம் ஒரு கனவு..!! எதிர் காலம் ஒரு கனவு..!! நிகழ் காலம் மட்டுமே நிஜம்..!! அதகூட…காலத்தோட அடிப்படைல இல்ல..!! உண்ர்வு நிலைலதான் நிஜம்..!! காலத்த கடந்த நிலைல என்னிக்கும் இருக்கறது நம்ம உணர்வுகள் மட்டும்தான்.. அதுதான் நிஜம்..!! அங்க காலமே கிடையாது..!! நீ புரிஞ்சிக்க வார்த்தை வேனும்ங்கறதால நிகழ்காலம் ன்ற வார்த்தையை பயண்படுத்த வேண்டியிருக்கு..!! அதெல்லாம் தர்க்க ரீதியான பிரச்சினைக்கு கொண்டு போகும்..!! ஸோ.. எல்லாத்தையும் ஒரு சாட்சியா மாத்திரம் மட்டும் நின்னு கவனிச்சு பாரு..!! காலமற்ற.. அந்த நிகழ்கால உணர்வு.. உனக்கும் கை வரலாம்..!!”

”என்னால முடிஞ்சவரை.. நீ சொல்றதை ஃபாலோ பண்றேன்..!!” சௌமியின் கையை பிடித்துக்கொண்டு சொன்னாள் கௌரி.

பூந்துகில் அறைக்குள் நுழைந்தான்.
”நீ ஏதேதோ பேசற சௌமி..! எனக்கு சுத்தமா ஒன்னும் புரியல..!!”

”நீ எப்ப வந்த..??” கௌரி கேட்டாள்.

”நீ உள்ள வந்ததும் ஷாலினி போய்ட்டா.. சரி உங்ககூட பேசலாம்னு வந்தேன்..! நான் டிஸ்டர்ப்பா இருப்பனோன்னு.. நீங்க ரெண்டு பேரும் பேசறத கேட்டுட்டு.. அப்படியே நின்னுட்டேன்..!!”

சௌமி சிரித்தபடி தன் அண்ணனிடம் சொன்னாள்.
”இதெல்லாம் பைத்தியங்களோட சம்பாஷனை.. நீ காதுல வாங்கிக்காத..!!”

” எது..??” உள்ளே வந்து சேரில் உட்கார்ந்தான்.

”நாங்க பேசினது..!!”

”ம்கூம்..!! உன்ன பாத்தா அப்படி தெரியல..!! உன்கிட்ட ஏதோ ஒரு அற்புதம் நடந்துருக்கு.. ஆனா அது என்னன்னுதான் புரியல..!!”

” வெரி சிம்பிள்.. நான் ஒரு பைத்தியம்ங்கறத இப்ப நான் உணர்ந்துட்டேன்..!!” சிரித்தாள் சௌமி.

”உன் பேச்சு பைத்தியக்காரத் தனமானது இல்ல..”

கௌரி குறுக்கிட்டாள்.
”பூ.. ஒரு பைத்தியம் தன்னை பைத்தியம்னு உணர ஆரம்பிச்சிட்டா அது.. சுத்தமா தெளிஞ்சிருச்சுனு அர்த்தம்..!! நம்ம சௌமி இப்ப தெளிஞ்சவ..!!
ஆனா நாம..?? நாமதான் ரோம்ப அறிவாளி.. ரொம்ப தெளிவானவங்கனு நினைச்சிட்டு இருக்கோம்..!! லாஜிக் புரியுதா..?? சௌமி நம்மள மாதிரி இல்ல..!!”

” ஓ..ஓ..!!” புரிந்து கொண்டதாய் வியப்பைக் காட்டினான் பூந்துகில் ”என்னை நான் அறிவாளின்னில்ல நெனச்சிட்டு இருக்கேன்..!!”

”என்ன பண்ண.. நான்கூட இன்னும் அறிவாளிதான்..!!” என சிரித்தாள் கௌரி..!

சௌமி சிரித்தபடி மீண்டும் சொன்னாள்.
”நாம அறிவாளியா நடிச்சிட்டு இருக்கோம்ன்றத உணர்ந்துட்டா நமக்கு நல்லது..! அப்படி இல்லாம நாம நெஜமாவே அறிவாளிதான்னு உறுதியா நம்பினா.. அது ரொம்ப ஆபத்து..!! உண்மையான அறிவாளி தன்னோட முட்டாள்தனத்தையும் தெரிஞ்சு வெச்சிருப்பான்..! சமயத்துல அதை மதிக்கவும் செய்வான்..!!
ஆனா முட்டாள் அப்படி இல்ல..! அவனோட முட்டாள்தனம் பத்தி அவனுக்கு எதுவும் தெரியாது.! எப்பவும் அவன் ஒரு அறிவாளின்னும்.. மத்தவங்களைவிட.. தான் உயர்ந்த மனுஷன்னும்.. உறுதியா நம்பிட்டிருப்பான்..!!”

”ஓ…!!”

”நாம எப்படி இருக்கோம்னு பாக்கறதுதான் சாட்சி..!! அப்படி இல்லாம.. நாம நல்லா படிச்சிருக்கோம்.. பட்டம்.. பேரு.. புகழ் எல்லாம் வாங்கிருக்கோம்னு.. மேதமையான அபிப்ராயத்துக்கு போய்டக்கூடாது..!!”

”எப்படி.. எப்படி..??”

”நாம எப்படி இருக்கோம்னு பாக்கறது அகநிலை..!! அதாவது நம் எண்ணங்கள்.. சிந்தனைகள்.. என்ன ரீதியா இருக்குனு பாக்கறது..!! உன் எண்ணங்கள் எப்படிவேனா இருக்கட்டும்.. நீ நல்லவனா இருக்கனும்னு அவசியமில்ல..! அத அப்படியே பாத்தா.. அது.. அகம்..!!
பணம்…வசதி.. பட்டம்.. படிப்பு.. பேரு.. புகழ் இது எல்லாம் புறநிலை..!! நாம அந்தஸ்தோட இருக்கறது நம்ம அறிவாளித்தனம் இல்ல..!! அறிவுங்கறது மெய்ப்பொருள் காண்பது..!! புற நிலைல அடையற.. மேதமைக்கும்.. அக நிலைல அடையற.. அறிவுக்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்ல..!! உண்மையான அறிஙவுன்றது அக நிழைல இருந்து தானே.. மலர்ந்து வரது.. ஒரு பூ மலர்றது மாதிரி..!! அதை வரவழைக்க முடியாது..!!”

Comments

Scroll To Top