ஆண்மை தவறேல் – 42

(Tamil Sex Story - Aanmai Thavarael 42)

Raja 2013-12-25 Comments

“……………..”

“ஆங்.. அந்த புருஷோத்தமன்.. அவனை மறந்துட்டனே.. என்ன கேரக்டர்டா அவன்..?? அவ்வளவு கெட்ட பழக்கம் இருந்தும்.. அவனை காதலிச்ச ஒரு பொண்ணுக்காக.. அவளோட ஊனத்தை கூட பொருட்படுத்தாம.. அவளையே கல்யாணம் செஞ்சுக்கிட்டு.. இப்போ அவளுக்காகவே வாழ்றானே..?? அவன் ஆம்பளைடா..!!”

அசோக் இப்போது ஒருமுறை திரும்பி கற்பகத்தை பார்த்தான். அவனுடைய முகம் இப்போது வெலவெலத்துப் போய் பரிதாபமாக காட்சியளித்தது. கற்பகம் உதிர்த்த வார்த்தைகள் அனைத்தும், அவனை சுளீர் சுளீர் என சவுக்கால் அடித்தது போல இருக்க, அந்த வார்த்தைகள் அவனது உள்ளத்தில் பொங்க செய்த உணர்ச்சிகளை, உதடுகள் கடித்து கட்டுப் படுத்திக் கொண்டான்.

கற்பகமும் இப்போது கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அவளுடைய ஆவேசம் சற்றே வடிந்து போன மாதிரி தெரிந்தது. அவளுக்கு திடீரென எதுவோ ஞாபகம் வந்திருக்க வேண்டும். அவளுடைய விழிகள் விரிந்து கொள்ள, ஒரு மாதிரி மிரட்சியாக, எங்கேயோ வெறித்த பார்வை ஒன்று பார்த்தாள். அவளுடைய கண்கள் மெல்ல கலங்க ஆரம்பிக்க, சற்றே தழதழத்த குரலில் சொன்னாள்.

“நாலு பேர் சேர்ந்து ஒரு அப்பாவியை ரோட்டுல போட்டு அடிச்சுட்டா.. உடனே அவனுகளாம் ஆம்பளைகளாம்..?? அதெல்லாம் ஒரு வீரமாம்..?? இன்னைக்கு என் புருஷன் நாலு பேரை எதுத்து அடிக்க துப்பில்லாம ஹாஸ்பிட்டல்ல படுத்திருக்காரு அசோக்..!! நாலு பொறுக்கி பசங்ககிட்ட இருந்து ஒரு பொண்ணோட மானத்தை காப்பாத்துறதுக்காக.. அவனுககிட்ட கத்திக்குத்து வாங்கி.. இப்போ உசுரை கைல புடிச்சுட்டு படுத்திருக்காரு..!!” என்று அழுகுரலில் ஆரம்பித்தவள், திடீரென ஆவேசமாகி,

“என் புருஷனை விட யார்டா இருக்கா இங்க ஆம்பளை..??”

என்று கத்த, அசோக் அவளையே ஸ்தம்பித்துப் போய் பார்த்தான். சுத்தமாய் வாயடைத்துப் போனான். அவனுக்கும் இப்போது கண்கள் கலங்க ஆரம்பித்தன. கற்பகம் மேலும் கொஞ்ச நேரம் அப்படியே ஆவேசத்துடன் இருந்தாள். அப்புறம் மெல்ல தனது உணர்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு, கண்களில் வழிந்த நீரையும் துடைத்துக் கொண்டு, இதமான குரலில் பேச ஆரம்பித்தாள்.

“ஆம்பளைகளும், அவதார புருஷனுகளும்.. கதைலயும் காவியத்துலயும் மட்டும் இல்ல அசோக்.. நம்மள சுத்தி இருக்காங்க.. நம்ம கூடவே இருக்காங்க..!! கட்டுன பொண்டாட்டிக்காகவும், பெத்த புள்ளைக்காகவும், பொறந்த குடும்பத்துக்காகவும் வாழற ஒவ்வொருத்தனும் ஆம்பளைதாண்டா..!!”

“……………..”

“நீ அழகனா இருக்கலாம்.. அறிவானவனா இருக்கலாம்.. தெறமைசாலியா, தைரியசாலியா இருக்கலாம்.. வீரமானவனா, விவேகமானவனா இருக்கலாம்..!! ஆனா பெண்மையை மதிக்க தெரியாத உன்னை.. உன் பொண்டாட்டியோட அன்பை புரிஞ்சுக்க முடியாத உன்னை.. என்னால ஆம்பளையா ஒத்துக்க முடியாது அசோக்..!! நல்லா கண்ணை தொறந்து பாரு.. உன்னை சுத்தியே எத்தனை ஆம்பளைங்க இருக்காங்கன்னு பாரு..!! அந்த மாதிரி ஒரு ஆம்பளையா நீ மாறிக் காட்டிருக்கலாமே..?? இனிமேயும் சும்மா சும்மா.. ‘அவளாலதான் நான் இப்படி ஆயிட்டேன்.. அவளாலதான் நான் இப்படி ஆயிட்டேன்..’னு சொல்லிட்டு இருக்காத அசோக்.. தப்பு அவ மேல இல்ல.. உன் மேலதான்..!!”

கற்பகம் பேசி ஓய்ந்தாள். இடி, மின்னலுடன் மழை பெய்ந்து ஓய்ந்த மாதிரி இருந்தது அசோக்கிற்கு..!! அவளுடைய பேச்சில் இருந்த நியாயம் எல்லாம் அவனுடைய புத்தியில் உறைக்க, இத்தனை நாளாய் அவன் செய்திருந்த தவறு என்னவென்று தெளிவாக புரிந்தது. ஆனால் கற்பகம் தன்னை பற்றி இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறாள் என்பதையும் உணர்ந்து கொண்டான். அவளை தெளிவு படுத்தும் விதமாக மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

“நீ சொல்றதுலாம் சரிதான் கற்பு.. இத்தனை நாளா என் தப்பு என்னன்னே உணராம இருந்துட்டேன்.. இனி சத்தியமா அந்த தப்பை நான் திரும்ப பண்ண மாட்டேன்.. என்னால பண்ணவும் முடியாது கற்பு..!! நீ சொன்ன மாதிரி.. என் பொண்டாட்டியோட அன்பை புரிஞ்சுக்காத.. மடையன் இல்ல நான்.. எனக்கு நல்லாவே புரியும்..!!”

“அப்புறம் ஏன் அன்னைக்கு ஆபீஸ்ல அப்படி நடந்துக்கிட்ட..??”

“அது வேற.. அதை இப்போ சொன்னா உனக்கு புரியாது..!! ஆனா அது கூட.. அவ மேல நான் வச்சிருந்த அன்போட வெளிப்பாடுதான் கற்பு.. அவ என்னை நம்பலையேன்னு வந்த கோவம் அது..!!”

“என்னடா சொல்ற நீ..?? உனக்கும் அவ மேல அன்பு இருந்தா.. அப்புறம் அவளை ஏத்துக்குறதுல என்னதான் பிரச்னை உனக்கு..??”

“ஏதோ ஒரு குழப்பம்.. ஒரு தயக்கம்.. ஒரு ஈகோ..!!”

“ச்சே.. கட்டுன பொண்டாட்டிக்கிட என்னடா ஈகோ வேண்டிக் கெடக்கு..?? அதுவும் உன் மேல உயிரையே வச்சிருக்குற பொண்டாட்டிக்கிட்ட..??”

“ம்ம்.. தப்புத்தான்..!!”

“நான் சொல்றதை கேளு அசோக்.. நந்தினி ரொம்ப நல்ல பொண்ணு.. உன் ஈகோலாம் விட்டுட்டு.. நீதான் இனி எல்லாம்னு அவகிட்ட போய் சொல்லு..!! உனக்காகவே வாழறவ அவ.. அவளுக்காக நீ இனிமே வாழ்ந்து பாரு..!! பண்றியா..??”

“ம்ம்…”

அசோக் அமைதியாக சொன்னான். அவன் அப்படி சொன்னதற்கு அடுத்த ஐந்து நிமிடங்களில் மலர் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தது. Sunni Oombum Tamil Sex Story

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top