ஜெயம் கொண்டான் – 3

(Tamil Sex Stories - Jayamkondan 3)

Raja 2014-07-28 Comments

Tamil Sex Stories – “நல்லபடியா இஞ்சினியரிங் முடிச்ச.. நல்ல வேலைல ஜாயின் பண்ணுன.. இப்போ கை நெறைய சம்பாதிக்கிற.. காலாகாலத்துல அப்படியே ஒரு கல்யாணத்தையும் பண்ணிக்க வேண்டியதுதான..?”

அத்தை அப்படி கேட்டதும் நான் ஓரக்கண்ணால் ஜெயாவைத்தான் பார்த்தேன். அவள் இப்போது காய்கறி நறுக்குவதை பட்டென்று நிறுத்தியிருந்தாள். அவளும் ஓரக்கண்ணால் என்னையே பார்த்தாள். நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பதை அறிவதற்கு, அவளுடைய மனம் துடியாய் துடிக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் ஜெயாவை சீண்டிப்பார்க்க நினைத்தேன். அத்தையிடம் திரும்பி சொன்னேன்.

13

“கல்யாணமா..? கல்யாணத்துக்கு இப்போ என்னத்தை அவசரம்..? என்னமோ ரெடியா பொண்ணு இருக்குற மாதிரி சொல்றீங்க..?”

“ஏன்..? உனக்கென்ன பொண்ணா கெடைக்காம போயிடும்..? நீ மட்டும் சரின்னு சொல்லு.. நான், நீன்னு பொண்ணுக போட்டி போட்டுக்கிட்டு க்யூவில வந்து நிக்கும்…”

“நம்ம ஊர் பொண்ணுகளா…? போங்கத்தை..!! அதுக்கு நான் கல்யாணமே பண்ணிக்காம இருந்துடுவேன்…!!”

“என்னப்பா சொல்ற நீ…?” அத்தை அதிசயமாய் பார்த்தாள்.

“எனக்கு நம்ம ஊர் பொண்ணுகளையே புடிக்கலை அத்தை.. எப்பப்பாரு… மஞ்சளை பூசிக்கிட்டு.. புடவையை கட்டிக்கிட்டு.. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம ஊர் பொண்ணுகளை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன் அத்தை..”

“அப்புறம்..?”

“எங்க கம்பெனில இருந்து அடுத்த வருஷம் என்னை யூ.எஸ் அனுப்புவாங்க.. அங்கேயே ஒரு நல்ல இங்க்லீஷ்க்காரியா பாத்து மேரேஜ் பண்ணிட்டு.. அப்படியே அங்கேயே செட்டில் ஆகப் போறேன்…”

“ம்ம்ம்… நல்லாருக்குப்பா உன் ஆசை…!! இதை மட்டும் போய் உன் அம்மாக்காரிட்ட சொல்லு… அவ என்ன ஆட்டம் ஆடுறான்னு பாரு…”

அத்தை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, ஜெயா கத்தியை பட்டென்று தட்டில் எறிந்து விட்டு எழுந்தாள். திரும்பி விறுவிறுவென நடந்து மாடிப்படியை நோக்கி சென்றாள். அத்தை அவள் முதுகைப் பார்த்து கத்தினாள்.

“ஏய்…!! எங்கடி ஓடுற…? மிச்சத்தையும் கட் பண்ணிக் கொடுத்துட்டு போடி…!!”

“போ…!! நீயே கட் பண்ணிக்கோ…!! உன் காய்கறியை.. !!” என்று ஜெயா படிகளில் ஏறிக்கொண்டே கோபமான குரலில் சொன்னாள்.

“என்னது..? என் காய்கறியா…? மதியம் சாப்பாட்டுக்கு நாக்கை தொங்கப் போட்டுட்டு வருவில்ல..? அப்போ வச்சுக்குறேன்..”

“எனக்கு சாப்பாடும் வேணாம்..!! ஒரு மண்ணும் வேணாம்…!! நீயே எல்லாத்தையும் கொட்டிக்கோ…!!”

அவள் ஆத்திரத்தை தன் அம்மா மீது கொட்டிவிட்டு செல்ல, அத்தை எதுவும் புரியாமல் தன் மகளையே வெறுப்புடன் பார்த்தாள்.

“திடீர்னு என்னாச்சு இவளுக்கு…? லூசு மாதிரி கத்திட்டு போறா..?”

அத்தைக்கு புரியவில்லை. எனக்கு புரிந்திருந்தது. ‘நான் ஏற்கனவே ஒரு பொண்ணை பாத்து வச்சிருக்கேன் அத்தை..’ என்று தன்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொல்வேன் என்று ஜெயா எதிர்பார்த்திருப்பாள். நான் மாற்றி சொல்லவும், அவளால் அதை தாங்க முடியவில்லை. துக்கத்தை அடக்க முடியாமல் எழுந்து ஓடுகிறாள். மாடிக்கு போய் அழுவாள் என்று எனக்கு தோன்றியது.

மகள் விட்டு சென்ற காய்கறி நறுக்கும் பணியை இப்போது அத்தை தொடர்ந்தாள். நான் மேலும் சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு, பின்பு மெல்ல எழுந்தேன்.

“சரி அத்தை.. நானும் என் ரூமுக்கு போறேன்…”

சொல்லிவிட்டு நான் படியேறினேன். என் ரூமுக்கு போகாமல் மொட்டை மாடிக்கு சென்றேன். ஜெயாவை தேடினேன். அவள் ஒரு மூலையில் ஓரமாக நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். அவளை நெருங்கினேன். ‘ம்ம்க்கும்..’ என்று தொண்டையை செருமினேன்.

ஜெயா பட்டென்று திரும்பினாள். கண்களில் வழிந்த நீரை அவசர அவசரமாக துடைத்துக் கொண்டாள். அங்கிருந்து சென்று விட எத்தனித்தாள். நான் என் கையை அவளுக்கு குறுக்காக நீட்டி, அவளை தடுத்தேன்.

14

“வழியை விடுங்க அத்தான்.. நான் போகணும்…!!” என்றாள் கோபமாக.

“இரு… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..”

“என்கிட்டயா..? எங்கிட்ட என்ன பேசப் போறீங்க..? நாங்க பேசுனாலாம் உங்களுக்கு புடிக்குமா..? ஏதாவது வெள்ளைக்காரி ‘தஸ்ஸு புஸ்ஸுன்னு’ இங்க்லீஷ்ல பேசுனா உங்களுக்கு புடிக்கும்…”

அவள் படபடவென பொரிந்து தள்ளினாள். அவளுடைய முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து சிதறியது. கோபத்தில் வேகமாய் மூச்சு விட, அவளது மார்புப்பந்துகள் ஏறி ஏறி இறங்கின. எனக்கு அவளை பார்க்க சிரிப்பு வந்தது.

“ஓஹோ…!! அத்தைட்ட நான் பேசுனதுக்குத்தான் இவ்வளவு கோவமா..? நான் அமெரிக்கா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னது உனக்கு புடிக்கலை…!! கோவம்..!!”

“கோவமா..? யாருக்கு கோவம்..? எனக்குலாம் ஒன்னும் கோவம் இல்லை..!! நீங்க அமெரிக்காக்காரியை கல்யாணம் பண்ணிக்குங்க.. இல்லை ஆப்ரிக்காக்காரியை கல்யாணம் பண்ணிக்குங்க.. எனக்கு என்ன வந்தது..? எனக்குலாம் கோவம் இல்லை..” சொல்லும்போதே அவள் முகத்தில் அப்படி ஒரு கோபம்.

“அப்போ நான் யூ.எஸ்க்கார பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்.. உனக்கு அப்ஜெக்ஷன் இல்லை…?” நான் புன்னகையுடன் கேட்டேன்.

“இல்லை.. நீங்க யார வேணா கட்டிக்குங்க.. எதுக்கு எங்கிட்ட வந்து கேக்குறீங்க..?” என்று சூடாகவே சொன்னாள். நான் இப்போது கொஞ்சம் அலட்சியமான குரலில் சொன்னேன்.

“கட்டிக்கலாம்.. ஆனா என் மாமா பொண்ணு ஜெயான்னு ஒருத்தி இருக்கா.. அவளை லவ் பண்ணி தொலைஞ்சிட்டேன்.. அவ எந்த அப்ஜெக்ஷனும் இல்லைன்னு சொன்னா யூ.எஸ் பொண்ணை கட்டிக்கலாம்னு இருக்கேன்..”

சொல்லிவிட்டு நான் ஜெயாவின் முகத்தை பார்த்தேன். அவள் முகத்தில் இப்போது ஆச்சர்யம், ஆனந்தம், பரவசம், நன்றி, காதல் என்று பலவகை உணர்வுகள் கலந்துகட்டி அடித்தது. விழிகளை அகலமாக திறந்து வைத்து என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உதடுகள் படபடவென துடித்தன. நான் என் முகத்தை அவளுடைய முகத்துக்கு அருகில் கொண்டு சென்றேன். மெல்லிய குரலில் கேட்டேன்.

“யூ.எஸ் பொண்ணை கட்டிக்கவா…?”

“ம்ஹூம்..!! வேணாம்..!!” அவள் அவசரமாக சொல்லியபடி என் வாயை பொத்தினாள். நான் புன்னகைத்தபடி கேட்டேன்.

“அப்போ நீ என்னை கட்டிக்கிறியா..?”

நான் கேட்டதும் ஜெயாவின் முகம் வெட்கத்தால் அப்படியே சிவந்து போனது. உதடுகளில் அழகாக ஒரு புன்னகை வந்து உட்கார்ந்து கொண்டது. தலையை குனிந்து கொண்டாள். மெல்ல சொன்னாள்.

“ம்ம்ம்… கட்டிக்கிறேன்..”

“அப்போ இப்போவே கட்டிக்கோ…”

நான் என் இரண்டு கைகளையும் விரித்து, என் விரிந்த மார்பினை காட்டவும், அவளுக்கு வெக்கத்தை அடக்க முடியவில்லை. ‘போங்கத்தான்…!!’ என்றவாறு ஓட முயன்றாள். நான் அவளுடைய இடது கையை எட்டிப் பிடித்தேன். பட்டென்று இழுத்து என்னோடு அணைத்துக் கொண்டேன். ஜெயா திமிறினாள். அப்புறம் என் முரட்டுத்தனமான அணைப்பில், எனக்குள் கோழிக்குஞ்சு மாதிரி அடங்கிக் கொண்டாள். நான் அவளது காது மடலில் என் மூக்கை வைத்து உரசிக்கொண்டே சொன்னேன்.

“இப்படிலாம் ஓடினா.. அப்புறம் நான் போய் இங்க்லீஷ்க்காரியை கட்டிக்குவேன்…”

“போங்க… போய் கட்டிக்குங்க…!!” அவள் சிணுங்கியபடியே சொல்ல,

“கட்டிக்கவா…? ம்ம்ம்… கட்டிக்கவா…?” சொன்னவாறே நான் அவளுடைய இதழ்களை நோக்கி குனிந்தேன்.

“வேணாம் அத்தான்…!! வேணாம்…!! வேணாம்…!!”

அவள் சொல்ல சொல்ல கேட்காமல் நான் என் உதடுகளை அவளது உதடுகள் மீது பொருத்தினேன். எனது தடித்த உதடுகளால், அவளது மெல்லிய, சிவந்த, ஈரமான உதடுகளை கவ்வி உறிஞ்சினேன். அந்த பட்டு உதடுகளில் கசிந்திருந்த தேனை, என் உதடுகள் மூலமே உறிஞ்சிக் குடித்தேன். ஆரம்பத்தில் திமிறிய ஜெயாவும், மெல்ல மெல்ல என் வழிக்கு வந்தாள். எனது கன்னங்களை தாங்கி பிடித்துக் கொண்டு, பதிலுக்கு என் உதடுகளை சுவைத்தாள். நாங்கள் அந்த உச்சி வெயிலில், உலகை மறந்து, உதடுகள் லாக்காகிக்கொள்ள, உறைந்து போன மாதிரி நின்றிருந்தோம்.

அப்புறம் ஒரு நான்கு மாதங்கள் ஆகாயத்தில் பறப்பது மாதிரி கழிந்தது. நானும் ஜெயாவும், பெங்களூரில் காதலர்கள் சந்தித்துக்கொள்ளும் இடங்களை ஒன்று விடாமல் சுற்றினோம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உதடுகளை உரசிக் கொண்டோம். ஆரம்பத்தில் தயங்கிய ஜெயா, பின்பு தைரியமாக ஊர் சுற்ற வந்தாள். ஆபீசில் இருந்து சீக்கிரமே கிளம்பி, காலேஜுக்கு சென்று அவளை பிக்கப் செய்து கொள்வேன். எங்காவது சுற்றுவோம். அப்புறம் தனித்தனியே வீட்டுக்கு திரும்புவோம்.

15

அத்தைக்கும், மாமாவுக்கும் எங்கள் விஷயம் தெரியாமல் இருக்க, இந்த விஷ்ணுப்பயல் எப்படியோ மோப்பம் பிடித்து விட்டான். ‘வேணாக்கா…!! இந்த ஆள் மூஞ்சியே சரியில்லை.. இவரை லவ் பண்ணிட்டோம்னு பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ..’ என்று அக்காவை எச்சரித்தான். என்னிடம் நறுக்கென்று குட்டு வாங்கினான். ‘ஏன் அத்தான்.. என் தம்பியை குட்றீங்க..?’ என்று தன் அக்காவிடம் ஆறுதல் வாங்கினான்.

Comments

Scroll To Top