சாலையோரப் பூக்கள் – 32

(Tamil Hot Sex Stories - Saalaiorapookal 32)

Raja 2016-02-13 Comments

This story is part of a series:

Bathroomil Sex Pannum Tamil Hot Sex Stories – இரவு பத்து மணி…
லாவண்யா வீட்டில் மூவரும் சீரியலில் மூழ்கியிருந்த போது.. கதவு தட்டப்பட்டது.
”யார்ரி.. இந்த நேரத்துல..?” என்றாள் அம்மா.

”ம்.. எங்கப்பனா இருக்கும்..” எனக் கிண்டலாகச் சிரித்தாள் நிம்மி.

”செருப்புல போடுவேன்..! இப்படி பேசினீன்னா..” என அம்மா கடிந்து கொண்டாள்.

”எதுல வேணா..போடு..! இப்ப போய் யாருனு பாரு..” எனச் சொன்னாள் லாவண்யா.

அம்மா படுக்கையை விட்டு எழ..
நிம்மி.. ”ஏன்டி ஒரு வேள.. உன் புருஷனா இருக்குமோ..?” என லாவண்யாவைக் கேட்டாள்.

”அது யார்ரீ.. என் புருஷன்..?”

”நந்தாதான்..” எனச் சிரித்திள்.

”அடங்…குடி..” என்றாள் லாவண்யா ”அவன் எதுக்கு இந்த நேரத்துல வரப்போறான்..?”

”ஹ்ம்ம்.. அதுவும் சரிதான்..! இந்த நேரத்துல வந்து அவன் என்ன பண்ணப் போறான்..? நாங்கள்ளாம் இருக்கோமே..??”

”ச்சீ.. அடங்கு..! ஆனாலும் உனக்கு ரொம்பத்தான்டி ஏத்தம்..!” என லாவண்யா சொல்ல…

முந்தானையை சரியாகப் போட்டுக்கொண்டு..
”அவளுக்கு கொஞ்ச நஞ்ச ஏத்தமில்லே.. செரியான ஏத்தம் புடிச்சிருக்கு..! இனி எங்க போய் சீரிரழிய போறாளோ..?” என்றவாறு நடந்து போய் கதவைத் திறந்தாள்.

சுவற்றில் கை வைத்து தாங்கிப் பிடித்துக் கொண்டு.. நின்றிருந்தது.. நந்தாதான்.
”நீயா..ப்பா..?” எனக் கேட்டாள்.

”யாருமா..?”சத்தமாக தலையைத் திருப்பி பார்த்தவாறு கேட்டாள் நிம்மி.

”நந்தான்டி..! உள்ள வாப்பா..!”

”ஹ்ஹா..” எனச் சிரித்தாள் நிம்மி. அக்காளைப் பார்த்து..”ஏய் உன் புருஷன்தான்டி.. போ.. எந்திரிச்சு..” என்றாள்.

தடாலென எழுந்து போனாள் லாவண்யா.
‘இந்த நேரத்தில் இவன் எதுக்கு.?’

”உள்ள வாப்பா..” என மீண்டும் அவள் அம்மா அழைக்க…

”ல்ழா.. ழாவன்ழா.. இழ்ழஙகழா..?” என தள்ளாடியவாறு நின்றுகொண்டு கேட்டான் நந்தா.
சுவற்றில் இருந்த கையை எடுத்தால் அவன் விழுந்து விடுவான் போலிருந்தது..!

லாவண்யா முன்னால் போனாள்.
”வா நந்தா.. என்ன இந்த நேரத்துல..?”

” ழேன் ழாலன்யா.. ழான்..ழலக்கூழாதா..?” என அவன் குளற..

நெற்றியில் தட்டிக்கொண்டாள் லாவண்யா.
”ஐயோக் கடவுளே.. நிக்கவும் முடியல.. பேசவும் முடியலயா..? உள்ள வா..” என அவன் கையைப் பிடித்தாள்.

அவள் தோளைப் பிடித்துக் கொண்டு தள்ளாடியவாறு உள்ளே வந்தான். அவனைத் தாங்கிக்கூட்டிப்போய் சேரில் உட்கார வைத்தாள்.

”என்ன ஓவரா நந்து சார்..?” எனக் கிண்டலாகச் சிரித்தாள் நிம்மி.

அவன் நிம்மி பக்கம் திரும்பக்கூட இல்லை.
”ழாவன்லா.. னான்..உன்ன பாக்கதான் வந்தேன்..” என்றான்.

”ம்.. ம்ம்.. பாரு.. பாரு..! நல்லா பாத்துக்கோ.. அவதான் உன் ஆளு.. லாவன்லா..”எனச் சிரித்தாள் நிம்மி.

” ஏய்.. பேசாம இர்ரீ.. எருமை..” என அவளைத் திட்டினாள் லாவண்யா ”சாப்பிட்டியா நந்தா..?”

”ஷாப்பாடா..?” அப்போதுதான் உணவு பற்றின எண்ணம் தோண்றியது போல.. முகத்தில் தட்டி யோசித்தான்.

நிம்மி.. ”அடிப்பாவி.. சாப்பாடு கூட மறந்து போச்சா..?” எனச் சொல்ல.. லாவண்யா.. அம்மா எல்லோரும் சிரித்தார்கள்.

”ஆ.. ழிம்மி.. நீ இருழ்க்கியா..? ந்நா.. ஷாப்படனானூ.. தெரிழ்ழ..ழிம்மி..”

”நான் ழிம்மி இல்ல.. நிம்மி..! சாப்பிட்டத கூடவ மறந்துட்ட..?”

” இரு…இரு..ழிம்மி.. ஓசிச்சு…சொல்றேன். .” என அவன் யோசிக்க..

”கிழிஞ்சுது போ..” என்றாள் அம்மா.
லாவண்யா அவன் தோளில் கை வைத்தாள்.
”சரி.. இங்க சாப்பிடு. .”

”ம்கூம்.. ழேண்ணாம்..” மறுத்தான்.

”கொஞ்சம் சாப்பிடு நந்தா..! ஏய் போட்டு குடுறீ..!” என்றாள் அம்மா.

அவன் கையைத் தூக்கி ஆட்டி மறுக்க… அப்போதுதான் அவன் கையைக் கவனித்தாள் லாவண்யா. அவன் வலது கையில் அடிபட்டு ரத்தம் உறைந்திருந்தது. ஆனால் பெரிய காயம் இல்லை. !
”என்ன நந்தா.. இது கைல ரத்தம்..?”

அவன் பதில் சொல்லாமல் திடுமென எழுந்தான்.
”நான் போறென்..”

”ஏய் இரு.. சாப்பிட்டு போ..”

”ம்கூம்.. நா போறென்.. நீ… தண்ணி குடு..” அவன் சேரைப் பிடித்து நிற்க…
அவசரமாகப் போய் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் லாவண்யா.

அதை வாங்கிக்குடிக்க.. அவன் வாயைத் திறந்த போது..’பொலேர்.’ என வாந்தி எடுத்தான்.
அது அவள் மீதும் தெரித்தது. சாராய நாற்றம் குடலைப் புரட்டியது.

”அவனால இனி நடக்க முடியாது.. அவன இங்கயே படுக்க வெய்.. தூங்கி எந்திரிச்சு காலைல போகட்டும்..” என்றாள் அம்மா.

அவனைக் கைந்தாங்கலாக பாத்ரூம் அழைத்துப் போனாள் லாவண்யா. அவன் பாத்ரூமிலும் வாந்தி எடுத்தான்.
அவன் சட்டயைக் கழற்றி.. அவன் உடம்பைக் கழுவி விட்டாள். அவள் உடம்பையும் கழுவிக்கொண்டு அவள் வெளியே போக…
நந்தா எடுத்து வாந்தியைசுத்தம் செய்து கொண்டிருந்தாள் அம்மா.
ஓடிப்போய் அம்மாவைத் தடுத்தாள் லாவண்யா.
”ஐயோ.. நீ போம்மா.. இதெல்லாம் நான் பாத்துக்கறேன்..”

”உடுரீ.. நம்ம பையன்தான..”என்றாள் அம்மா.

”அம்மா.. நீ விட்று.. நான் சுத்தம் பண்ணிக்கறேன்.. நீ போ..”

”நீ போய் அவனை கவனிடி..! உன்ற நைட்டியும் நாறுது.. அத கழடிட்டு வேற நைட்டி எடுத்து போடு.. அவனை கூட்டிட்டு வந்து படுக்க வை..!” என அம்மாவே சுத்தம் செய்தாள்.

பாத்ரூமிலிருந்து நந்தாவை கைத்தாங்கலாகவே அழைத்து வந்தாள் லாவண்யா.
வாந்தி எடுத்ததில் அவனுக்கு கோஞ்சம் நிதானம் வந்திருந்தது.
நிம்மியைப் பார்த்து..
”ஸாரி நிம்மி..” என்றான்.

”அங்க நீ எடுத்த அசிங்கத்த க்ளீன் பண்றது யாருனு பாரு..? எல்லாம் உனக்கு இவ குடுக்கற எடம்..! இப்ப பேசாம படுத்து தூங்கு.. காலைல தெளிவா இருப்பல்ல.. அப்ப பேசிக்கறேன்.. உன்ன..”என்றாள் நிம்மி.

உள்ளறைக்குள் அவனுக்கு ஒரு பாயை விரித்து விட்டாள் லாவண்யா
”படுத்துக்கோ நந்தா..”

அவன் மீண்டும் ”ஸாரி..” கேட்டுக்கொண்டு..படுத்த சில நிமிடங்களில் தூங்கிப்போனான்..!

லாவண்யா அம்மாவிடம் போனாள்.
”என்மேல கோபமாம்மா..?”

”பேர நாறடிச்சுக்காம பாத்துக்கடி..! அவன உன் வழிக்கு கொண்டு வந்து கல்யாணம் பண்ணிக்க பாரு..! அதான் பொழைக்கற புள்ளைக்கு அழகு..!!” என்றாள் அம்மா.

அமைதியாக தங்கையைப் பார்த்தாள் லாவண்யா.
நிம்மி வாயே திறக்கவில்லை.
”சரிம்மா…” என்றாள் ”இனி நான் இவன்கூடத்தான்மா..”

”போய் படு.. போ..!!” அம்மா இயல்பாகச் சொல்ல…
மனதுக்குள் அம்மாவின் காலைத் தொட்டு வணங்கினாள் லாவண்யா…!!

☉ ☉ ☉

அடுத்த சில மாதங்களில் என் வாழ்க்கைப் பாதை மாறத் தொடங்கியது.
துகிலன் மூலமாக.. அவனது நண்பர்கள் எனக்கு அறிமாகமாகினர். அவனைப் போலவே.. அவனது நட்பு வட்டமும்.. என்னை வெகுவாகக் கவர்ந்தது..!
அவர்கள் எனக்கும் நண்பர்களானார்கள். தினமும் போனில் பேசிக்கொள்வோம்..!

அந்த நட்பு வட்டத்துக்கு என்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்துவிட.. அவர்கள் மத்தியில் நான் ஒரு காதல் தேவதையாக மாறினேன்.
துகிலன் மட்டுமல்லாது அவனது நண்பர்களுடனும் நான் சினிமா போகத் தொடங்கினேன்.
அதை துகிலனும் அங்கீகரித்தான்.
அதன்பின்.. அவனது நண்பர்களுக்கும் என் மீது ஆசை வந்தது. அதை நான் துகிலன் பொருப்பிலேயே விட்டேன்.!

அடுத்த சில நாளில்.. நண்பர்கள் புடைசூழ நான்.. அவன்களுடன் இரண்டு நாள் ஊட்டி பயணமானேன். முதுமலை சென்று.. ஒரு காட்டேஜில் ரூம் போட்டு.. எல்லோரும் மஜாவாக இருந்தோம்..!
காதல் என்கிற எல்லையைக் கடந்து நாங்கள் காமக்கடலில் மூழ்கினோம்..!
அதன்பின்.. அவன்கள் மூலமாக என் நட்பு வட்டம் பெருக… அவன்கள் மூலமாக எனக்கு நிறைய வருமானம் வரத்தொடங்கியது..!!

இந்த பயணம் அடிக்கடி நிகழ.. நான் வேலைக்கு போவதை நிறுத்தினேன்.
நான் ஸ்போக்கன் இங்கிலீஸ் கற்றுக்கொண்டேன். என் நடை.. உடை.. பாவணை.. ஹேர்ஸ்டைல் எல்லாவற்றையும் மாற்றினேன்.
அடிக்கடி பியூட்டி பார்லர் போனேன்..!!
என் வீட்டில் எனக்கு பெரிய எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. என் அம்மாவுக்கு தேவை பணம்..! அது ஒன்று அவள் வாயை அடைத்தது..! என் வாழ்க்கை உல்லாச வானில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது..!!

☉ ☉ ☉

ஒரு முற்பகல் நேரத்தில்.. விழிமலருக்கு போன் செய்துவிட்டு.. அவளைப் பார்க்கப் போனாள் லாவண்யா.
தூக்கக்கலக்கத்தில் வந்து கதவைத் திறந்தாள் விழிமலர்.
வீட்டில் அவள் மட்டும்தான் இருந்தாள்.
”ஹாய்.. லா.. வாடி..” எனச் சிரித்து வரவேற்றாள்.

”ஹாய்..! எப்படிரீ இருக்க..?” லாவண்யா.

”ஃபைன்.. ரீ..! நீ..?” அவளது நடை உடை பாவணை.. மாற்றத்துக்குப் பிறகு.. விழிமலரை இன்றுதான் பார்க்கிறாள் லாவண்யா.

அவளது ஸ்டைல் மட்டும் அல்ல.. முகத்தோற்றமும்.. உடம்பும் கூட மாறிப்போயிருந்தது. சராசரிப் பெண்ணாக இருந்த அவள் இப்போது ஒரு நவநாகரீகப் பெண்ணாக மாறியிருப்பது..
அவளிடம் இருந்த ஒரு நெருக்கமான உணர்வை ஒதுக்கி வைத்தது.!

Comments

Scroll To Top