ஆண்மை தவறேல் – 28

(Sex Stories In Tamil - Aanmai Thavarael 38)

Raja 2013-12-10 Comments

This story is part of a series:

Sex Stories In Tamil – “எனக்கு கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்குது நந்தினி.. நான் மாடிக்கு போறேன்.. சாப்பிட்டு நீ போய் தூங்கு..” அசோக் நந்தினியை ஏறிடாமல், படிக்கட்டுக்கு நடந்து கொண்டே சொன்னான்.

“ம்ம்.. சரிங்க..!! ரொம்ப நேரம் முழிச்சிருக்காதீங்க.. சீக்கிரம் வந்து படுங்க..!!” நந்தினி வாய்க்குள் இருந்த சாதத்தை அவசரமாய் விழுங்கிவிட்டு சொன்னாள்.

சில நேரங்களில் அசோக் இந்த மாதிரி மாடியில் இருக்கும் அறைக்கு சென்று அலுவலக வேலைகளை கவனிப்பது இயல்புதான். ஆனால் இன்று நந்தினியின் அழகு அளித்த இம்சையில் இருந்து தப்பிக்கவே அவ்வாறு பொய் சொல்லிவிட்டு வந்தான். பார்ப்பதற்கு அலுவலக வேலைகள் என்று எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் அதில் கவனம் செலுத்தக் கூடிய அளவுக்கு அவனுடைய மனதிலும் அமைதியில்லை. அதனால் அந்த அறைக்கு செல்லாமல் மேலும் ஒரு மாடி ஏறி, மொட்டை மாடிக்கு சென்றான்.

மொட்டை மாடியில் பிரவேசித்ததுமே குளிர் காற்று வந்து அவனை அப்படியே அள்ளிக் கொண்டது. ஜிலுஜிலுவென வீசிய தென்றல் அமைதியில்லாத அவனுடைய மனதுக்கு ஆறுதலாக இருந்தது. ஆங்காகாங்கே நின்றிருந்த போஸ்டுகளின் உச்சியில், கவிழ்ந்திருந்த மஞ்சள் நிற விளக்குகள், மொட்டை மாடியை தாராளமாகவே வெளிச்சத்தில் நிறைத்திருந்தன. ஒரு நான்கு போஸ்டுகளில் நான்கு முனைகளும் கட்டப்பட்ட, கயிறாலான அந்த வலை ஊஞ்சல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.

அந்த ஊஞ்சலை கடந்து, அசோக் மொட்டை மாடியின் ஒரு மூலைக்கு நடந்து சென்றான். கைப்பிடி சுவரை பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வெளிப்புறம் இந்த உலகத்தின் மீது பார்வையை வீசினான். எரிவதும், திடீரென அணைவதுமாய் இருந்த தெருவிளக்குகள்.. இருளான சாலையில் அவ்வப்போது வெளிச்சத்துடன் பறக்கும் வாகனங்கள்.. அந்த வாகனங்களை குரைத்தபடியே விரட்டிப் பார்க்கும் நாலைந்து நாய்கள்.. அந்த நாய்களை கல்லெறிந்து விரட்டும் பக்கத்து வீட்டு வாட்ச்மேன்..!!

எத்தனையோ முறை இந்தமாதிரி அவன் வந்து மொட்டை மாடியில் நின்றிருக்கிறான். ஆனால் இன்று இந்த சூழ்நிலை மிகவும் இதமாக தோன்றியது அவனுக்கு..!! உலகத்துக்கு கருப்பு கவசம் போட்ட மாதிரி இருண்ட வானம்.. அங்கங்கே பொத்தல் விழுந்தாற்போல மினுக்கும் நட்சத்திரங்கள்.. அந்த அழகுக்கு சிகரம் வைத்த மாதிரி பால்நிறத்தில் வட்ட நிலா.. அந்த நிலாவை அவ்வப்போது திரள்திரளாய் கடந்து செல்லும் வெண்மேகங்கள்.. கருப்பு வானத்தை கிழித்தவாறு மேலேறும் விமானம் ஒன்று.. காற்றில் மிதந்து வரும் தூரத்து கடலோசை.. ரம்யமாக இருந்தது அந்த சூழ்நிலை..!! அசோக்கின் மனதில் இருந்த படபடப்பை கொஞ்சம் கொஞ்சமாய் அடக்கி, அமைதியாக்கியது அந்த சூழ்நிலை..!!

ஆனால் அந்த அமைதியை குழைக்க, நந்தினி அங்கு வந்து சேர்வாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு ஐந்து நிமிடங்களில் எல்லாம் நந்தினி படியேறி மொட்டை மாடிக்கு வந்தாள். படிக்கட்டில் இருந்து அவள் வெளிப்பட்டதுமே, சப்தம் கேட்டு திரும்பிய அசோக் அவளை கவனித்துவிட்டான். வந்ததில் இருந்தே அவளை நேருக்கு நேர் பார்க்க தயங்கியவன், இப்போது மனம் அமைதியான பிறகுதான் அவளை தயக்கமில்லாமல் கவனமாக பார்த்தான்.

b2

கையில் ஒரு கண்ணாடி கிண்ணத்துடன் நந்தினி நடந்து வந்து கொண்டிருந்தாள். அணிந்திருந்த கருநீல நிற புடவை அவளுடைய வெளுத்த மேனிக்கு எடுப்பாக இருந்தது. அந்த புடவையை லோ ஹிப்பாக அவள் சுற்றியிருக்க, அவளது செழுமையான இடுப்பு நெளிவு, செக்ஸியாக காட்சியளித்தது. கூந்தலை பின்னாமல் காற்றுடன் கதைபேச விட்டிருந்தாள். மஞ்சள் விளக்கின் வெளிச்சத்தில் அவளுடைய பால்நிலா முகம் தூரத்திலேயே பிரகாசித்தது. அவளுடைய ஈர உதடுகள் இப்போது புன்னகையையும் சேர்த்து பூசியிருந்தன. அழகே வடிவெடுத்து அசைந்து வருவது போல.. நந்தினி அன்னநடை நடந்து அசோக்கை நெருங்கினாள். அவள் நெருங்க நெருங்கவே.. அசோக்கிற்கு அவனுடைய இதயம் படபடப்பது மாதிரி ஒரு உணர்வு..!!

“என்னங்க.. இங்க நின்னுட்டு இருக்கீங்க..? ஆபீஸ் வேலை இருக்குன்னு சொன்னீங்க.. நான் உங்களை அந்த ரூம்ல போய் தேடிட்டு வர்றேன்..!!”

“சு..சும்மாதான்.. வேலை பாக்க மூடு இல்ல..!! ஆமா.. என்ன இது கைல..??”

“குலோப் ஜாமூன்..!! இன்னைக்கு நானே பண்ணினேன்.. இதை உங்களுக்கு சாப்பிட கொடுக்கலாம்னுதான் வந்தேன்..!!”

“என்ன.. திடீர்னு க்ளோப் ஜாமூன்லாம்..??”

“ஒண்ணுல்ல.. உங்களுக்கு க்ளோப் ஜாமூன் புடிக்கும்னு கௌரம்மா நேத்து சொல்லிட்டு இருந்தாங்க.. உங்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தலாம்னு தோணுச்சு..!! அதான் அம்மாகிட்ட ரெஸிப்பி கேட்டு பண்ணி பார்த்தேன்.. நல்லா வந்திருக்கு.. சாப்பிட்டு பாருங்க..!!” நந்தினி கிண்ணத்தை அவனிடம் நீட்டினாள்.

“இல்ல நந்தினி.. எனக்கு வேணாம்.. நீ சாப்பிடு..” அசோக் அவ்வாறு வெறுமையாக சொன்னதும் நந்தினியின் முகம் லேசாக வாடிப்போனது.

“ஏங்க.. உங்களுக்கு பிடிக்கும்னு ஆசையா பண்ணினேன்..”

“பிடிக்கும் நந்தினி.. இப்போ வேணாம்..!!”

“ஏன்..??”

“இப்போத்தான வயிறு ஃபுல்லா சாப்பிட்டேன்..”

“ஓ.. அவ்ளோதானா..?? சரி.. கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுங்க..!!”

என்றவள் அந்த கிண்ணத்தை கைப்பிடி சுவர் மீதே வைத்தாள். கைகள் ரெண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, அந்த சுவற்றிலேயே சாய்ந்து நின்றுகொண்டாள். அசோக்கும் இப்போது திரும்பி சுவற்றில் சாய்ந்து கொண்டான். கைகளை கட்டிக்கொண்டான். ஓரக்கண்ணால் தன் மனைவியை பார்த்தான். அவளோ தூரமாக வளர்ந்திருந்த ஒரு உயரமான கட்டிடத்தில் பார்வையை வீசியிருந்தாள்.

அவர்களுக்குள் நிலவிய சிறு நேர அமைதியை, திடீரென சிலுசிலுவென்று வீசிய காற்று வந்து குலைத்தது. காற்றுக்கு சிலிர்த்துக் கொண்டே நந்தினி சொன்னாள்.

“ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆ.. காத்து செமையா அடிக்குதுல..? உள்ள அப்படி வேகுது.. இங்க என்னடான்னா.. ஜில்லுனு காத்து.. சூப்பரா இருக்கு..”

“ம்ம்.. ஆமாம்..”

“இப்படியே இங்கயே நின்னுட்டு இருக்கலாம் போல இருக்கு..!! இருட்டான இந்த இயற்கையை ரசிச்சுக்கிட்டு.. அந்த ஊஞ்சல்ல சொகமா ஆடிக்கிட்டு.. மேல இருக்குற நிலா வெளிச்சத்தை ரசிச்சுக்கிட்டு..!!”

“ம்ம்ம்..” அசோக் அமைதியாக புன்னகைத்தான்.

“ஆங்.. உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்..!! வெளிச்சம்னதும்தான் ஞாபகத்துக்கு வருது..” நந்தினி திடீரென ஞாபகம் வந்தவளாய் சொன்னாள்.

“என்ன..?”

“உங்க செல்ஃப்ல ஒரு பெயிண்டிங் பார்த்தேன்.. ஏது அது..?”

“ஓ.. அதுவா..?? அது ஒரு கிஃப்டா வந்தது..!!”

“ஓஹோ..?? அதை ஏன் அங்க போட்டு வச்சிருக்கீங்க..?”

“ஏன்..?”

“இல்ல.. பெயிண்டிங் ரொம்ப அழகா இருந்தது.. வீட்டுல எங்கயாவது மாட்டி வைக்கலாம்ல..? நல்லா இருக்கும்ல..?”

“ஓ.. அவ்வளவு புடிச்சிருக்கா அந்த பெயிண்டிங்கை..?”

“ரொம்ப பிடிச்சிருந்தது..!! கௌரம்மாகிட்ட சொல்லி வச்சுட்டேன்.. நாளைக்கு எங்கயாவது ஆணியடிச்சு அந்த பெயிண்டிங்கை மாட்டிட்டுத்தான் மறுவேலை..!!”

“ம்ம்ம்ம்.. அந்த பெயிண்டிங்கை வரைஞ்சது யார் தெரியுமா..?”

“யாரு..?”

“நம்ம காலேஜ்ல புருஷோத்தமன்னு ஒருத்தன் படிச்சான்.. ஞாபகம் இருக்கா..?”

“புருஷோத்தமனா..??” ஒரு சில வினாடிகள் நெற்றியை சொறிந்த நந்தினி, அப்புறம் ஞாபகம் வந்தவளாய்,

“ஆங்.. காலேஜ் ஸ்ட்ரைக் அப்போ.. மெக்கானிக்கல் எச்.ஓ.டி மண்டையை உடைச்சானே.. அவந்தான..??”

“ஹாஹா.. அவனேதான்.. ஹாஸ்டல்ல அவன்தான் என் ரூம் மேட்.. உனக்கு தெரியுமா..?”

“ம்ஹூம்.. தெரியாது..!!”

“ம்ம்.. ரொம்ப நாளுக்கப்புறம் அவனை இப்போ ரீசண்டா மீட் பண்ணினேன்.. அவன் வரைஞ்ச ஒரு பெயிண்டிங்கை எனக்கு கிஃப்டா கொடுத்தான்..!!”

“நெஜமாவா..?? என்னால நம்பவே முடியலை அசோக்..!! எந்த நேரமும் கஞ்சா அடிச்ச மாதிரியே உர்ருன்னு சுத்திட்டு இருப்பான்.. அவனா இவ்வளவு கலாரசனையோட ஓவியம்லாம் வரையுறான்..? அவனுக்கு அப்போவே பொண்ணுக பழக்கம்லாம் கூட இருக்குன்னு கேள்விப் பட்டேன்..!!”

“ம்ம்.. அதெல்லாம் அப்போ நந்தினி.. இப்போ அவன் ரொம்ப மாறிட்டான்..!!”

சற்றே ஏக்கமான குரலில் அப்படி சொன்ன அசோக், ‘ஒரு பொண்ணு அவனை மாத்திட்டா..’ என்பதை மட்டும் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

“இப்போ அவன் ரொம்ப பாப்புலரான ஓவியன்.. வாராவாரம் ஆனந்த விகடன், குமுதத்துல அவனோட ஓவியம் வருது.. பாத்திருக்கியா..?? புனிதான்ற பேர்ல வரும்..!!”

“இல்ல.. கவனிச்சது இல்ல..!!”

“ம்ம்.. அடுத்த தடவை கவனிச்சு பாரு..!!”

“பாக்குறேன்..!! நீங்க சொல்றது எல்லாம் எனக்கு ஆச்சரியமாத்தான்பா இருக்குது.. அப்படி இருந்தவன் இப்படி மாறிருக்கான்னா.. இட்ஸ் ரியல்லி கிரேட்..!!”

“அதுசரி.. நீ எதுக்கு என் செல்ஃப்லாம் நோண்டிட்டு இருக்குற..?” அசோக் அந்த பேச்சை மாற்றும் எண்ணத்துடன், ஒரு போலிக் கோபத்துடன் கேட்டான்.

“ம்க்கும்.. நான்லாம் ஒன்னும் உங்க செல்ஃபை நோண்டலை சாமி..!! நீங்க கண்ட கருமமும் வச்சிருப்பீங்க.. அதெல்லாம் பார்க்கனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா..?”

Comments

Scroll To Top