ஆண்மை தவறேல் – 42

(Tamil Sex Story - Aanmai Thavarael 42)

Raja 2013-12-25 Comments

Tamil Sex Story – நிமிர்ந்து கற்பகத்தை பார்த்தான். அவள் இன்னும் பிரம்மை பிடித்தவள் மாதிரியே அசையாமல் நின்றிருந்தாள். அசோக்கின் முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கைகள் ரெண்டும் உடலை விட்டு விரிந்திருக்க, அவளது மாராப்பு இப்போது கீழே நழுவியிருந்தது. மார்பை மூடிக்கொள்ள கூட தோன்றாமல் நின்றிருந்தாள். நாணப்படும் மனநிலையிலும் அவள் இருக்கவில்லை. கற்பகம் அவன் முன் கையேந்தி நிற்கிற கோலமும், அவள் பேசிய வார்த்தைகளும், அசோக்கின் மூளையை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல வலிக்க, அவன் தலையை பிடித்துக் கொண்டான்.

சலனமற்று நின்று கொண்டிருந்த கற்பகம் இப்போது திடீரென கண்களை சுருக்கினாள். அவளுடைய தலை நிலை கொள்ளாமல் லேசாக சுழன்றது. கால்கள் தடுமாறின. அசோக்கை நோக்கி அடியெடுத்து வைத்தவள், அப்படியே மயங்கி சரிந்தாள். அவளை பார்த்துக் கொண்டிருந்த அசோக் உடனடியாய் சுதாரித்துக் கொண்டான். அவள் தரையில் வீழ்வதற்கு முன்பாகவே ஓடிச்சென்று அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

“கற்பு.. கற்பு..”

என்று மயக்கமுற்று மடியில் கிடந்த அவளுடைய கன்னத்தில் அறைந்தான். அவளிடம் எந்த அசைவும் இல்லாமலிருக்க, பிறகு அவளது மாராப்பை இழுத்து போர்த்திவிட்டு,

“சண்முகம்.. சண்முகம்..” என்று அறைவாசலை நோக்கி கத்தி, ஆபீஸ் பியூனை அழைத்தான்.

அதன்பிறகு ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து..

அசோக்கின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் சீறிக்கொண்டு இருந்தது. அசோக் ஸ்டியரிங்கை வளைத்துக் கொண்டிருக்க, அவனுக்கு அருகே இருந்த இருக்கையில் கற்பகம் அமர்ந்திருந்தாள். அசோக் காரை செலுத்திக்கொண்டே பக்கவாட்டில் திரும்பி கற்பகத்தை பார்த்தான். அவளுடைய பார்வை ஒரு மாதிரி நிலைகுத்திப் போயிருக்க, சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று முன்பு இருந்ததை போலில்லாமல் அவளுடைய முகம் இப்போது தெளிவாக காட்சியளித்தது. அவளுக்கு மயக்கம் தெளிவித்து, அவள் கணவனின் உயிரை காப்பாற்றுவது தனது பொறுப்பு என்று அசோக் உறுதி அளித்து நம்பிக்கையூட்டிய பிறகே, அவளிடம் ஒரு தெளிவு பிறந்தது.

“தெளிவா இருக்கியா கற்பு..?? உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா..??” அசோக் இறுக்கமான குரலில் கேட்டான்.

“ம்ம்.. சொல்லு..!!” கற்பகத்தின் பதிலிலும் ஒரு இறுக்கம்.

“ஏ..ஏன் அப்படி பண்ணுன கற்பு..??”

“எப்படி பண்ணுனேன்..??”

“எ..என்கிட்டயே உன் உடம்பை வெலை பேசுற மாதிரி.. எப்படி உன்னால அப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடிஞ்சது..??”

அசோக் ஆதங்கமாக கேட்க, கற்பகம் சில வினாடிகள் எதுவும் பேசவில்லை. அருகில் இருப்பவனையும் திரும்பி பார்க்கவில்லை. சாலையில் எதிரே வரும் வாகனங்களையே வெறித்துக் கொண்டிருந்தாள். பிறகு மெல்லிய குரலில் சொன்னாள்.

“எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை அசோக்.. பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்துச்சு.. எப்படியாவது பணத்தை அரேஞ் பண்ணனும்னு தோணுச்சு.. அதுக்காக என்னவேணா செய்யலாம்னு தோணுச்சு..!! உன்கிட்ட வந்து பேசுறப்போ.. ஒரு கன்ஃப்யூஷன்ல.. கண்ட்ரோல் இல்லாம.. அப்படி சொல்லிட்டேன்..!!”

“கன்ஃப்யூஷன்ல சொல்றதா இருந்தாலும்.. என்னை பாத்து.. எப்படி நீ அப்படி சொல்லலாம்..??”

அசோக் அந்த மாதிரி கோவமாக கேட்கவும், கற்பகம் இப்போது பக்கவாட்டில் திரும்பி அவனை பார்த்தாள். அவள் அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்ததில் ஒருவித உஷ்ணம் தெரிந்தது. குரலில் இப்போது கொஞ்சம் கடுமையை கூட்டிக்கொண்டு சொன்னாள்.

“ஏன்..?? நான் சொன்னதுல என்ன தப்பு..?? நீ அந்த மாதிரி ஆள்தான..?? பொண்ணுக உடம்பை வெலை பேசுறவன்தான..?? இப்படித்தான் இருப்பேன், மாறவே மாட்டேன்னு உன் பொண்டாட்டிட்டயே சவால் விட்டவன்தான..??”

கற்பகத்தின் கேள்விகள் அசோக்கை சுருக் சுருக்கென்று தைத்தன. அவளுடைய முகத்தையே திகைப்பாக பார்த்தான். அவனுடைய குரல் அவனையும் அறியாமல் இப்போது தடுமாற ஆரம்பித்தது.

“க..கற்பு ப்ளீஸ்.. எ..எனக்கு பொண்ணுக சகவாசம் இருக்கு.. ஆ..ஆனா நான் வெறி புடிச்சவன் இல்ல..!! யார் மேல ஆசைப்படனும்.. யார் மேல ஆசைப்படக் கூடாதுன்னு எனக்கு தெரியும்..!! பாலுக்கும், கள்ளுக்கும் எனக்கு நல்லாவே வித்தியாசம் தெரியும் கற்பு..!!”

“பனை மரத்துக்கு கீழ நின்னு பாலை குடிச்சாலும்.. பாக்குறவங்க கண்ணுக்கு அது தப்பாத்தான் தெரியும் அசோக்..!!”

அசோக்கிற்கு அடுத்த அடி..!! பதில் சொல்ல முடியாமல் திணறினான். ஓரிரு வினாடிகள் கற்பகத்தின் முகத்தையே திகைப்பாக பார்த்தவன், அப்புறம் முன்னால் சென்ற காரை ஓவர்டேக் செய்துகொண்டே, சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக சொன்னான்.

“நா..நான் ஒன்னும் அவ்வளவு கேவலமானவன் இல்ல கற்பு..!!”

“ம்ம்.. தெரியும்..!!”

“அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பேசுற..?? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!” சொல்லும்போதே அசோக்கிற்கு தொண்டை அடைத்தது. கண்களில் லேசாக நீர் எட்டிப் பார்த்தது.

“நீ பண்றது அந்த மாதிரிதான் இருக்கு அசோக்.. உன்னை நல்லவன்னு சேத்துக்குறதா, இல்ல கெட்டவன்னு ஒதுக்குறதா..?? எனக்கு புரியலை..!!”

“நா..நான்.. நான் நல்லவன்தான் கற்பு.. ரொ..ரொம்ப நல்லவன்.. யாருக்கும் எந்த கெடுதலும் நான் நெனச்சது இல்ல..!! என்னை நீ புரிஞ்சுக்கவே இல்ல கற்பு..!!”

வேகமாக சொன்னவன், கொஞ்ச நேரம் அமைதியானான். சாலையை பார்த்து காரை செலுத்தினான். ஆனால் அவனுடைய மூளை கற்பகம் சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தது. திடீரென மீண்டும் அவளிடம் திரும்பி,

“ச்சே.. ஆறு வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன் தெரியுமா..?? எந்த கெட்ட பழக்கமும் இல்லாம.. எவ்வளவு நல்ல பையனா இருந்தேன் தெரியுமா..?? எல்லாம் இவளால வந்தது..!!” என்றான் சலிப்பும், வெறுப்புமாய்.

“யாரால..??”

“நந்தினி..!!”

“அவ என்ன செஞ்சா..??”

கற்பகம் கேட்க அசோக் இப்போது சற்று நிதானித்தான். ஒரு சில வினாடிகள் மவுனமாய் இருந்துவிட்டு பிறகு மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

“காலேஜ்ல அவளை நான் லவ் பண்ணினேன் கற்பு.. ரொம்ப சின்சியரா லவ் பண்ணுனேன்..!! அவகிட்ட என் லவ்வை சொன்னப்போ.. அவ என்னை ரொம்ப கேவலமா ஹர்ட் பண்ணிட்டா..!!”

“ஓ.. அப்படி என்ன சொன்னா..??”

“நா..நான்.. நான் ஆம்பளையே இல்லைன்ற மாதிரி சொல்லி.. ஹர்ட் பண்ணிட்டா..!! அந்த வார்த்தையை தாங்க முடியாம.. அந்த கோவத்துலதான்.. நான் இப்படிலாம்..!! ச்சே.. எல்லாம்..” அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கற்பகம் இடையில் புகுந்து

“அப்படினா நீ ஆம்பளையாள மாறிருக்கணும்..??”

என்று உலர்ந்து போன குரலில் கேட்டாள். உடனே அசோக்கிற்கு அவன் மூளையில் சுருக்கென எதுவோ தைத்த மாதிரி இருந்தது. திகைத்துப் போய் கற்பகத்தை திரும்பி பார்த்தான்.

“க..கற்பு.. எ..என்ன சொல்ற நீ..????”

“புரியலையா..?? அவ சொன்னதாலதான் மாறிட்டேன்னு சொல்றியே..?? அப்படினா ஆம்பளையால மாறிருக்கணும்.. ஏன் இப்படி மாறுன..??”

“க..கற்பு.. நான்.. அப்போ நான்..” அசோக் வார்த்தைகளை சிந்த திணறினான்.

“ஆம்பளைன்னு நெனச்சுட்டு இருக்கியா..?? ஆம்பளைக்கும் பொம்பளை பொறுக்கிக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு அசோக்..!!”

கற்பகம் ஒருமாதிரி அமைதியான குரலில்தான் சொன்னாள். ஆனால் அசோக் அந்த வார்த்தைகளுக்கு அப்படியே ஆடிப்போனான். ஆறு வருடங்களுக்கு முன்பாக நந்தினி உதறித்த வார்த்தைகளைப் போல, இப்போது கற்பகம் வீசிய வார்த்தைகளும் அவனை வலிமையாக தாக்கின. விதிர்விதிர்த்து போய் கற்பகத்தையே பார்த்தான். கற்பகம் தொடர்ந்தாள்.

“பொண்ணுககிட்ட போறதுலாம் ஒரு ஆம்பளைத்தனமாடா..?? ஆம்பளைன்னா என்ன நெனச்சுட்டு இருக்குற நீ..?? உண்மையான ஆம்பளை யார்னு தெரியுமா உனக்கு..?? ”

அசோக் பேச்சிழந்து போய், பிரம்மை பிடித்தவன் மாதிரி காரை செலுத்திக் கொண்டிருக்க, அதன்பிறகு கொஞ்ச நேரம் கற்பகம் மட்டுமே பேசினாள். ஆனால் அவள் பேசிய அனைத்தும் அசோக்கின் செவியில் புகுந்து, மூளையை துளைத்தெடுத்தன.

“உன் அப்பா ஆம்பளை..!! சின்ன வயசுலேயே பொண்டாட்டியை இழந்துட்டாலும்.. வேற ஒரு பொண்ணுக்கு மனசுல இடம் இல்லைன்னு முடிவு பண்ணிட்டு.. தான் பெத்த பையனுக்காகவே.. இந்த நிமிஷம் வரைக்கும் உழைச்சுக்கிட்டும், கவலைப்பட்டுக்கிட்டும் இருக்காரே..?? அவர் ஆம்பளை..!!”

“நந்தினியோட அப்பா.. நம்ம சதானந்தம் ஸார்..!! இருநூறு எம்ப்ளாயிஸ் வொர்க் பண்ணுன கம்பெனிக்கு மொதலாளி அவரு.. பாவம், பிசினஸ் நொடிச்சு போச்சு..!! ஆனா.. தான் பொண்டாட்டியும், புள்ளைகளும் கஷ்டப்படக் கூடாதுன்னு.. எந்த ஈகோவும் பார்க்காம.. அந்த வயசுலயும்.. உன்கிட்ட கைகட்டி நின்னு வேலை பாத்தாரே..?? அவர் ஆம்பளை..!!”

“……………..”

“ஹ்ஹ.. நீ மட்டும் இல்ல.. இங்க நெறைய பேர் ஆம்பளைன்றதுக்கு அர்த்தத்தை தப்பாத்தான் புரிஞ்சு வச்சிருக்காங்க..!! ஒரு பொண்ணை கட்டில்ல திருப்தி படுத்திட்டா போதும்.. உடனே அவன் ஆம்பளை..!! அவளை கர்ப்பமாக்கிட்டா போதும்.. ஆஹா ஆம்பளை சிங்கம்..!! அடத்தூ..!! ராமண்ணாவுக்கு கொழந்தை இல்ல.. ஆனா, அவர் மாதிரி ஒரு ஆம்பளையை பார்க்க முடியுமா..?? காதலிச்ச பொண்ணுக்காக.. அவரோட சொந்த பந்தம், சொத்து பத்து எல்லாம் விட்டுட்டு வந்து.. இருபது வருஷமா உன் வீட்டுல கார் ஓட்டிட்டு இருக்காரே..?? அவர் ஆம்பளை..!!”

Comments

Scroll To Top