என் பெயர் மதுபாலா

(Tamil Kama Stories - En Peyar Madhubala)

Raja 2016-04-19 Comments

Ilamjodigal Uravu Kollum Tamil Kama Stories – எனது கண்கள் இப்போது கட்டப்பட்டிருந்தன…
எனது கைகள் காற்றில் உலவியப்படி யாரையோ தேடிக்கொண்டிருந்தன.
“ராஜா!எங்கே இருக்கிற நீ?”

“நான் இங்கே இருக்கிறேன் மது!”-என்று பதில் வந்தது அந்த மழலையிடமிருந்து!!
நீண்ட நேரம் தேடியும் அவன் கிடைக்காததால் தோல்வியை ஒப்பு கொண்டு கண்ணை மூடிய துணியை நீக்கினேன்.
“ஹே!”-என்ற கத்தலோடு என்னை வந்து அணைத்துக் கொண்டான் அவன்.
“சரி…இன்னிக்கு இது போதும்!வீட்டுக்கு போ!அப்பா தேட போறார்!”என்றேன்.
“முடியாது முடியாது!நான் உன் கூட தான் இருப்பேன்!”
“சொன்னா கேட்கணும்!நல்ல பையன் தானே!”-என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டேன்.
“சரி…நாளைக்கு விளையாடலாமா?”
“ம்..சரி!”-அவனை சமாளித்து அவன் வீட்டிற்கு அனுப்பினேன்.
என் பெயர் மதுபாலா.நான் ஒரு மருத்துவர்.இதோ இங்கே என்னோடு விளையாடி கொண்டிருந்தவன் ராஜா.தாயில்லாத குழந்தை!!தந்தையும் பிசினஸ் மேன்!எப்போதும் ஓடியப்படி இருப்பார்.ஆனால் இயன்ற அளவு அவனோடு நேரம் செலவிடுவார்.மனைவி இறந்து 5 வருடமாகியும் மறுமணம் செய்து கொள்ளவில்லை.எல்லோரிடமும் கண்ணியமாகவும்,மரியாதையாகவும் பேசுவார்.

வயதும் முப்பதுக்குள் தான் இருக்கும்..
வசீகர தோற்றம் கொண்டவர் அவர்.இவன் தாய் பாசத்திற்காக ஏங்கி கொண்டிருந்தான்.
என்னால் இயன்றவரை அவனிடம் நெருக்கத்தை காட்டினேன்.
அவன் வீட்டிற்குள் நுழைந்தவன் நேராக ஆதித்யாவை அணைத்து முத்தமிட்டான்.
என்னை காண்பித்து ஏதோ கூறினான்.அவர் நிமிர்ந்து என்னை பார்த்து புன்னகைத்தார்.நானும் பதிலுக்கு புன்னகைத்து உள்ளே சென்றேன்.
“வந்துட்டா பார்!ஏன்டி எப்போ பார்த்தாலும் அந்த பையன் கூடவே இருக்க?அவனுக்காக அப்படி உருகுற?”
“சித்தி!அதனால,உனக்கு என்ன?”
“எனக்கு என்னவாம்?தாயே!இப்படி நீ அவனுக்காக உருகுனா,ஊர் உலகம் தப்பா பேசும்ல!அப்பறம் என் பொண்ணு வாழ்க்கை என்ன ஆகுறது?”
-எனக்கு சுரீரென்று கோபம் வந்தது.
பல்லை கடித்து கொண்டு என் அறைக்கு சென்றேன்.
அப்போது என் எதிர்பட்டாள் ஜானகி.என் தங்கை.வசைப்பாடும் சித்தியின் மகள்.
“என்னக்கா?அம்மா ஆரம்பிச்சிட்டாளா?”
“ம்..”
“விடுக்கா!அம்மா எப்போவும் இப்படி தான்!”

“………….”
“நீ போய் ரெஸ்ட் எடு!”என்று அவள் சென்றுவிட்டாள்.வீட்டில் எனகிருக்கும் ஒரே ஆறுதல் ஜானகி தான்.அப்பாவும் சமீபத்தில் காலமாகி போனார்.
பெருமூச்சு விட்டு என் அறைக்கு வந்தேன்.பால்கனியில் நின்று நிலவை ரசித்து கொண்டிருந்தேன்.
நீண்ட நேரமாய் எதை எதையோ நினைத்து கொண்டிருந்தேன்.
எதேர்ச்சையாக பக்கத்து வீட்டில் கவனம் பதிந்தது.
ஆதித்யா ராஜாவை தோளில் சுமந்து கொண்டு அவனை உறங்க வைத்து கொண்டிருந்தார்.அந்த பிஞ்சுமனம் தந்தையின் அரவணைப்பில் பாதுகாப்பாக உறங்கி கொண்டிருந்தது.
மனைவி இறந்ததும் ஒரு ஆணுக்கு தான் எவ்வளவு சோதனை??ஏற்கனவே அவர் மேல் இருந்த அன்பு அதிகமானது.
அமைதியாக உள்ளே சென்றுவிட்டேன்.
அப்போது நான் உணரவில்லை நான் அவரை காதலிக்க ஆரம்பித்ததை!!!
சில நாட்கள் ஓடின…
ஒருநாள் ராஜா என்னிடம் அழுதப்படி ஓடி வந்தான்.
“என்னப்பா?என்னாச்சு கண்ணா?”
“எங்க வீட்டுக்கு ஒரு ஆன்ட்டி வந்திருக்காங்கல்ல மது!அவங்க என்னை அடிச்சிட்டாங்க!”-எனக்கு தூக்கிவாரி போட்டது.
அவள் பெயர் சாதனா!!ஆதித்யாவின் மாமன் மகள்.அவன் மனதை மாற்றி அவரை திருமணம் செய்யும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறாள்.

“எதுக்கு அடிச்சாங்க?”
“அப்பா அவங்களை கோபமா திட்டினாங்க மது!அவங்க என்னால தான் அப்பா கோபமா இருக்காரு!அவரை விட்டு போன்னு சொல்லி அடிச்சிட்டாங்க மது!”
-என்று அவன் கையை காண்பித்தான்.சிவந்து போயிருந்தது.
ராட்ஸஸி!எப்படி அடித்ததிருக்கிறாள்!!என்று மனதில் கருவினேன்.
“சரி…கண்ணா!அழாதே!நான் இருக்கிறேன்!”-அவன் என் மேல் சாய்ந்துக்கொண்டு விசும்பினான்.
“அம்மா இருந்திருந்தா என்னை அடிக்க விட்டிருக்க மாட்டாங்க!”-என்றான்.எனக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தன.என்ன தான தந்தை இருந்தாலும்,ஒரு குழந்தைக்கு ஒரு தாயின் அன்பு எவ்வளவு அவசியம்!!
“மது!”
“ம்…”
“உன்கிட்ட ஒண்ணு கேட்கட்டா?”
“என்னப்பா?”
“நீ எனக்கு அம்மாவா வரீயா மது?”-என்றான் அந்த மழலை.திகைத்து போனேன் நான்.
ஆடிப்போய் அவனை பார்க்க,சற்று தூரத்தில்,
“ராஜா!”என்ற கோபமான குரல் ஒலித்தது.அவர் தான்!!அந்த கோபத்தில் உள்ளே வந்தவர் ராஜாவின் கன்னத்தில் அறைந்தார்.

நான் அதிர்ந்து போனேன்.
“என்ன பேச்சு இதெல்லாம்??பைத்தியமா நீ?”-என்று அவனை திட்ட ஆரம்பித்தார்.அவன் பயங்கரமாக அழ,எனக்குள் கோபம் சுரந்தது.
“போதும் நிறுத்துங்க சார்!”-என்று அவனை இழுத்து என்னோடு அணைத்து கொண்டேன்.
“எதுக்கு குழந்தையை இப்படி அடிக்கிறீங்க?”-அவர் பேச்சிழந்து போனார்.
“அவனுக்கு எவ்வளவு வருத்தம் இருந்தா இப்படி கேட்பான்!அதை யோசிக்க மாட்டிங்களா?எப்போ பார்த்தாலும் இருக்கிற கோபத்தை எல்லாம் சின்ன குழந்தை மேலே காட்டிட்டு!”-ஒரு ஆறுதல் கிடைத்ததால் அவன் என்னை அணைத்து கொண்டான்.
சில நொடிகள் கனத்த மௌனம்!!
“ராஜா!வீட்டுக்கு வா!”-என்று அமைதியாக அழைத்தார்.
“நான் வரமாட்டேன்!நான் அம்மா கூட தான் இருப்பேன்!”-சட்டென என்னை தாயாக அங்கீகரித்தான் அவன்.இருவரும் திடுக்கிட்டு நின்றோம்!!என்னிடம் இருந்து மெதுவாக அவனை பிரித்து அவனுக்காய் மண்டியிட்டார் ஆதித்யா.

“இதோப்பாரு கண்ணா!!அப்படி எல்லாம் சொல்ல கூடாது!உன் அம்மா இவங்க இல்லைடா!”-உண்மையில் அவர் குரல் அடைத்தது.
ராஜா அவர் மேல் சாய்ந்து கொண்டான்.
“எனக்கு அம்மா வேணும்பா!”-என்று அழ ஆரம்பித்தான்.
எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
அந்த பாச போராட்டத்தை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வருதுவது என்று தெரியவில்லை.
“ராஜா!இங்கே வா!”-நான் அழைத்ததும் ஓடிவந்து என்னை அணைத்து கொண்டான் அவன்.
“நீங்க போங்க சார்!கொஞ்ச நேரம் என் கூடவே இருக்கட்டும்!”-அவர் அமைதியாக சென்றுவிட்டார்.
அன்னு முழுதும் அவன் என்னோடு இருந்தான்.
“மது!”
“என்ன கண்ணா?”

“நான் உன்னை அம்மான்னு கூப்பிடட்டா?”-கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான் அவன்.
என்ன பதில் சொல்வது?
“இல்லை ராஜா!சாதனா ஆன்ட்டியை தான் நீ அப்படி கூப்பிடணும்!”
“போ!”-என்று என் கையை தட்டிவிட்டான்.
“நான் அவங்களை அப்படி கூப்பிட மாட்டேன்!”
“ராஜா அடம் பிடிக்க கூடாது!”
“அப்பா சொல்லிருக்காரு!நான் எது கேட்டாலும் அம்மா செய்வாங்கலாம்!அப்பா மட்டும் சாதனா ஆன்ட்டியை கல்யாணம் பண்ணா நான் அம்மாக்கிட்ட என்னை கூட்டிட்டு போயிட சொல்வேன்!”-நான் அதிர்ந்து போனேன்.எவ்வளவு வேதனையில் கூறுகிறான் இவன்??
நான் அவனை என் மார்போடு அணைத்து கொண்டேன்.
என்னிடம் பேச்சே இல்லை…

ஒருவழியாக அவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன்.
நாட்கள் உருண்டன…
நாளாக நாளாக எனக்கு ராஜாவின் வேண்டுதலை நிறைவேற்றவே தோன்றியது.
அதற்கேற்ப ஆதித்யாவின் தாயும் ராஜாவின் வேண்டுதலை ஏற்று கொண்டார்.எவ்வளவு போராடியும் அவர் ஏற்கவில்லை.
பின் போராடி அவரை சம்மதிக்க வைத்தனர்.
எங்கள் திருமணமும் நடந்தது.
அன்றிரவு…
நான் ராஜாவுடன் விளையாடி கொண்டிருந்தேன்.எங்களின் முதலிரவை குறித்து நான் கவலை கொள்ளவில்லை.அவன் என்னை அம்மா என்றே அழைக்க ஆரம்பித்திருந்தான்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தேன்.ஒரு ஆச்சரியத்தோடு என்னையே பார்த்து கொண்டிருந்தார் அவர்.
“அம்மா சூப்பரா கதை சொல்றாங்கப்பா!நீயும் வா!”-என்று அவரையும் அழைத்தான் அவன்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம்.

நான் தலைகுனிந்து கொண்டேன்.
அவர் தயங்கியப்படி உள்ளே வந்தார்.
இன்னிக்கு நான் உங்க கூட தான் தூங்க போறேன்!!என்று எங்களுக்கு மத்தியில் படுத்து கொண்டான் அவன்.
“அம்மா!நீ கதை சொல்லு!நான் தூங்கறேன்!”-என்று என் பக்கம் திரும்பினான் அவன்.
நான் ஒரு கதையை ஆரம்பித்து,சிறிது நேரத்தில் உறங்கி போனான் அவன்.அவன் மட்டுமில்லை அவரும் தான்!!!நான் புன்னகைத்தப்படி விளக்கை அணைத்துவிட்டு இருவருக்கும் போர்த்திவிட்டு வந்து படுத்து கொண்டேன்.
நாங்கள் இருவரும் நெருக்கமாக சிறிது அவகாசம் தேவைப்பட்டது.
ஒருநாள்…
கிச்சனில் ஏதோ எடுக்க சேரில் ஏறியவள் தடுக்கி விழ போனேன்.
சட்டென என்னை தாங்கியது அவரது கரம்.

அவரிடமிருந்து கிடைத்த முதல் ஸ்பரிசம்!!மூச்சை இழுத்து பிடித்து கொண்டேன்.எனது கைகள் அவர் தோளை வளைத்திருக்க,அவரோ என் மார்புக்கு அருகிலும்,இடையிலும் தாங்கி இருந்தார்.
அவரது பார்வையில் இருந்த புதிய மாறுதலை பார்க்க இயலாமல் தலை குனிந்தேன்.மிக நெருக்கமாக இருந்தோம்.பின் என்ன நினைத்தாரோ என்னை இறக்கிவிட்டார்.
நான் சிலையாக திரும்பி நின்றிருநதேன்.
திடீரென அவரது கை என் முதுகில் ஊறியது.திடுக்கிட்டேன்.அப்போது தான் உணர்ந்தேன்.என் ப்ளவுஸின் ஊக்கு ஒன்று அவிழ்ந்திருந்தது.அவர் அதை போட்டுவிட்டார்.
எனக்கு உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது!!கண்களை மூடி கொண்டேன்.அவர் அமைதியாக அங்கிருந்த டீ கப்பை எடுத்து கொண்டு நகர்ந்தார்.

எனக்கு முகமெல்லாம் சிவந்திருந்தது!!அவர் காதலை நான் அடைந்து கொண்டிருந்தேன் என்னும் உணர்வே எனக்குள் கிளர்ச்சி ஊட்டியது.
அன்றிலிருந்து ஒரு மாதம் ஓடி இருக்கும்.ராஜா பள்ளிக்கு சென்றிருந்தான்.நல்ல மழை வேறு!!
திடீரென காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.நான் சென்று கதவை திறந்தேன்.
ஆதித்யா சோர்ந்து போய் நின்றிருந்தார்.
“என்னாச்சுங்க?”
“உடம்பு சரியில்லை..”என்று சோபாவில் அமர்ந்தார்.
நான் தயங்கியப்படி அவர் நெற்றியை தொட்டு பார்த்தேன்.

Comments

Scroll To Top