மாங்கல்யம் தந்துனானே – 1

(Tamil Kama Stories - Mangalyam Thanthunanae 1)

Raja 2014-03-26 Comments

Tamil Kama Stories – புதிதாய் மணமான ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளை அந்த பெண்ணின் பார்வையில் இருந்தே சொல்ல போகிறேன். திருமணம் நடந்த கொஞ்ச நாட்களில் கணவன் மனைவிக்குள் நடக்கும் சில நிகழ்வுகள்தான் மொத்தக் கதையுமே. இருவருக்கும் இடையிலான ஒரு சின்ன கருத்து வேறுபாடு அந்த நிகழ்வுகளுக்கு காரணமாகிறது.

Deepthi Rahul Madhav Hot Yugam Movie Photo Gallery

புதுமையான கதை என்றெல்லாம் கிடையாது. அந்தப் பெண்ணின் உணர்வுகள் மட்டுமே ஸ்பெஷல்..!! நான் பெண்ணின் பார்வையில் இருந்து மென்காமக்கதை எழுதுவது, இதுவே முதல் முறை..!! ஒரு ஆணாய் இருந்து பெண்ணின் உணர்வுகளை சொல்ல முற்படுவது சற்று சிரமமான காரியமாகத்தான் உணர்ந்தேன். என்னால் முடிந்த அளவு முயன்றிருக்கிறேன். நீங்கள் வாசித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி..!!

சற்றே பெரிய கதையாக எழுத நினைத்திருக்கிறேன்.. எனவே.. எபிசோட் எபிசோடாகவே போஸ்ட் பண்ண திட்டமிட்டிருக்கிறேன்.. முதல் எபிசொட் விரைவிலேயே வரும்.. உங்கள் ஆதரவுதான் அடுத்த எபிசோட்கள் வர காரணமாயிருக்கும்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்

1

மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுனா
கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ்சதம்-

(பெண்ணே..!!) எனது உயிருக்கு ஒப்பானஇந்த மங்கல நூலை உனக்கு அணிவிக்கிறேன். (என்னுடனான இல்லற வாழ்க்கையில்) எனது சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு.. எல்லா வளமும் பெற்று.. நூறாண்டு நீ வாழ்வாயாக..!!

எபிஸோட் – I

வாசலில் கட்டியிருந்த வாழை மரம் கூட , சோர்ந்து போய் மேலும் தலையை தொங்கப் போட்டிருந்தது. பந்தலில் கட்டியிருந்த தோரணங்களில் பாதி உதிர்ந்து போயிருந்தன. கொட்டி வைத்த மணல் மீது ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த வாண்டுகள் எல்லாம், அறைக்குள் முடங்கி அடங்கிப் போயிருந்தன. மாலையிலிருந்து பளீரென்று எரிந்துகொண்டிருந்த குழல் விளக்குகள் கூட, மின்சாரம் நிறுத்தப்பட்டு உறங்க ஆரம்பித்திருந்தன.

வீட்டின் உள்ளறைக்குள் நானும் களைத்துப் போய் அமர்ந்திருந்தேன். மேடையில் நெடுநேரம் நின்றிருந்ததால் கால்கள் சோர்வாகி கிடந்தன. அலைச்சல் ஏற்படுத்திய வியர்வையில் உடல் கசகசத்தது. மேனியில் தொங்கிய தங்க நகைகள் கொஞ்ச நேரமாய் உறுத்த ஆரம்பித்திருந்தன. இதில் இந்தப் பட்டுப் புடவை வேறு.. எப்போதடா அவிழ்த்து வீசுவோம் என்றிருந்தது..!! அப்போதுதான் அம்மா கதவு திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

“நகையலாம் கழட்டி வச்சிடு பவித்ரா.. எல்லாம் பாக்ஸ்ல போட்டு வச்சிடு.. உன் மாமியார் ஏதும் செக் பண்ணனும்னா பண்ணிக்கட்டும்..”

“ம்ம்.. சரிம்மா..”

“குளிச்சுட்டு இந்த பொடவையை மாத்திக்கோ..”

சொன்னவள் கையிலிருந்தவைகளை கட்டிலில் வைத்தாள். மாற்றுப் புடவை.. மேட்சிங் ப்ளவுஸ்.. உள்ளாடைகள்..!! ஒருகணம் நிமிர்ந்து என் முகத்தை பார்த்து பெருமையாக புன்னகைத்தவள், என் நெற்றியில் கை வைத்து தலையை இதமாய் தடவினாள். பின்பு கதவு திறந்து வெளியேறினாள். கதவை அவள் சரியாக மூடாமல் செல்ல, அந்த கதவிடுக்கு வழியே ஹால் தெரிந்தது. ஹாலில் கிடந்த சோபாவில் அவர் தெரிந்தார்.

அசோக்..!!!!!!!!!! என் கணவர்.. இன்று காலை என் கழுத்தில் மாங்கல்யம் பூட்டியவர்.. தோளில் மாலை சூட்டியவர்.. நெற்றி தொட்டு பொட்டிட்டவர்..!! யாரோ ஒரு உறவினரிடம் புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்தார். அழகாய் உதடுகள் விரித்து.. வெண்பற்களை வெளிக்காட்டி..அவ்வப்போது கைவிரல்களை அசைத்து..!! பேச்சு அங்கு இருந்தாலும், அவருடைய கவனம் நானிருக்கும் அறையில்தான் இருந்தது. பேசிக் கொண்டிருக்கும்போதே அவருடைய விழிகள் அடிக்கடி இந்தப்பக்கம் சுழன்றன. எனக்கு லேசாக சிரிப்பு வந்தது. மிகவும் ஆர்வமாக இருக்கிறாரோ என்று தோன்றியது. பால் கூட குடியாமல், பாய்வாரோ என் மேல்.. என்று பயமாய் இருந்தது.

ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்..!!!!! இனி இவருடன்தான் தினமும் உறங்கவேண்டும். அம்மாவை அணைத்துக் கொண்டு தூங்கிய காலம் முடிந்து விட்டது. அம்மாவின் மீது கால் போடுவது மாதிரி, இவர் மீது போட்டால் திட்டுவாரோ என்று ஒரு கவலை மனதில் ஓடியது. குறட்டை விடுகிறேன் என்று அம்மா திட்டுவாள். இவர் என்ன சொல்கிறாரோ..? அவ்வப்போது இந்தப்பக்கம் பார்வையால் மேயும் என் கணவர் அசோக்கை, கதவிடுக்கு வழியே நானும் பார்த்து ரசித்துக் கொண்டு, என் நகைகளை ஒவ்வொன்றாய் கழட்ட ஆரம்பித்தேன். காதில் தொங்கியவைகளில் இருந்து ஆரம்பித்தேன்.

அவர் அழகாய்த்தான் இருக்கிறார் என்று தோன்றியது. என்னைப் போல் நிறமில்லைதான்.. மாநிறந்தான்.. ஆனால் திருத்தமான, களையான முகம்.. ஆண்மை அழகு கொஞ்சும் முகம்.. கருப்பாய், அலை அலையாய் கேசம்.. எதிரே இருப்பவர்களை துளைத்து பார்க்கும் கண்கள்.. கூர்மையான நாசி.. சற்றே தடித்த உதடுகள்.. உதட்டின் மேலே அந்த அடர் மீசை.. மேலுதட்டை பாதி மறைத்தவாறு..!!அந்த மீசையை பற்களால் கடித்து இழுக்க வேண்டும் என்று திடீரென ஒரு ஆசை எனக்குள் ஓடியது.

என்னை பெண்பார்க்க வந்த அன்றே அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெட்கப்பட்டு வெட்கப்பட்டு ஓரக்கண்ணால் பார்த்தார். பார்த்ததுமே ஒருவித அன்னியோன்யம் தோன்றியது. எதோ பூர்வ ஜென்ம பந்தம் என்பார்களே.. அது மாதிரி..!! அவரே எனக்கு கணவராக அமைய வேண்டும் என்று அப்போதே கடவுளை வேண்டிக் கொண்டேன். இதோ.. இன்று என் வேண்டுதல் பலித்துவிட்டது.

இரண்டு மாதங்கள் முன்புதான் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த இரண்டு மாதங்களாக அவ்வப்போது என் செல்போனுக்கு கால் செய்து பேசுவார். மணமாகும் முன் ஒருவர் மனதை ஒருவர் அறிந்து கொள்ளும் முயற்சி..!!ஓரளவு அவரை பற்றி புரிந்து கொண்டிருந்தாலும், முழுமை என்று சொல்ல முடியாது. சென்னையில் உள்ள ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் டீம் லீடாக இருக்கிறார். ‘வேலை விஷயத்துல நான் ரொம்ப சின்சியரா இருக்கணும்னு நெனைக்கிறவன்.. அதை நீ நல்லா புரிஞ்சுக்கணும் பவி..’ என அடிக்கடி சொல்வார்.

“என்னம்மா.. இன்னும் ரெடியாகலையா நீ..?” கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் என் மாமியார்.

“இ..இதோ.. ரெடியாயிட்டேன் அத்தை..இ..இப்போ குளிச்சுட்டு வந்துர்றேன்..” நான் படபடப்பாய் சொன்னேன்.

“சீக்கிரம்மா.. அவன் பத்து மணிக்குலாம் கொறட்டை விடுற ஆளு..”

“ம்ம்ம்ம்.. சரித்தை.. ந..நகைலாம் இங்க இருக்கு..இ..இதை… ”

“நீயே பீரோ தொறந்து உள்ள வச்சிடும்மா..”

புன்னகையுடன் சொல்லிவிட்டு, சாவிக்கொத்தை என் கையில் திணித்த என் மாமியாரை எனக்கு பட்டென பிடித்துப் போனது. நிச்சயத்தின் போது போடுவதாய் சொன்ன நகைகள், வீடு வந்து சேர்ந்திருக்கிறதா என எடைபோட்டுப் பார்ப்பாள் என்று எண்ணியிருந்தேன். அவளோ புது மருமகள் வீட்டுக்கு வந்த முதல் நாளே சாவிக்கொத்தை கையில் தருகிறாள். அதற்குள்ளாகவே என்னை அந்த குடும்பத்தில் ஒருத்தியாய் ஒத்துக் கொண்டாள் என்று தோன்றியது.

2

பீரோ திறந்து நகைகளை உள்ளே வைத்தேன். கதவுக்கு தாழ் போட்டுவிட்டு குளியலறைக்குள் நுழைந்தேன். வாஷ்பேசினுக்கு மேலே இருந்த கண்ணாடி என் உருவத்தை பிரதிபலித்தது. ஒருகணம் அந்த கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தை பார்த்தேன். அழகுக்கொன்றும் குறைச்சல் இல்லை என்றே தோன்றியது. மாசுமருவில்லா வட்ட முகமும்.. கரிய, பெரிய கண்களும்.. தடித்த, சிவந்த உதடுகளும்.. அழகாய்த்தான் இருக்கிறேன்..!!

கண்ணாடியில் என் உருவத்தை பார்த்துக் கொண்டே, உடைகளை களைய ஆரம்பித்தேன். கசகசத்த புடவை.. ப்ளவுஸ்.. பெட்டிக்கோட்.. உள்ளாடைகள்..!! நிர்வாணமாய் நின்றிருந்தேன் இப்போது..!! எனது அந்தரங்க அங்கங்களின் அழகை பொறுமையாக பார்வையிட்டேன். சந்தன நிறத்தில் ஜொலித்த மேனியில் அங்கங்கே அழகழகாய் மேடு பள்ளங்கள். ஏற்ற இறக்கங்கள்..!! பொத்திப் பொத்தி நான் மட்டும் பார்த்ததெல்லாம் நேற்றோடு போயிற்று. இனி இந்த இரகசியம் எல்லாம் இன்னொருவனுக்கும் தெரியப் போகிறது..!!

ஒரு கையால் அந்த அந்தரங்க பாகங்களை தடவிப் பார்த்தேன். சப்பாத்தி மாவை பிசைந்து, அழகாய் உருட்டி இரண்டு புறமும் ஒட்ட வைத்த மாதிரியான மார்புக் கோளங்கள். என் உடல்வாகுக்கு சற்றே பருத்த, மதர்த்த மார்புகள். வெளுத்த முலைகளின் மையத்தில் பழுப்பு நிற காம்பு கவர்ச்சியாய் தோன்றியது. குழைவான, ஆனால் சற்றே அதிகப்படியான இடுப்பு சதைகள், வயிறை லேசாக மேடிட்டு காட்டின. வயிற்றின் மையத்தில் என்னிடம் எனக்கே பிடிக்காத தொப்புள். பெரிய உப்பலான தொப்புள். ‘ஜெமினி’ கிரணுக்கு இருப்பது மாதிரி. இன்னும் சற்று கீழே.. பொன்னிறத்தில்.. நெட்டுவாக்கில் கீற்று மாதிரி வெடிப்புடன்.. பூரிப்பாய் என் பெண்ணுறுப்பு..!! பின்புற குடங்களும் சற்றே அளவில் பெருத்திருந்தாலும், அழகாய் புடைத்திருந்தன.

ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்..!!!!! எல்லாம் நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் எனக்கு பிடித்து என்ன பிரயோஜனம்..? அவருக்கல்லவா பிடிக்க வேண்டும்..? பிடிக்குமா..??? ‘பாக்கலாம்’ என்று எனக்குள்ளேயே சொல்லிவிட்டு கண் சிமிட்டிக் கொண்டேன். ஷவர் வால்வை திருகினேன்.

Comments

Scroll To Top