மாங்கல்யம் தந்துனானே – 13

(Tamil Sex Stories - Mangalyam Thanthunanae 13)

Raja 2014-04-19 Comments

Tamil Sex Stories – “உங்ககிட்ட ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?”

“எ..என்ன பவி.. சொல்லு..” அவள் இப்போது முகத்தில் குழப்ப ரேகை ஓட கேட்டாள்.

“புருஷன்றவன் ஒரு பொண்ணுக்கு எவ்வளவு முக்கியமானவன்..”

19

“ஆ..ஆமாம்..”

“புருஷன்ற அந்த உறவு.. எவ்வளவு புனிதமான உறவு..”

“ம்..ம்ம்ம்..”

“எங்கயோ பிறந்து.. எங்கயோ வளர்ந்து.. நம்மள அவங்க வாழ்க்கைல சேர்த்துக்கிட்டு.. அவங்க சுகதுக்கம்.. கஷ்ட நஷ்டம்லாம் ஷேர் பண்ணிக்கிட்டு.. நமக்கு புடிச்சதெல்லாம் தேடித்தேடி செஞ்சுக்கிட்டு.. நமக்காகவே ஓடிஓடி ஒழைச்சு.. ஓடா தேயுறாங்களே..?? பொண்டாட்டிக்கு புருஷன்றவன்தான் மொதல் புள்ளை.. புருஷனுக்கு கடவுள் கொடுத்த இன்னொரு அம்மாதான் பொண்டாட்டி.. அப்டின்லாம் சொல்றாங்களே..?? எவ்வளவு புனிதமான உறவுல அது..?”

“ம்ம்..!! ஆ..ஆனா.. நீ என்ன சொல்ல வர்றேன்னு…”

“அப்படிப்பட்ட புனிதமான உறவை கொச்சைப் படுத்துற மாதிரி.. உங்க ஹஸ்பண்டை யாராரோடவோ கம்பேர் பண்றீங்களே..? அது தப்பு இல்லையா..?”

நான் சொல்ல சொல்ல.. அவளுடைய முகம் பக்கென அதிர்ச்சியில் சுருங்கி சிறுத்துப் போனது. பேயிடம் அறை வாங்கியவள் மாதிரி திகைப்பாக என் முகத்தையே பார்த்தாள். நான் அதே அமைதியான குரலில் தொடர்ந்தேன்.

“எப்படி இருந்தாலும்.. என்ன கொறை இருந்தாலும்.. அவன் என் புருஷன்.. அவனை விட்டுக்கொடுக்க கூடாதுன்னு.. உங்களுக்கு தோணலையா..?”

நான் சொல்லிவிட்டு அவள் முகத்தையே கூர்மையாகப் பார்த்தேன். அவள் ஒருமாதிரி ஸ்தம்பித்துப் போயிருந்தாள். முகம் முழுதும் அதிர்ச்சியில் வெளிற ஆரம்பிக்க, அவளுடைய உதடுகள் படபடவென துடித்தன. கண்கள் கூட லேசாக கலங்கிய மாதிரி தோன்றியது. ஒன்றுமே சொல்லத் தோன்றாமல் உறைந்து போய் நின்றிருந்தாள்.

அவள் அந்தமாதிரி சிலையாக நின்று கொண்டிருந்தபோதே, ஒரு பையன் அடித்த பந்து பால்கனி நோக்கி பறந்து வந்தது. அவளுக்கு நேராக..!! அவள் அதை கவனிக்கவில்லை..!! பந்து அவளுடைய தலையில் அடித்துவிடக் கூடாது என்று பதறிய நான், பட்டென என் வலக்கையை நீட்டி அவளுடைய கன்னத்துக்கு சில அங்குல இடைவெளியில் அந்தப் பந்தை பிடித்தேன். அவளோ.. நான் அவளை அறையத்தான் கையை ஓங்கினேன் என்று நினைத்தாளோ என்னவோ.. படக்கென முகத்தை திருப்பியவள், அறை விழாமலே.. விழுந்த மாதிரி தன் கன்னத்தில் கை வைத்து மூடிக் கொண்டாள்.

அவளை இவ்வாறு காயப் படுத்தும் அளவிற்கு அவள் மீது எனக்கென்ன கோபம் என்று கேட்கிறீர்களா..? அவள் மீது எனக்கு பெரிதாக கோபமெல்லாம் எதுவும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால்.. இரண்டு வாரங்கள் முன்பு நடந்த அந்த சம்பவத்தினால், அவள் மீது நான் மனதில் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தேன். இந்தமாதிரி அவள் பேசும்போதெல்லாம் வழக்கமாக எனக்குள் எழும் எரிச்சல்தான்.. இன்று சற்று எல்லை கடந்துவிட்டது..!! இரண்டு வாரங்கள் முன்பு அசோக் ஆபீசில் எதையோ சாப்பிடப் போக, அது ஃபுட் பாய்சன் ஆகி, வயிறு கோளாறு சீரியசாகி, இரண்டு நாட்கள் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்குமாறு ஆயிற்று.

அந்த இரண்டு நாட்கள் நான் மிகவும் கலங்கிப் போனேன். முதன்முறையாக தாயாகிப் போன மாதிரியான உணர்வு. உடல் மெலிந்து, சோர்ந்து போய், ஹாஸ்பிட்டல் படுக்கையில் சுருண்டு படுத்துக்கொண்டு, என் உள்ளங்கையை தேடிப்பிடிக்கும் என் கணவரை காணும்போது, என் குழந்தையாகத்தான் தோன்றினார் அவர்..!! அவர் தூங்கும் நேரம் எல்லாம் அழுதுகொண்டே இருப்பேன். அவர் கண்விழிக்கும்போது, என் கண்துடைத்து சகஜ நிலைக்கு திரும்ப, மிகவும் சிரமப் படுவேன்.

அந்த மாதிரி நான் கலங்கிப் போயிருந்த நிலையில் இந்த ரேணுகாதான் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தாள். ஆபீசுக்கு ஒருநாள் லீவ் சொல்லிவிட்டு, முதல் நாள் முழுவதும் என்னுடனே இருந்தாள். அவருடைய உடல்நிலை பற்றி நான் கவலை கொள்ளும் வேளையில், பணம் ஒரு பிரச்னையாக இல்லாதவாறு பார்த்துக் கொண்டாள். மருந்து வாங்குவதற்கெல்லாம் அவளே அலைந்தாள். என் அருகில் இருந்து என்னை தேற்றியவள், அடுத்தநாள் காலை அத்தையும், மாமாவும் வந்து சேர்ந்த பிறகுதுதான் ஆபீஸ் கிளம்பினாள்.

அந்த சம்பவம் அவளைப் பற்றி நல்ல அபிப்ராயத்தை என் மனதுக்குள் உருவாக்கி இருந்தது. ஆனால்.. மீண்டும் அவர் திரும்பி வந்த ஓரிரு நாட்களிலேயே அவள் பழைய மாதிரி ஒப்பீட்டு பேச்சை ஆரம்பிக்கவும், மறுபடியும் என் மனதை எரிச்சல் அரிக்க ஆரம்பித்திருந்தது. அந்த மாதிரியான பேச்சு கடுமையாக என் மனதைப் பாதித்தது. அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணியே, அவ்வாறு முகத்தில் அறைந்த மாதிரி கேட்டுவிட்டேன்.

ஆனால், கேட்டுவிட்ட பிறகு அவள் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவசரப் பட்டு விட்டோமோ என்று கூட தோன்றியது. நான் நினைத்ததை விட மிகவும் காயப்பட்டுப் போனாள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், ‘ஸாரி பவி..’ என்று உலர்ந்து போன குரலில் சொல்லிவிட்டு, விடுவிடுவென நடந்து அவள் ஃப்ளாட்டுக்கு சென்றுவிட்டாள்.

அப்புறம் இரண்டு மூன்று நாட்கள் அவள் என் கண்ணிலேயே படவில்லை. எங்கள் வீட்டுக்கும் வரவில்லை. ஆபீசில் இருந்து வந்ததும் அவளுடைய ஃப்ளாட்டிலேயே அடைந்து கிடந்தாள். கோவம் இருக்கும் என்று எனக்கும் புரிந்தது. ‘பாவம்..’ என்று ஒருமனம் நினைத்தாலும், ‘பரவாயில்லை..’ என்று இன்னொரு மனம் சொல்லியது. நான் சொல்லிய விதந்தான் எனக்கு வருத்தத்தை அளித்ததே ஒழிய, சொன்ன விஷயத்தில் எந்த வித தவறும் இல்லை என்றே தோன்றியது. அந்த மாதிரி சமயத்தில்தான் அவள் மீது உச்சபட்ச வெறுப்பை உமிழ்ந்த அந்த சம்பவம் நடந்தது.

20
அன்று நியூ இயருக்கு முந்தய தினம்..!! காலையில் அவர் ஆபீசுக்கு கிளம்பிய போதே, இரவு சீக்கிரம் வர சொன்னேன். வெளியில் எங்காவது செல்லலாம் என என் விருப்பத்தை சொல்லியிருந்தேன். அவரும் சரி என்றுவிட்டே கிளம்பினார்.

மாலையில் நான் சற்று பரபரப்பாகவே காணப்பட்டேன். அவருடன் ஊர் சுற்றுவது என்பது எப்போதுமே எனக்கு உற்சாகம் தரும் விஷயம். பைக்கில் அவர் பின்னால் அமர்ந்துகொண்டு அவருடைய இடுப்பை வளைத்துக் கொள்வது பிடிக்கும். செல்லுமிடங்களில் அவர் என்னுடைய கணவராக்கும் என்று உரிமையுடன் அவருடைய கையை கோர்த்துக் கொண்டு நடப்பது பிடிக்கும். சீக்கிரமே கிளம்பி ரெடியானேன். அவருக்கு மிகவும் பிடித்த ஒரு காட்டன் புடவையை அணிந்து கொண்டு.. கொஞ்சமாய், திருத்தமாய் அலங்காரம் செய்துகொண்டு.. கூந்தலில் மல்லிகை அள்ளி வைத்து.. வாங்கி வைத்திருந்த கண்ணாடி வளையல்களை அணிந்து கொண்டு.. காத்திருந்தேன் அவருக்காக..!!

அவரிடம் இருந்து கால் வந்தது. ஓடிச்சென்று எடுத்தேன். உற்சாகமும் சந்தோஷமும் பொங்கும் குரலில் கேட்டேன்.

“என்னங்க.. கெளம்பிட்டீங்களா.. எப்போ வருவீங்க..?”

ஆனால் மறுமுனையில் இருந்து அவருடைய குரலுக்கு பதிலாக அந்த ரேணுகாவின் குரல் தயங்கி தயங்கி ஒலிக்க, நான் பட்டென முகம் சுருங்கினேன்.

“ப..பவி.. நான் ரே..ரேணு..”

“ஓ… நீ..நீங்களா..? அ..அவரு..” நான் தடுமாற்றமாய் கேட்டேன்.

“அ..அசோக் கார் ஓட்டிட்டு இருக்கான்.. அதான் என்னைப் பேச சொன்னான்..”

“ம்ம்ம்.. சொல்லுங்க..”

“ஆபீஸ்ல திடீர்னு ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணிட்டாங்க பவி.. ரெண்டு பேரும் அங்கதான் போயிட்டு இருக்கோம்.. நைட்டு வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடும்.. அதான்.. உ..உன்கிட்ட சொல்லலாம்னு..”

“ஓ.. பா..பார்ட்டியா..? போ..போறீங்களா..? ஓகே.. போ..போயிட்டு வாங்க..!! வேற..?”

“வே..வேற ஒன்னும் இல்ல..”

அவள் சொல்லி முடிக்கும் முன்பே நான் பட்டென காலை கட் செய்தேன். செல்போனை தூக்கி வீசினேன். நெஞ்சில் அடைத்த துக்கத்தை அடக்க முடியாதவளாய், கண்ணில் நீர் வார்க்க ஆரம்பித்தேன். அவருடன் வெளியே செல்கிற என் ஆசை கலைந்தது ஒருபுறம் வதைக்க, அவளும் அவரும் சேர்ந்து பார்ட்டி சென்று கூத்தடிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் இன்னொரு புறம் என்னை வாட்டியது. கண்ணீர் மட்டும் வடிக்கவில்லை என்றால்.. உயிரற்ற ஜடம் என்று என்னை முடிவு கட்டிவிடலாம். அந்த மாதிரிதான் அவர்கள் வரும்வரை அசையாமல் சோபாவில் அமர்ந்திருந்தேன்.

கீழே காரின் ஹார்ன் கேட்டதும், தலை திருப்பி மணி பார்த்தேன். பதினோரு மணிக்கு மேலாகி இருந்தது. எழுந்து ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தபோது, அவர்கள்தான் என்று புரிந்தது. இருவரும் முகமெல்லாம் சிரிப்பாக காரில் இருந்து இறங்கினார்கள். அசோக் நன்றாக குடித்திருப்பார் என்று தோன்றியது. தள்ளாடினார்..!! நானே சென்று அவரை மேலே அழைத்து வரலாம் என்று நினைத்தேன். படியிறங்கி கீழே சென்றேன்.

Comments

Scroll To Top