அசோக் காலிங் அசோக் – 10

(Tamil Sex Story - Ashok Calling Ashok 10)

Raja 2014-03-12 Comments

Tamil Sex Story – எபிஸோட் – IV

“லேகா..”

“சொல்லு அசோக்..”

“இந்த சீனி தொல்லை தாங்க முடியலை லேகா..”

1

“என்னடா செல்லம் சொல்றான் அந்த ஆளு..?”

“உன்னை கழட்டி விட சொல்றான்டி செல்லம்..”

“ஹாஹா..!! ம்ம்ம்ம்.. நீ என்ன பண்ணப் போற..?”

“எனக்கு நீ வேணும் லேகா.. இந்த சீனியை ஏதாவது பண்ண முடியாதா..?”

“என்ன பண்ணலாம்..? இந்த மானிட்டரை தூக்கி அவன் மண்டைல போட்டுடலாமா..?” சொல்லிக்கொண்டே லேகா அருகில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டரை கையில் தூக்கினாள்.

“ம்ம்ம்… போட்டுடு லேகா.. ஒழிஞ்சு போகட்டும்.. இன்னொரு மானிட்டர் இருந்தா.. இந்த ஜானி மண்டைலயும் ஒன்னு போடு லேகா..!!” நான் சொன்னதும் லேகா அந்த மானிட்டரை மேலே உயர்த்தி என் தலையை குறி பார்த்தாள்.

“ஐயையோ.. என்ன லேகா.. என் மேல போட வர்ற..?” நான் பதறிப்போய் கேட்க, அவளுடைய முகம் இப்போது கோரமாய் மாறியது. இதழ்களின் இருபுறமும் இரண்டு பற்கள், வழியும் ரத்தத்துடன் வெளியே நீண்டன. பேய் மாதிரி சிரித்தாள்.

“ஹ்ஹஹாஹ்ஹஹா…. ஹ்ஹஹாஹ்ஹஹா…. சீனி தலைல போட்டா என்ன.. உன் தலைல போட்டா என்ன அசோக்.. ரெண்டு பேருமே ஒரே ஆளுதான..? உன் தலைலேயே போட்டுர்றேன்..!!”

“நோ..!!!! லேகா ப்ளீஸ்… வெயிட்…!!! வேணாம்…!!!!!!!!!” நான் மிரண்டு போய் அலறிக்கொண்டு இருக்கும்போதே, லேகா அந்த மானிட்டரை என் தலையில் போட்டாள்.

நான் பதறியடித்துக் கொண்டு விழித்தேன்..!! ச்சே..!! எல்லாம் கனவா..??? ஷ்ஷ்ஷ்ஷஷ்….!!!!!!!!! ப்பா..!!!!!!!!!!!!! இருதயம் இன்னும் திடுக் திடுக்கென அடித்துக் கொண்டது. அந்த அதிகாலை குளிரிலும், மேனி எங்கும் வியர்த்துக் கொட்டியது. கண்டது கனவு என்ற உண்மை மூளைக்கு உறைத்திருந்தாலும், உடலில் ஏற்பட நடுக்கம் குறைய வெகுநேரம் ஆனது.

நான் படுக்கையை விட்டு மெல்ல எழுந்தேன். வாட்டர்கேன் திறந்து, மிச்சமிருந்த அத்தனை நீரையும் என் தொண்டைக்குள் ஊற்றினேன். குடலுக்குள் ஜில்லென குளிர்ந்த நீர் பாயவும், உடலில் ஏறியிருந்த படபடப்பு மெல்ல குறைந்தது. இரைத்துக் கொண்டிருந்த மூச்சும் சீரானது. கடவுளே.. என்ன கொடூரமான கனவு இது..?

நான் அதிர்ச்சியில் இருந்து மீண்டு, ஆசுவாசமடைந்து கொண்டிருக்கும்போதே, ‘கீகீன்கீங்..!!!’ என்று என் செல்போன் சனியன் கத்தி, என் இதயத்துக்கு மீண்டும் ஒரு மினி ஹார்ட் அட்டாக் கொடுத்தது. எனக்கு அந்த மினி அதிர்ச்சியை சமாளிக்க மேலும் இரண்டு வினாடிகள் ஆகின. பின்பு மெல்ல நடந்து சென்று என் செல்போனை எடுத்து பார்த்தேன். லேகாவிடம் இருந்து SMS வந்திருந்தது.

“GOOD MORNING DA PURUSHA..!!!!”

ம்க்கும்..!! காலாங்காத்தால பிசாசு மாதிரி.. கனவுல வந்து.. மானிட்டரை தூக்கி மண்டைல போட்டுட்டு.. மார்னிங் குட்’டா இருக்கணும்னு மெசேஜ் அனுப்புறியா நீ..?? இதுல புருஷன்னு கொஞ்சல் வேற..?? நான் சலித்துக் கொண்டேன்.

தம்மடிக்க வேண்டும் போலிருந்தது. காலையில் வேண்டும் என்று, நேற்று இரவு புத்தக அடுக்குகளுக்கு இடையில் செருகி வைத்த சிகரெட் ஞாபகம் வந்தது. சென்று தேடினேன்.. தேடினேன்.. தேடினேன்..!! காணோம்..!!!!

‘ப்ச்..!!!’ என்று மீண்டும் சலித்துக் கொண்டேன். ‘இந்த ஜானி நாய்தான் எடுத்திருப்பான்.. இவனிடம் இருந்து சிகரெட்டை காப்பாற்ற, எனக்கு தெரிந்த கடைசி இடத்தையும் கண்டு பிடித்துவிட்டானா..? ச்சை.. இந்த நாயின் தொல்லை.. நாளுக்கு நாள் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது..!!

எரிச்சலுடன், செல்போனை பாக்கெட்டில் எடுத்து போட்டுக்கொண்டு, என் ரூமை விட்டு வெளியே வந்தேன். பால்கனியில் புகை விட்டபடி ஜானி நிற்பது தெரிந்தது. கீழே எதையோ கூர்மையாக பார்த்துக்கொண்டே, சிகரெட்டை வாயில் வைப்பதும் எடுப்பதுமாய் இருந்தான். நான் மெல்ல அவனை நோக்கி நடந்தேன். அவனை நெருங்கியவன், அவன் அறியாதவாறு, அப்படி எதை பார்க்கிறான் என்று கீழே பார்வையை வீசினேன். கீழே.. வீட்டு வாசலில்.. பிங்கியின் அம்மா கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்..!!! அவ்வளவுதான்… எனக்கு வந்த ஆத்திரத்திற்கு.. அவன் பிடரியிலே பட்டென ஒன்று போட்டேன்..!!

“ஆஆஆஆ…!!” என்று கத்தியபடி அவன் திரும்பினான்.

“த்தா.. அப்படி என்னத்தடா வாயைப் பொளந்து பாத்துக்கிட்டு இருக்குற..?”

2

“அ..அது ஒண்ணுல்ல மச்சி.. ஆண்ட்டி கோலம் ஒழுங்கா போடுறாங்களான்னு வாட்ச் பண்ணிட்டு இருந்தேன்..!!” அவன் திணறலை சமாளித்துக்கொண்டே சொன்னான்.

“ஓஹோ..?? கோலம் ஒழுங்கா போட்டுட்டா.. கோல்ட் மெடல் கொண்டு போய் கொடுக்க போறியா..?”

“ஹிஹி…!!! ஏன்.. கொடுக்க கூடாதா..?”

“நீதான..??? ஒளிச்சு வச்சிருக்குற கோல்ட்பில்டரை.. திருடிக் குடிக்கிற நாயி நீ..!! நீயெல்லாம் கோல்ட் பத்தி பேசாத..!! தம்மை குடு..!!”

“இரு மச்சி.. இன்னொரு பஃப் அடிச்சுக்குறேன்..!!”

சொல்லிக்கொண்டே அவன் சிகரெட்டை வாயில் வைக்க செல்ல, நான் ஒருகையால் அவனுடைய கையை பிடித்து தடுத்தேன். இன்னொரு கையால் அவனுடைய விரல்களுக்குள் செருகியிருந்த சிகரெட்டை பிடுங்கினேன். அப்படியே என்னுடைய வாயில் வைத்து, ஆழமாக புகையை உள்ளிழுத்து வெளியே விட்டேன்.

“த்தா.. பஃப்லாம்.. பாக்கெட்ல இருக்குற காசுல வாங்கி அடிக்கணும்..!! இன்னொரு தடவை என் தம்மை தொட்டேன்னு வச்சுக்கோ.. வாய்க்குள்ள தீயை பொருத்தி போட்ருவேன்..!!”

“என்ன மச்சி.. காலங்காத்தாலேயே ஒரே டென்ஷனா இருக்குற..?”

“ஆமாம்.. கனவுல ஹன்சிகாவோட கட்டிப்புடிச்சு உருண்டேன்.. அதான் ஒரே டென்ன்ன்ன்ன்ஷனா இருக்குறேன்..!! மூடிட்டு போடா..!!”

நான் அவனை திட்டிவிட்டு, அவன் விட்டுவைத்திருந்த சிகரெட்டை, விரல்களுக்கு இடையில் வைத்து உறிஞ்ச ஆரம்பித்தேன். அவன் கொஞ்ச நேரம் அங்கேயே நின்று, என்னையும் சிகரெட்டையும் வெறிக்க வெறிக்க பார்த்தான். அப்புறம் என் பாக்கெட்டில் புடைத்திருந்த செல்போனுக்கு அவனுடைய பார்வை சென்றது. ஒரு அசட்டு இளிப்புடன் கேட்டான்.

“மச்சி.. மொபைல்ல பேலன்ஸ் இருக்குதா..?”

“ஏன் கேக்குற..?”

“அழகுவேணிக்கு ஒரு கால் பண்ணனும்.. பண்ணிக்கவா..?”

“ஏன்..? இன்னைக்கு நீ காலேஜுக்கு லீவ் போடப் போறியா..?”

“ஆமாம் மச்சி.. எப்புடி கரெக்டா கண்டுபிடிச்ச..?”

“மொசப் புடிக்கிற நாயை மூஞ்சைப் பாத்தா தெரியாது..?? நான் காலேஜுக்கு கெளம்புனப்புறம்.. அவளை ரூமுக்கு வர சொல்றதுக்கு..? அப்டித்தான..??”

“அ..அது.. அது…” அவன் இப்போது பதில் சொல்ல திணறினான்.

“ஆமாம்… அவ உனக்கு என்ன முறை வேணுன்னு சொன்ன..?”

“அத்தை..”

“எந்த வழில..?”

“அண்ணா நகர்ல இருந்து அமிஞ்சிக்கரை போற வழில..”

“என்னது..????”

“அங்கதான் அவங்க வூடு இருக்குது..!!”

“த்தா.. உன் பால்ஸ் மேல உனக்கு ஆசை இல்லையா..? ஏறி மிதிச்சேன்.. எகிறிடும் ரெண்டும்..!!”

“ஏன் மச்சி திட்டுற..?”

“எந்த வழில அத்தை முறை வேணும்னு கேட்டேன்டா.. பரதேசி..”

“அ..அது.. அப்பா வழில..”

“தப்பான வழிலன்னு சொல்லு..!!”

“என்ன மச்சி சொல்ற..?”

“நான் சொல்றது உனக்கு புரியலை..??”

“சத்தியமா புரியலை..”

“நடிக்காதடா டேய்..!! அவ உன் அத்தை இல்ல.. ஆந்த்ரா ஐட்டம்னு எனக்கு தெரிஞ்சு போச்சு..!!”

நான் சொன்னதை கேட்டு அவன் பட்டென ஷாக்கானான். ஆடு திருடி அகப்பட்டுக் கொண்டவன் மாதிரி, திருதிருவென விழித்தான். ஆனால் ஓரிரு விநாடிகள்தான்..!! அப்படியே அந்த அதிர்ச்சியை சமாளித்துக் கொண்டு, ‘ஈஈஈஈஈஈ…’ என இளித்தவாறு கேட்டான்.

“உனக்கு யார் மச்சி சொன்னாங்க..??”

“ம்ம்ம்..?? சன் நியூஸ் சுஜாதா பாபு சொன்னாங்க..!!”

3

“ந்யூஸ்லையா..???”

“வாயை பொளக்காத..!! ஒருநாள் அதுதான் நடக்கப் போகுது.. உங்க ரெண்டு பேருக்கும்..!! இத்தனை நாளா ரெண்டு பேரும் என்னை கேனையனாக்கிருக்கீங்கள்ல..?”

“சாரி மச்சி..!!”

“உன் சாரியை கொண்டு போய் சாக்கடைல கொட்டு..!! இனிமே இந்த மாதிரி.. அத்தை, சித்தின்னு ஏதாவது.. அழுக்கு டப்பாலாம் ரூமுக்கு கூட்டிட்டு வந்த.. அறைதான் வுழும் மவனே..!! புரிஞ்சதா.?? போ.. போய் குளிச்சுட்டு காலேஜுக்கு கெளம்பு..!!” நான் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு சொல்ல,

“சரி மச்சி..” அவன் சோகமாக முகத்தை வைத்தபடி நகர்ந்தான்.

“டேய்.. ஒரு நிமிஷம் இரு..” நான் அழைக்க,

“என்ன மச்சி..?” அவன் திரும்பினான்.

“அவளை மொதல்ல பேரை மாத்த சொல்லு.. அடுப்புக்கரி கொட்டி வைக்கிற அண்டா மாதிரி இருந்துக்கினு.. அழகு வேணியாம்.. அழகு வேணி..!! போ..போ..!!”

அவனை விரட்டிவிட்டு, நான் நிம்மதியாய் புகைக்க ஆரம்பித்தேன். லங்க்சுக்கு புகையை அனுப்பியவாறே, என் லவ்வரை எப்படி கழட்டி விடுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு நான்கைந்து யோசனைகளை தோன்றின. ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து, அதிலேயே பெஸ்டாக தோன்றிய யோசனையை, அன்றே செயல்படுத்த முடிவு செய்தேன்.

Comments

Scroll To Top