பருவத் திரு மலரே – 95

(Tamil Kamakathaikal - Paruvathiru Malarae 95)

Raja 2017-09-01 Comments

This story is part of a series:

Jipyai Avukkum Tamil Kamakathaikal – பாக்யா மீண்டும் கண் விழித்த போது பயங்கர புழுக்கமாக இருந்தது. வீட்டுக்குள் காற்றில்லாமல் அடைத்து வைத்ததைப் போல மிகவும் வேக்காடாக இருந்தது. புரண்டு எழுந்து உட்கார்ந்தாள். திறந்திருந்த நைட்டியின் ஜிப்பை இழுத்து மேலேற்றினாள். கலைந்து கிடந்த கூந்தைல அள்ளி முடிந்து கொண்டையிட்டாள். பின் ராசுவைப் பார்த்தாள். அவன் இடுப்பில் இருந்த வேட்டி அவிழ்ந்திருந்தது. ஆனாலும் ஜட்டி போட்டிருந்தான். அவனும் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் நெஞ்செல்லாம் வியர்த்திருந்தது. கை வைத்து அவன் வியர்வை ஈரத்தைத் துடைத்தாள். அவன் விழித்துக் கொண்டான். !

” பயங்கரமா வேகுதுடா.. ” என்று புன்னகையுடன் சொன்னாள்.

அவன் பார்வை ஜன்னல் பக்கம் போனது. சாத்தியிருப்பதைப் பார்த்து விட்டுச் சொன்னான்.
” மொதல்ல.. ஜன்னல தெறந்து வை காத்து வரட்டும்.. !!”

அவள் எழப் போக அவளை இழுத்து மார்பில் சாய்த்தான். அவள் முலைகள் அவன் நெஞ்சில் அழுந்த அவன் மேல் சரிந்து படுத்தாள். சத்தம் இல்லாமல் அவள் உதடுகளைக் கவ்விச் சுவைத்தான். சில நொடிகள் கழித்து விலகி எழுந்தாள். ஜன்னலைத் திறந்து வைத்து விட்டு ஒரு துண்டை எடுத்துக் கொண்டு பாத்ரூம் போனாள். குளித்து விட்டு அதே நைட்டியைப் போட்டுக் கொண்டு உள்ளே வந்தாள். ராசு எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தான்.. !!

”போய் குளிச்சிட்டு வா.. காபி வெக்கறேன் ” என்றாள்.

அவன் எழுந்து போக.. பால் வாங்க கடைக்குப் போனாள் பாக்யா. கடையிலிருந்த பெரியவர் அவளிடம் கேட்டார்.
” யாரு புள்ள அது.. ?”

” எங்க மாமாங்க..” என்றாள்.

” தாய் மாமனா.. ?”

” ஆமாங்க..”

” கல்யாணமாகிருச்சா.. ?” அவர் கேட்ட கேள்வியின் நோக்கம் அவளுக்கு தெளிவாகப் புரிந்தது. அவள் கணவனை விட்டு பிரிந்து வந்திருப்பதும அவருக்கு. தெரியும்.

” இன்னும் இல்லைங்க” என்று சிரித்தபடி சொன்னாள்.

அதற்குள் வேறு ஒரு பெண்மணி கடைக்கு வர.. அவர் பாலை எடுத்து வந்து கொடுத்து விட்டார். அவள் வீட்டுக்கு வந்து காபி வைத்தாள். கூடவே மாலைச் சமையலையும் ஆரம்பித்தாள். ராசு குளித்து விட்டு வந்த பின் அவனிடம் சொன்னாள்.
” எதுத்த கடைக்காரனுக்கு இப்பவே நம்ம மேல டவுட் வந்தாச்சு.. ”

” என்ன கேட்டான். ?”

”நீ யாரு.. என்னன்னு விசாரிச்சான்..”

” நீ என்ன சொன்னே…?”

”சொன்னேன். என் தாய் மாமன்னு. அதுக்குள்ள இன்னொரு பொம்பளை வந்ததால அந்த ஆளு பாலை எடுத்து குடுத்துட்டான். இல்லேன்னா.. நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சோம்னுவரை கேட்றுப்பான்.. !!”

” ஊருன்னா அப்படித்தான் விடு.! ஊர் வாயை மூட முடியாது.. !!”

இருவரும் காபி குடித்து விட்டு பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

” நான் கிளம்பட்டுமா ?” காபிக்குப் பின் கேட்டான் ராசு.

” ஏய்.. ஏன்டா.. ?” திகைத்துப் போய்க் கேட்டாள் பாக்யா.

” நீ வேலைக்கு போய்ருவ இல்ல..? அப்பறம் நான் இங்க இருந்து என்ன பண்றது.. ?”

” நான் போகல. நீ இரு.. ? நான் லீவ் போட்டுக்கறேன்.. !!”

” எனக்காகவா.. ?”

” ஏன அதுல என்ன தப்பு.. ?”

” கெழவன் கெழவிக்கே நம்ம மேல டவுட் வரும்.. ”

” நான் சொல்லிக்கறேன. விடு.. ”

” என்னன்னு.. ?”

” நீ என்னை கல்யாணம் பண்ணிக்க போறேனு. ”

” ஒடனேவா. ?”

” ஒடனே இல்ல. மெதுவா பண்ணிக்கறோம்னுதான். அப்பத்தான் அவங்க மனசு சமாதானம் ஆகும். ! நீ சொல்லாத நானே அவங்ககிட்ட பக்குவமா சொல்லிக்கறேன்.. !!” என்று அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு சொன்னாள்.

அவளைத் தழுவி அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவளும் அவன் நெஞ்சில் முத்தம் கொடுத்தாள்.

அப்பறம் அவன் போனை வாங்கி சாந்திக்கு கால் செய்தாள். அவன் மடியில் உட்கார்ந்து கொண்டு சாந்தியுடன் பேசினாள். அவன் கைகள் அவள் உடம்பில்.. விரசம் காட்டாமல் விளையாடின.. !!
” இன்னிக்கு நான் வேலைக்கு வரலப்பா. லீவ் சொல்லிரு..” என்றாள்.

”ஏய்.. ஏன்டி ?”

” ராசு வந்துருக்கான். ஸோ.. ”

” அடிப் பாவி..! அப்ப இன்னிக்கு செம ஆட்டம்தான். !”

”இப்பவே ஆடியாச்சு. ரெண்டு தடவை. மறுபடி நைட்னு ஒண்ணு இருக்கில்ல..”

” ஏய்.. என் வயித்தெறிச்சலை கெளப்பாதடி ” என்றாள் சாந்தி.

” ஏய்.. உனக்குத்தான் உன் லவ்வர் இருக்காரில்ல. ? நீயும் என்ஜாய் பண்ணு.. ?”

” ஆமா. அவ்வளவுதான். நீ இங்க இருந்தாலாவது சினிமா போற சாக்குல ஏதாவது பண்ணலாம். இப்ப அதுக்கும் வழி இல்ல. கல்யாணம் பண்றவரை அடக்கித்தான் வாசிக்கணும்.. ”

மேலும் கொஞ்ச நேரம் பேசி விட்டு போனை ராசுவிடம் கொடுத்தாள்..அவனும் பேசினான். நீண்ட நேரம் பேசி முடித்து காலை கட் பண்ணிய பிறகு.. பாக்யாவைக் கேட்டான் ராசு.!

” நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்னு அவகிட்ட சொல்லவே இல்ல போலருக்கு..?”

” இப்ப வேண்டாம். மெதுவா சொல்லிக்கலாம்..”

” ஏன்டி.. ?”

” இப்ப சொன்னா.. கேவலமா இருக்கும் ” என்று சிரித்தாள்.

முதலில் பாக்யாவின் பாட்டி வேலை முடிந்து வந்தாள். ராசுவை நலம் விசாரித்து அவனுடன் பேசினாள். எல்லாம் பாக்யாவின் வாழ்க்கை பற்றித்தான் இருந்தது.. !!

இருட்டும் நேரம் பாக்யா சமையலை முடித்து.. தலைவாரி.. லேசாக மேக்கப் செய்து கொண்டாள். ராசுவை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே கிளம்பினாள். அது ஒன்றும் பெரிய ஊர் அல்ல. ஆனாலும் தேவையான வசதிகள் எல்லாம் இருந்தது. ஊரின் மேற்கு திசையில் கொஞ்ச தூரத்தில் ஊரின் எல்லை முடிந்து விடும். இன்னும் கொஞ்சம் போனால்.. ஒரு மலை இருக்கிறது. அதிகம் பாறைகளைக் கொண்ட பெரிய மலை. ! அந்த மலையின உச்சியில் ஒரு பெண் தெய்வக் கோவில் இருக்கிறது. அங்கிருந்து சிற்றோடை போல.. தண்ணீர் ஓடை ஒன்று வழிந்து கொண்டிருக்கும் ஆழம் இருக்காது. ஆனால் குளிக்கலாம். ஊருக்குள் வராமல் அதை தடுத்து ஒரு அணை கட்டியிருக்கிறார்கள. அதைச் சுற்றி இரண்டு இண்டஸ்ட்ரியல் கம்பெனிகளும்.. ஒரு இன்ஜினியரிங் கல்லூரியும் இருக்கிறது. கம்பெனிகளில் வேலை செயபவர்களில் முக்கால்வாசிப் பேர் வட நாட்டு இளைஞர்கள்தான்..!! அணையின் ஓரமாக பக்கத்திலேயே மரங்கள் சூழ்ந்த ஒரு கருப்பராயன் கோவில் இருக்கிறது. பெரும்பாலும் அந்த ஏரியாவில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்காது.. !!

இப்போது அந்த கோவிலுக்கு ராசுவை அழைத்துப் போனாள் பாக்யா. கோவில் போனபோது இருட்டி விட்டது. சாமி கும்பிடவில்லை. ஆனால் கோவிலின் முன்பாக இருந்த மேட் மீது நெருக்கமாக அமர்ந்தபடி ஒரு மணி நேரம் பேசினார்கள். அவனிடம் மனசு விட்டு பேசியதில் அவளது மனதில் இருந்த கவலைகள் எல்லாமே பறந்து போனதைப் போலிருந்தது..!!

ஏழரை மணிக்கு மேல் கை கோர்த்தபடி வீடு திரும்பினார்கள். அவளது தாத்தாவும் குடித்து விட்டு வந்திருந்தார். சாப்பாடு முடிந்தும் பத்து மணிவரை பேசிக் கொண்டிருந்த பின் படுக்கப் போனார்கள்.. !!

ராசு தன்னை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான் என்பதை.. பாக்யா தனது தாத்தா பாட்டியிடம் சொல்லி விட்டாள். அதைக் கேட்ட அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது. தாத்தா பாட்டி மீது பொங்கிய பாசத்தில் அவளுக்கே கண்கள் கலங்கி விட்டது.. !!

கிழவனும் கிழவியும் முன்னறையில் படுத்துக் கொண்டார்கள். பாக்யா.. ராசு இரண்டு பேரும் உள்ளறையில் கணவன் மனைவியைப் போல படுத்துக் கொண்டார்கள். அதன் பிறகு அவர்கள் பெரிய அளவில் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் அவர்களது கைகளும் வாய்களும் மட்டும் நிறையப் பேசின.. !!

பதினொரு மணிக்கு மேல் எழுந்து பாத்ரூம் போய் வந்த பாக்யா… ராசு பக்கத்தில் உட்கார்ந்தபடி மெதுவாகச் சொன்னாள்.
” ரெண்டு பேரும் நல்லா அசந்து தூங்கறாங்க..”

” நாம ஆரம்பிக்கலாமா..?” அவளை இழுத்து மார்பில் போட்டான்.

சிரித்து அவனைத் தழுவினாள்.
” ஆச்சரியமா இருக்கு இல்ல. ”

Comments

Scroll To Top