கனவுகளைச் சேகரிக்காதே – 4

(Latest Tamil Sex Stories - Kanavugalai Segarikkathae 4)

Raja 2014-05-22 Comments

Latest Tamil Sex Stories – ” நெனச்சேன்…” என்றாள் அம்மா. ”நீ அந்த மினுக்கு. .. மினுக்கிட்டு போறப்பவே எனக்கு தெரியும். ! உன் சவுரியத்துக்கு நடக்கற.. கேக்க ஆளில்லேன்னு நெனச்சியா..”
” நான் ஒண்ணும் கொழந்தை இல்லியே… உன் சவுகரியத்துக்கு நடக்க..” எனச் சிரித்துக் கொண்டே

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

7

சொன்னாள் சத்யா.
” உனக்கு ரொம்ப கொழுப்புடி.. வேலைக்கு போற திமிர். . அடங்காப்பிடாரி..!”
” ஏன். .வேலைக்கு போகாத உனக்கு மட்டும் திமிர் இல்லையா… என்ன. .?”
” நா… உனக்கு அம்மாடி..”
” நா… உனக்கு மக..” அம்மாவுடன் பேசிக்கொண்டே.. புடவையை உருவிவிட்டு. .. நைட்டிக்கு மாறினாள்.
” எனக்கு சந்தேகமா இருக்கு ” என்றாள் அம்மா.
” அடிப் பாவி… அத நா இல்ல சொல்லனும் ” எனச் சிரித்தாள் சத்யா.
” ச்சீ…! வாயை மூடுடி.. கழுதை நான் சந்தேகப்பட்டது.. நீ ஓடிப்போவியோனு…”
” ஓ…! ஏன் கல்யாண செலவு மிச்சம்னு நெனச்சியா..?”
” உன்ன நம்ப முடியாது. .”
” அவ்வளவு பயந்தவ இல்லமா.. நீ பெத்த மக..”
அம்மா தாக்கப் பட்டவள் போலானாள்.முறைத்துப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
” சரி… பையன் யாரு. .?”
” ஏன். .?”
” நாங்க தெரிஞ்சிக்கனுமில்ல..? அப்பதான.. நல்லது.. கெட்டது..”
” அவசியமே இல்ல. . நேரம் வர்றப்ப நானே சொல்றேன் ”
”செரியான திமிர்டி..உனக்கு. .?”
” உனக்கு மக இல்லையா..? தாய் எட்டடி பாஞ்சா… குட்டி எத்தனை அடி பாயும். .??” என அம்மாவைப் பார்த்துக் கேட்டாள்.
கடுமையாக முறைத்தாள் அம்மா. அவளால் முடிந்தது அதுதான். அதற்கு மேல் சத்யாவிடம் பாச்சா பலிக்காது என்பது தெரியும்.
” காபி வெச்சிருக்கியா..?” வைத்திருப்பாள் என்று தெரிந்தும் கேட்டாள் சத்யா.
முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அம்மா.
” நான் ஒண்ணும் உனக்கு வேலைக்காரி இல்ல. .”
” நானும் உனக்கு எஜமானி இல்ல”
” எங்கேர்ந்துதான் என் வயித்துல வந்து தொலச்சியோ.. சனியன்..”
” நானும்தான்..! எங்கருந்துதான் உன் வயித்துல வந்து பொறந்து தொலச்சனோ..?”
கடுப்புடன் முறைத்தாள் அம்மா. !
நெக்கலாகச் சிரித்தாள் சத்யா.

8

”போம்மா… ச்சும்மா மொறைக்காத..! நான் உன் வயித்துல வந்து பொறந்து தொலச்ச கதையைப்போய் உன் புருஷன்கிட்ட கேட்டுப்பாரு… அவரு சொல்லுவாரு உனக்கு நாபகமில்லேன்னா..”
தலையிலடித்துக் கொண்டாள் அம்மா.
” சனியன்… சனியன்.. பீடை.. கழிசடைல பொறந்தது…”
” எனக்கும் அதான் வருத்தம்..! உன் கழிசடைல வந்து நான் பொறந்து தொலச்சேனே..! என்ன பண்றது எல்லாம் அவன் செயல்..” என்றவள் இரண்டு கைகளையும் மேலே தூக்கி. . கூரையைப் பார்த்துக் கேட்டாள் சத்யா ”ஆதி மூலமே.. ஏன்டா அப்பா…இப்படி பண்ணின..?”
” எக்கேடோ கெட்டு ஒழி..” கோபமாய் கத்திவிட்டுப் போனாள் அம்மா.
” உமது ஆசை.. நிறைவேற.. எமது.. ஆசிகள் தாயே..” எனப் பணிவாகச் சொன்னாள் சத்யா.!
☉ ☉ ☉
ஜன்னலோரமாக உட்கார்ந்து ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான் பூவரசு.

” காதல் ஒரு கேடா… உனக்கு?” கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்துத் தலைவாரிக்கொண்டிருந்த தங்கை..கேட்டாள்.
புத்தகத்திலிருந்த பார்வையை விலக்கி.. அவளைப் பார்த்தான். இன்னதென்று சொல்லத்தெரியாத… ஒரு உணர்வு தோண்றியது.! ஆனால் அவளைக் கோபிக்கத் தோன்றவில்லை. !
” நீ.. லவ் பண்றியா.. சௌமி.?” எனப் புன்னகையுடன் அவளைக் கேட்டான்.
”ச்ச்சீ…!” முகத்தைச் சுழித்தாள் ”அதெல்லாம் நான் பண்ண மாட்டேன் ”
ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்தான். அவள் சொல்வது உண்மைதானா.. என சந்தேகமாக இருந்தது.!
ஒரு பருவப் பெண்ணுக்கு காதல் பிடிக்காமல் போனால் என்ன காரணமாக இருக்க முடியும். .?
”சரி… லவ் பண்றதுதான் பண்ற. வேற எவளுமே கெடைக்கலியா.. உனக்கு..? இவதானா.. கெடைச்சா..? ராங்கிக்காரி..” என்றாள் தங்கை.
” காதலப்பத்தி என்ன தெரியும் உனக்கு. .?”
” ஆ..! அது பெரிய. .இது..? என்னவோ. .!”
”கழுதைக்கு கற்பூர வாசணை தெரியாதும்பாங்க..!! காதலே புடிக்காத உனக்கு அதப்பத்தி என்ன தெரியும். .? நீயெல்லாம் பேச என்ன இருக்கு..?”
” காதலப் பத்தி தெரிஞ்சுக்க லவ் பண்ணனுமா என்ன. .? இதுல நாங்க கழுதை… இவரு பெரிய இவரு..? சரி… சரி.. நீ எப்படியோ போ… எனக்கென்ன வந்துச்சு..! அவளத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கப் போறியா..?”
” வேலை இல்லாததனாலயே.. நா எதுக்கும் லாயக்கில்லாதவனா போய்ட்டனா.. சௌமி..?”
” அப்றம் என்ன. .?”
” ஒரு விசயம் சௌமி…! பணம் மட்டும்தான் வாழ்க்கைனு நெனச்சு வாழ்ந்துடாத.. அதையும் தான்டி எவ்வளவோ இருக்கு..! காதலப் பத்தி நீ தப்பான ஒரு அபிப்ராயத்துல இருக்கேனு நெனைக்கிறேன்.! காலம் மாறும். .. இப்ப புரியாது உனக்கு… அனுபவம் உணர்த்தும். .” என்றான்.
” க்கும். .! அத.. அப்ப பாப்பம்..! அப்பா என்ன சொன்னாரு தெரியுமா..?”
” என்ன. ..?”
அவனையே பார்த்தாள். பின் மெல்ல… பெருமூச்சை வெளியேற்றினாள்.
” சொல்லு..” என்றான்.பூவரசு.
” வேணாம்.. அப்றம் நீ.. பீல் பண்ணுவ..!” என்றாள்.
” அப்படின்னா இந்தப் பேச்சை நீ எடுத்துருக்கவே கூடாது..”
” சொல்லலாம்னு நெனச்சேன்”என த் தயங்கினாள்.
” சொல்லு..! ஆனா எனக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்குன்றதை மறந்துறாத..! நம்ம உறவும் இன்னிக்கோட முடிஞ்சிடப் போறதில்ல..! நானும் சம்பாரிப்பேன்.. நம்ம உறவும் சாகறவரை இருக்கும்” என்றான்.
” அப்படி என்ன பேசிட்டேன் உன்னை.. பெருசா..?”
” ஒரு வார்த்தை பேசறது உனக்கு சாதாரணமா இருக்கலாம்.. ஆனா அதை அனுபவிக்கற எனக்குத்தான் அதோட வலி என்னன்னு தெரியும். .!”
கொஞ்சம் மனமிறங்கினாள். ”தப்பா ஏதாவது பேசிட்டனா..?”
” பேசினத விடு..! வார்த்தைகள் சில சமயம் ரொம்ப ஆழமா பாயும்.! அதே வார்த்தைகளால திருப்பித்தாக்க எனக்கு ஒரு நிமிசம் போதும். .. ஆனா என்னோட இலக்கு நீ இல்ல..! ஒரு உண்மையச் சொல்லட்டுமா..? இப்போதைக்கு எனக்கு ரத்த சொந்தம்னு தொண்றது நீ மட்டும்தான். . உன்மேலயும் எனக்கு வெறுப்பு வந்துட்டா.. அப்பறம் சாகறவரை எனக்கு உறவுகள்ளயே ஒட்டுதல் வராது. .” என்றான்.
” அவ இருக்கற தைரியத்துல பேசற..?” என்ற அவளை ஆழமாகப் பார்த்தான்.!
‘ அனுபவம் புரியாத குழந்தை இவள். . இவளிடம் சித்தாந்தம் பேசி ஆகப் போவது ஒன்றுமில்லை.’ புத்தகத்தை வைத்து விட்டு எழுந்து விட்டான்.
” யாருக்காகவும் அவளை நான் விட்டுத்தர தயாரில்ல..! முடிஞ்சா.. உங்கப்பனுக்கும். . ஆத்தாளுக்கும் இதைச் சொல்லு..” என்றான்.
” எங்க போற… நில்லு” என்றாள் தங்கை.
நின்று அவளைப் பார்த்தான்.”என்ன. .?”
” உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்..”
”சொல்லு…”அவளையே பார்த்தான்.
தயங்கினாள். மலுப்பலாகச் சிரித்தாள்.!
” என்ன சொல்லு. .” என்றான்.
” இ… இல்ல.. வந்து. ..”
” சட்னு சொல்லிரு..”
” இது.. சட்னு சொல்ற விசயமில்ல..”
” அப்ப. . சொல்லாத விடு..”
” ஆனா கண்டிப்பா சொல்லிரச் சொன்னாங்க..”
புன்னகைத்தான் ”அப்பன்னா சொல்லிரு… நா உன்னெல்லாம் தப்பா நெனைக்க மாட்டேன்..”
தயங்கி..” நீ.. வந்து அவள.. அதான் சத்யாவ.. கண்டிப்பா லவ் பண்ணியே ஆகனுமா..?” எனக்கேட்டாள்.
மறுபடி.. ஒரு புன்னகை காட்டினான்.
” பத்து மாசம் சுமந்து பெத்த உங்களுக்கில்லாத.. அன்பும்.. பாசமும். . அவளுக்கு என்மேல இருக்குனு சொல்லு…! அவங்ககிட்ட…!!”
” அ… அப்பன்னாக்கா..” இழுத்தாள்.

9

” ம்… அப்பன்னா..?”
”ம்கூம். .” குறுக்காகத் தலையை ஆட்டினாள். ”எனக்கு கஷ்டமா இருக்கு…என்னால சொல்ல முடியல..! ஆனா ஒண்ணு.. நீ.. அவள லவ் பண்றது யாருக்குமே புடிக்கல.. முக்கியமா அதனாலதான் உன்னை வெறுக்கவும் செய்யறாங்க..”
அவள் என்ன சொல்ல முயற்சிக்கிறாள் என்பதை அவனால் ஓரளவு யூகிக்க முடிந்தது. !
” யாரு என்ன சொல்றதா இருந்தாலும்.. நேரடியாவே என்கிட்ட சொல்லச் சொல்லு..! இந்த நிமிசம் நான் வீட்டைவிட்டு போகவும் தயார்தான்..! ஆனா உங்கள்ள யாருக்காகவும். . அவளை இழக்க நான் தயாரில்லை..! இதையும் சொல்லிரு அவங்ககிட்ட..” என்றுவிட்டு வெளியேறினான் பூவரசு.!!
☉ ☉ ☉
கூட்டமே இல்லாத அதே பூங்கா. !
அதே இடம் .. ! அதே காதலன்..! என எல்லாமே ‘அதே ‘க்கள்தான். !
மல்லாந்து படுத்து.. கண்களை மூடி.. இரண்டு கைகளையும் தலைக்குக் கீழே கொடுத்திருந்தான் பூவரசு.! அவனது மனசு மிகவுமே கணத்துப் போயிருந்தது.! அவனைப் பற்றியே.. அவன் எண்ணிப் பார்த்ததில்… உண்மையிலேயே தான் எதற்கும் லாயக்கற்றவனோ என்ற உணர்வு.. அவன் மனதில் தோண்றியது.!
அதுவே கழிவிறக்கமாக மாறி.. சுய பச்சாதாபம் கொண்டான்.!

Comments

Scroll To Top