ஆண்மை தவறேல் – 32

(Tamil Sex Stories - Aanmai Thavarael 32)

Raja 2013-12-14 Comments

Tamil Sex Stories – “நான் உங்களை விட ரொம்ப சின்னப்பொண்ணு.. இவள்லாம் நமக்கு அட்வைஸ் பண்றாளேன்னு நெனைக்காதீங்க.. ஏதோ என் மனசுல பட்டதை சொல்றேன்..!!”

“ம்ம்.. சொல்லு..”

“இந்த பொண்ணுக சகவாசத்தை விட்ருங்கத்தான்.. ப்ளீஸ்.. உங்களை நீங்க மாத்திக்கோங்க..” வந்தனா கெஞ்சலான குரலிலேயே சொன்னாள்.

“இங்க பாரு வந்தனா.. நடந்தது தெரியாம நீ..”

“இல்லைத்தான்.. எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறேன்..!! அந்த அக்ரீமன்ட் பத்திதான சொல்றீங்க..? அக்கா எல்லாம் சொன்னா..!! ‘அதான் எல்லாம் தெரிஞ்சுதான கல்யாணத்துக்கு சம்மதிச்சா.. இப்போ என்ன..?’ அப்டின்னு சொல்வீங்க.. அதான..?”

“ம்ம்..”

“மனுஷங்க மனசு எப்போ எந்த மாதிரி மாறும்னு யாரும் சொல்ல முடியாதுத்தான்.. அக்கா அந்த அக்ரீமன்ட்டுக்கு சம்மதிச்சப்போ.. அவ உங்களை லவ் பண்ணலை.. ஆனா இப்போ உங்களை லவ் பண்றா..!! யெஸ்.. ஷீ லவ்ஸ் யூ.. ஷீ லவ்ஸ் யூ எ லாட்..!!”

“………………………………” வந்தனா சொன்ன வார்த்தைகளில் அசோக் திகைத்துப் போயிருக்க, அவள் தொடர்ந்து பேசினாள்.

“அக்கா உங்க மேல உயிரையே வச்சிருக்கா அத்தான்.. அவளுக்குன்னு மட்டும் நீங்க இருக்க மாட்டீங்களான்னு ஏங்குறா..!! உண்மையா காதலிக்கிற எந்தப்பொண்ணுமே அப்படித்தான நெனைப்பா..?? உங்களை உயிரா நெனைக்கிற ஒருத்திக்கு.. நீங்க தெனமும் வேற பொண்ணுககிட்ட போயிட்டு வர்றீங்கன்னு தெரியிறது.. எவ்வளவு வேதனையா இருக்கும்னு.. ஒரு பொண்ணா என்னால புரிஞ்சுக்க முடியுது..!! உங்களுக்கு அது புரியலையா அத்தான்..??”

“………………………………”

“தயவு செஞ்சு.. அக்கா சொல்லித்தான் நான் உங்ககிட்ட இப்போ பேசிட்டு இருக்கேன்னு மட்டும் நெனச்சுடாதீங்க.. நான் பேசுறது சத்தியமா அவளுக்கு தெரியாது..!!”

“………………………………”

“நான் உங்களுக்கு அட்வைஸ் பண்ணலைத்தான்.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!! நீங்க மாறணும்.. உங்களுக்காகவே வாழ நெனைக்கிற ஒரு பொண்ணு உங்களுக்கு கெடைச்சிருக்கா.. எல்லாத்தையும் விட்டுட்டு அவளுக்காக நீங்க கொஞ்சநாள் வாழ்ந்து பாருங்கத்தான்.. உண்மையான சந்தோஷம் என்னன்னு அப்போ நீங்க புரிஞ்சுக்குவீங்க..!! ப்ளீஸ்த்தான்.. அக்காவை ஏத்துக்கோங்க.. அவளோட லவ்வை அக்ஸப்ட் பண்ணிக்கோங்க.. அக்கா ரொம்ப பாவம் அத்தான்.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!!”

பேசிக்கொண்டிருக்கும்போதே வந்தனா உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். அவளுடைய விசும்பல் ஒலியை கேட்டு அசோக் திகைத்துக் கொண்டிருக்கும்போதே, கால் பட்டென கட் ஆனது. செயலிழந்து போனவனாய், இருண்டு போன செல்போன் திரையையே கொஞ்ச நேரம் வெறித்துக் கொண்டிருந்தான். வந்தனாவின் கெஞ்சல் அசோக்கின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது. அவனுடைய மூளை எதையோ தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்திருந்தது.

‘என்ன சொல்கிறாள் இவள்..?? இவள் ஏதோ புதிதாக உள்ளே புகுந்து குழப்புகிறாள்..?? சின்னப்பெண்.. இவளெல்லாம் எனக்கு யோசனை சொல்கிறாள்..?? எல்லாம் முன்கூட்டியே தெளிவு படுத்திவிட்டுத்தானே அவள் கழுத்தில் தாலியே கட்டினேன்..?? பெண்கள் சகவாசத்தை விட்டுவிட வேண்டுமாம்.. நான் ஏன் அப்படி மாற வேண்டும்..?? உணவு, உறக்கம் மாதிரி பெண்களும் என் வாழ்வில் ஒரு அங்கமாகிப் போனார்களே.. பெண்கள் இல்லாமல் எப்படி என்னால் இருக்க இயலும்..?? என்னால் முடியாது..!!’ என்று அவனுடைய ஒருமனம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இன்னொரு மனம் விழித்துக்கொண்டு,

‘ஏன் இருக்க முடியாது..?? இப்போது இருக்கவில்லை..?? இந்த இரண்டு வாரங்களாக நீ இருக்கவில்லை..?’

என்று கேள்வி எழுப்ப, அசோக்கின் மூளையை அந்த உண்மை பலமாக அறைந்தது..!! அவனுடைய மூளை கேட்ட அந்த கேள்வியால் அசோக் ஸ்தம்பித்து போனான்..!! ‘ஆமாம்.. உண்மைதானே..?? இந்த இரண்டு வாரங்களாக வேறு எந்தப்பெண்ணை பற்றிய எண்ணமும் துளி கூட இல்லாமல்தானே நான் இருக்கிறேன்..?? எந்த நேரமும் இந்த நந்தினிதானே என் மனதையும் மூளையையும் அடைத்திருக்கிறாள்..?? அலுவலகத்தில் கூட பல நேரங்களில் எந்த வேலையும் ஓடாமல், அவளைப் பற்றிதானே சிந்தித்துக் கொண்டிருந்தேன்..?? அவளுடைய சந்தோஷத்தை எப்படி அவளிடம் மீட்டு கொடுப்பது என்றுதானே எண்ணிக்கொண்டிருந்தேன்..?’

‘அப்படியானால்.. அப்படியானால்.. வேறு பெண்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியுமோ..?? ஒருத்தியின் இதயம் போதுமென்று.. என்னையும் அறியாமல் என் மனம் அவள் பக்கம் தன் வசமிழக்கிறதோ..?? இது காதலா..?? என்ன மாதிரியான உணர்வு இது..?? ஆறு வருடங்களுக்கு முன்பு.. எனக்கு அவள் மீதிருந்த காதல் உணர்வுக்கும்.. இந்த உணர்வுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றனவே..?? எது காதல்..?? இதுவா.. அதுவா..??’

அசோக்கால் தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை. ஆனால் நந்தினி தன் மனதில் ஆழமாக ஊடுருவி விட்டாள் என்று மட்டும் தெளிவாக புரிந்தது. அவளுடைய நினைவை சுமந்திருந்தால், வேறு பெண்கள் இல்லாமல் இருப்பது சாத்தியமே என்று அறிந்து கொண்டான்.

‘நந்தினி.. நந்தினி.. நந்தினி..’ என்றே அவனுடைய மனம் கும்மாளமிட்டுக் கொண்டிருக்க, காரை ஸ்டார்ட் செய்து, வீட்டை நோக்கி மிதமான வேகத்தில் செலுத்தினான். அவனுடைய தலைக்கு மேலிருந்த மிரரை சற்றே திருப்பி தன் முகத்தை பார்த்தான். அவனுடைய முகம் முழுவதிலும் ஒரு வித குழப்பம் கொப்பளிப்பதை காண முடிந்தது. ஆனால் அந்த குழப்பத்தினூடே, ஒரு புதுவித சந்தோஷம் ஜிவ்வென்று ஓடுவதையும் அவனால் உணர முடிந்தது..!!

அன்று வீட்டுக்குள் நுழைந்ததுமே, எதிர்ப்பட்ட தன் மனைவியை அவன் பார்த்த பார்வையில் நிறைய வித்தியாசமிருந்தது. அத்தனை நாளைய இறுக்கம் தளர்ந்து ஒரு பரிவும், ஸ்னேஹமும் அந்த பார்வையில் நிறைந்திருந்தது. ஆனால் அவன் மீது கோபம் இன்னும் குறையாமல் இருந்த நந்தினிக்குத்தான், அந்த பார்வையில் இருந்த மாறுதலை கவனிக்க நேரம் இல்லை. கணவன் தன்னையே குறுகுறுவென பார்க்க, இவளோ முகத்தை வெடுக்கென வெட்டிக்கொண்டு நகர்ந்தாள்.

அன்று இரவு.. அவர்களது படுக்கை அறையில்.. இரவு விளக்கின் மங்கலான வெளிச்சத்தில்.. கட்டிலின் விளிம்பில் குப்புறப்படுத்திருந்த அசோக்.. கீழே தரையில்.. களைத்துப் போய் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தன் மனைவியையே.. கண்கொட்டாமல் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான்..!! மந்தமான வெளிச்சத்திலும் பொன்னென ஜொலிக்கும் அவளுடைய அழகை இமைக்க மறந்து ரசித்துக் கொண்டிருந்தான்..!! மனதுக்குள்ளேயே அவளுடன் உரையாடினான்..!!

‘ஹேய்.. நந்தினி.. இன்னைக்கு நெறைய வேலையோ..?? இப்படி அடிச்சுப் போட்ட மாதிரி தூங்குற..?? எனக்கு தூக்கம் போயிடுச்சுடி..!! ரெண்டு வாரமா உன் நெனைப்பாவே இருக்கு..!! நான் உன்னை அவ்வளவு காயப்படுத்தினப்புறமும்.. என் மேல உனக்கு அவ்வளவு காதலா..?? உன் தங்கச்சி அப்படி சொல்றா..?? நெஜமாவா..?? நீ நடந்துக்குறதுலாம் பாத்தா.. என்னால அதை நம்ப முடியலை..!! இருந்தாலும்.. அவ சொன்னது என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.. அது ஏன்னு எனக்கே புரியலை..!! உன்கிட்ட பேசணும் நந்தினி.. மனசு விட்டு நெறைய பேசணும்..!!’

திடீரென விழிப்பு வந்து இமைகளை பிரித்த நந்தினி, கட்டிலின் மேலிருந்து தன் கணவன் கண்ணிமைக்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்ததும், சற்றே ஆச்சரியமுற்றாள். ‘என்ன ஆயிற்று இந்த ஆளுக்கு..?’ என்பது போல அசோக்கையே சில வினாடிகள் குழப்பமாக பார்த்தாள். மனைவி விழித்துக் கொண்டதை அறிந்ததும், அசோக் படக்கென அந்தப்பக்கமாய் புரண்டு படுத்துக் கொண்டான். கொஞ்ச நேரம் எதுவும் புரியாமல் திருதிருவென விழித்த நந்தினி, பின்னர் போர்வையையும் இமைகளையும் இழுத்து போர்த்தி விட்டு தூங்க ஆரம்பித்தாள்.

அடுத்த நாள் காலை..

அசோக் ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். உடைகளை அணிந்து முடித்திருந்தவன், கண்ணாடி முன்பாக நின்றுகொண்டு, அந்தக்கண்ணாடி பிரதிபலித்த தனது பிம்பத்தையே பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அப்போதுதான் நந்தினி அந்த அறைக்குள் நுழைந்தாள். அசோக்கின் குளிர் கண்ணாடியை கையில் எடுத்து வந்திருந்தவள், அதை டேபிள் மீது வைத்துவிட்டு,

“உங்க சன் க்ளாஸ்..” என்று இறுக்கமான குரலில் சொன்னாள்.

“தேங்க்ஸ் டியர்..”

அசோக் திரும்பி குறும்பாக சொன்னான். நீண்ட நாளுக்கப்புறம் அவனுடைய குறும்பு நந்தினிக்கு வித்தியாசமாக தோன்ற, ஒருமுறை கணவனை ஏறிட்டு பார்த்தாள். அவனுடைய கண்களில் தெரிந்த குறும்பின் அர்த்தத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்புறம் அவனுடைய உடை அலங்காரத்தை ஓரிரு வினாடிகள் நோட்டமிட்டவள், குறுகுறுப்புடன் கேட்டாள்.

“என்ன.. இன்னைக்கு ஆபீஸுக்கே ஜீன்ஸ், டி-ஷர்ட்ல போறீங்க..?”

“ஏன்.. போகக்கூடாதா..?”

“புதுப்பழக்கமா இருக்கேன்னு கேட்டேன் சாமீ..!! நீங்க ஜீன்ஸ்ல போங்க.. இல்லனா ஒண்ணுமே போடாம கூட போங்க.. எனக்கு என்ன..?”

வெடுக்கென சொல்லிவிட்டு நந்தினி நகர முயல, அசோக் எட்டி அவளுடைய வலது கையை, தனது இடதுகையால் பற்றினான். அதை எதிர்பாராத நந்தினி, ‘ப்ச்.. கையை விடுங்க..’ என்று வெறுப்பாக சொன்னவாறே, அவளுடைய கையை உதறி அவனுடைய பிடியில் இருந்து மீள முயன்றாள். ஆனால் அவனுடைய பிடியோ மிகவும் வலுவாக இருக்க, அவளால் விலகிக்கொள்ள முடியவில்லை. இயலாமையும் எரிச்சலுமாய் சொன்னாள்.

Comments

Scroll To Top