ஐ ஹேட் யூ பட் – 38

(Tamil Hot Stories - I Love You But 38)

Raja 2013-11-05 Comments

Tamil Hot Stories – “ஹ்ம்ம்.. உன் மாமனை வழிக்கு கொண்டு வர்றதுக்கு.. நீதான் அக்காவுக்கு ஹெல்ப் பண்ணனும் செண்பகம்..!!”

“சொல்லுங்கக்கா.. என்ன ஹெல்ப்பா இருந்தாலும் பண்றேன்..!!”

“உனக்கு ஏதாவது ஐடியா தோணுச்சுனா சொல்லேன்..??”

“ஐடியாவா..??”

செண்பகம் பிரியாணியை அசை போட்டுக்கொண்டே யோசித்தாள். ‘என்ன பண்ணலாம்.. என்ன பண்ணலாம்..’ என்று முணுமுணுத்தவாறே நெற்றியை கீறிக்கொண்டாள். ப்ரியா செண்பகத்தின் முகத்தையே ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருக்க.. அவள் இப்போது திடீரென முகம் மலர்ந்து போய் கேட்டாள்.

“ஆங்.. உங்களுக்கு சொறாப்புட்டு பண்ணத் தெரியுமாக்கா..??” செண்பகம் அப்படி கேட்டதுமே, ப்ரியாவின் முகம் காற்றுப் போன பலூன் மாதிரி ஆனது.

“ஏன் கேக்குற..?? சொறாப்புட்டு தின்னாத்தான் உனக்கு ஐடியா வருமோ..??” என சற்று கடுப்புடனே கேட்டாள்.

“ஐயோ.. அதுக்கு இல்லக்கா.. உங்களுக்கு பண்ண தெரியுமா.. தெரியாதா..??”

“தெ..தெரியும்..!! என்ன மேட்டர்னு சொல்லு..!!”

“மாமாவுக்கு சொறாப்புட்டுன்னா ரொம்ப புடிக்கும்க்கா..!!”

“அதுக்கு..????”

“எனக்கு பிரியாணி பண்ணி கொண்டு வந்த மாதிரி.. மாமாவுக்கு சொறாப்புட்டு பண்ணி கொண்டு போய் குடுங்க.. மாமா மனசு மாறிடுவாருன்னு நெனைக்கிறேன்..!!”

செண்பகம் படுசீரியசாக சொல்லிவிட்டு பற்களை காட்ட.. ப்ரியா அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள்..!! ‘முடியல..’ என்பது போல சலிப்பாக தலையசைத்தாள். ‘சொறாப்புட்டுக்கு மயங்குறவனா உன் கேடிப்பய மாமன்..?? உன்கிட்ட வந்து ஐடியா கேட்டேன் பாரு.. என்னை சொல்லணும்..!!’ என்று மனதுக்குள்ளேயே நொந்து கொண்டாள்.

“என்னக்கா.. ஒன்னும் சொல்ல மாட்டேன்றீங்க..??”

“ஒண்ணுல்ல..!! ஐடியாலாம் அக்காவே யோசிச்சுக்குறேன்.. நீ தேவை இல்லாம உன் ப்ரயினை போட்டு பிராண்டாத.. சரியா..?? பாரு.. பிரியாணி அப்படியே இருக்கு.. சாப்பிடு சாப்பிடு.. காலி பண்ணு..!!”

செண்பகம் மீண்டும் சுறுசுறுப்பாய் பிரியாணி சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை.. அவளுடைய முகத்தையே.. கன்னத்தில் கைவைத்தவாறு.. கவலையுடன் ப்ரியா பார்த்துக் கொண்டிருந்தாள்.

அசோக்கைப் பற்றி ப்ரியா நினைத்தது சரிதான். அவள் கணித்த மாதிரியான ஒரு மனநிலையில்தான் அசோக் இருந்தான். அவனுக்கு ப்ரியா மீது காதல் இருந்தாலும், அதற்கு போட்டியாக எரிச்சலும், கோபமும் இருந்தது. கை முறிந்து போனதினால் வந்த ஆத்திரம் வேறு. அதனால்தான் ப்ரியா வந்து மன்னிப்பு கேட்டும், மனதை திறந்து காட்டியும், அவனது காதலை உடனே வெளிப்படுத்திவிட அவனுடைய ஈகோ தடுத்தது. ‘இத்தனை நாளா என்னை என்ன பாடுபடுத்தின.. நீ கொஞ்ச நாள் என் பின்னாடி அலை..!!’ என்பது மாதிரியான எண்ணம்..!!

ஒரே நாளில்.. ஒரே பிரியாணியில்.. ப்ரியாவும் செண்பகமும் ஒன்றுக்குள் ஒன்றாக ஆகிப் போனார்கள்..!! அன்று இரவு அசோக்கின் வீட்டிற்கு ஒன்றாக ஸ்கூட்டியில் சென்று இறங்கினார்கள். ஏதோ பேசி சிரித்துக்கொண்டே இருவரும் வீட்டுக்குள் நுழைய, அதைப் பார்த்த அசோக், சற்றே டென்ஷன் ஆகிப் போனான். அப்புறம் தனிமையில் செண்பகத்திடம் கேலியாக கேட்டான்.

“என்ன செம்பு.. அக்கா அக்கான்னு ரொம்பத்தான் அவகிட்ட குழையுற.. ஒரே நாள்ல.. க்ளோஸ் பிரண்ட்ஸ் ஆயிட்டிகளோ..??”

“ம்ம்.. ஆமாம் மாமா..!!”

“ஹ்ம்ம்.. பாத்து ஜாக்கிரதையா இருந்துக்கோ..!!”

“ஜாக்கிரதையாவா..?? எதுக்கு..??”

“நானும் ஒரு காலத்துல அவகூட இந்த மாதிரி க்ளோஸா இருந்தவன்தான்.. இப்போ நெலமையை பாத்தேல..??” என்று அசோக் கட்டுப்போட்டிருந்த கையை ஆட்டி காட்டினான்.

“ம்ம்ம்ம்..” செண்பகம் சற்றே மிரட்சியாய் அந்த கையை பார்த்தாள்.

“உனக்கு எந்த லாரி ரெடி பண்ணி வச்சிருக்காளோ..?? ஹ்ம்ம்ம்… நாளைக்கு மொத வேலையா.. உன் பேர்ல பத்து லட்ச ரூபாய்க்கு.. ஒரு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி எடுக்கணும் செம்பு..!!” அசோக் கேஷுவலாக செண்பகத்திற்கு கிலி கிளப்பிவிட்டு சென்றான்.

உள்ளுக்குள் சற்றே உதறல் எடுத்தாலும் ப்ரியாவின் நட்பை, செண்பகம் உதறிவிடவில்லை. தினமும் மாலை ஒன்றாகவே ப்ரியாவுடன் அசோக்கின் வீட்டுக்கு வருவாள். சிறிது நேரம் அங்கே செலவழித்துவிட்டு, அப்புறம் ப்ரியாவே அவளை ஹாஸ்டலில் கொண்டு விடுவாள். ப்ரியாவுக்கும் அசோக்குக்கும் இடையிலான இந்த நட்பு, காதல், மோதல் எல்லாம் செண்பகம் மூலமாக செல்விக்கும் ராஜேஷுக்கும் மேலோட்டமாக தெரிந்து போனது. அசோக்கின் ஈகோதான் இப்போது இடையில் நிற்கும் ஒரே ஒரு தடைக்கல் என்பதை அவர்களும் புரிந்து கொண்டார்கள். அவனை வழிக்கு கொண்டுவர அவர்களும் முயற்சித்தார்கள். அசோக்கிற்கும் ப்ரியாவிற்கும் திருமணம் நடப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது போலவே அவனிடம் பேசி, அவனுக்கு டென்ஷன் கிளப்புவார்கள்.

அசோக் அவனுடைய அறைக்குள் அமர்ந்திருக்கும்போதே, செல்வியும் ப்ரியாவும் உள்ளே நுழைந்து, அவனை கண்டுகொள்ளாமல், அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்வார்கள்.

“இந்த ரூமையே எடுத்துக்கங்க ப்ரியா.. இதுதான் உங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்..!! இந்த வீட்டுலயே ரெண்டு ஜன்னல் இருக்குற ஒரே ரூம் இதுதான்.. நல்ல வெளிச்சமா, காத்தோட்டமா இருக்கும்..!!” என்பாள் செல்வி.

“ஹையோ.. ஜன்னல்லாம் எதுக்குக்கா..?? எந்த நேரமும் அடைச்சுத்தான் வச்சிருக்க போறோம்..?? அதனால என்ன யூஸ்..??” ப்ரியா ஒரு தொலைநோக்கு பார்வையுடன் சொல்வாள்.

“ஹ்ம்ம்.. அதுவும் சரிதான்..!!”

“இந்த ரூம் ஓகேதான்க்கா.. ஆனா ஒரே டன்ஜனா இருக்குற மாதிரி இருக்கு..!!”

“ஐயையே.. இந்தப்பய ரூமை அந்த மாதிரி போட்டு வச்சிருக்கான் ப்ரியா..!! எல்லாத்தையம் ஒதுங்க வச்சு அக்கா உனக்கு அரேஞ்ச் பண்ணி தரேன்..!!”

“ஓ.. தேங்க்ஸ்க்கா..!!” ப்ரியா குழைந்துகொண்டு சொல்ல, அசோக்கால் அதற்கு மேலும் பொறுக்கக்க முடியாது.

“யார் வீட்டுல வந்து.. யார் ரூம் செலக்ட் பண்ணிட்டு இருக்கீங்க.. வெளில ஓடிப்போங்க ரெண்டு பேரும்..!!” என்று ஆத்திரமாக கத்தி அவர்களை விரட்டுவான்.

மற்றவர்கள் இப்படி என்றால், ப்ரியாவின் அணுகுமுறை வேறு மாதிரி இருந்தது. அசோக் குடும்பத்தார் அனைவருடனும் ஏற்பட்டிருந்த ஸ்னேஹம் அவளுக்கு ஒரு புது தைரியத்தை அளித்திருந்தது. அசோக் தன்னை காதலிக்கிறான் என்பது உறுதிப்பட்டு போனதால், அதிரடியாகவே அவனை அணுகினாள். எப்படி என்றால்..

அன்று.. அசோக்குக்கு கை உடைந்து போய் இரண்டு வாரங்களுக்கு மேல் கியிருந்தது. இரண்டு வாரங்களாக மழிக்கப்படாத தாடி சொரசொரவென அவனுடைய தாடையில் உறுத்தியது. ஒற்றை கையுடனே ஷேவ் செய்துகொள்ள கிளம்பினான். சோப்பு நுரையை முகத்தில் தடவிவிட்டு நிமிர்ந்தபோது, அறை வாசலில் நிழலாட, நிமிர்ந்து பார்த்தான். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு ப்ரியா நின்றுகொண்டிருந்தாள். நுரை பொங்கும் இவனுடைய முகத்தையே, கண்களில் ஒரு குறும்பு கொப்பளிக்க பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் அவளை பார்த்து ஒரு ஏளனப் பார்வையை வீசிவிட்டு, ரேசர் எடுத்து கன்னத்தில் இழுத்துக்கொள்ள ஆரம்பித்தான்.

ஒற்றை கையுடன் ஷேவ் செய்து கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பது ஓரிரு இழுப்பிலேயே அவனுக்கு புரிந்து போனது. அடர்த்தியாய் வளர்ந்துவிட்ட மயிர்கள் ப்ளேடுக்குள் சிக்கி வெட்டுப்பட மறுத்தன. அவஸ்தையாய் நெளிந்த அவனுக்கு உதவி செய்ய ப்ரியா முன்வந்தாள்.

“குடு.. நான் பண்ணி விடுறேன்..!!” என்றாள் அன்பாக.

“வேணாம் விடு.. நானே பண்ணிக்கிறேன்..!!” அசோக் சலிப்பாக சொன்னான்.

“ப்ச்.. குடுன்றேன்ல..?? இது ஜஸ்ட் ஒரு ஃப்ரண்ட்லி ஹெல்ப்.. இதுக்காகலாம் உன்கிட்ட இருந்து ஸ்பெஷலா எதுவும் எதிர்பார்க்க மாட்டேன்..!!”

“வே..வேணாம் ப்ரியா..!!”

“அடச்சை.. குடுடா..!!”

ப்ரியா அவன் கையில் இருந்த ரேசரை பிடுங்கிக் கொண்டாள். அசோக் முகத்தை உர்ரென்று வைத்தவாறு நின்றிருக்க, இவள் அவனுக்கு சவரம் செய்துவிட ஆரம்பித்தாள். ஒரு கையால் அவனுடைய கன்னத்து தோலை அழுத்தி பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் ரோமங்களை நுரையுடன் சேர்த்து அழகாக மழித்தெடுத்தாள். ப்ரியாவின் அருகாமை அசோக்கிற்கு ஒரு கிறக்கத்தை கொடுக்க ஆரம்பித்தது. அவளுடைய மேனியில் இருந்து வந்த இனிய வாசனை அவனது நாசியில் போதையாய் ஏறியது. தேனில் ஊறிய செர்ரி துண்டுகளாய் அவளுடைய உதடுகளை க்ளோசப்பில் பார்த்து, அவனுடைய இதயத்துடிப்பு படபடவென எகிறிக்கொண்டிருந்த போதுதான்..

15

“மொகரையை கொஞ்சம் லிஃப்ட் பண்ணு..!!” என்றாள் ப்ரியா.

அசோக் தன் தலையை உயர்த்தி தாடையின் அடிப்பாகத்தை அவளுக்கு காட்டினான். அவனுடைய மோவாயில் இருந்து கீழ்நோக்கி ரேசரை ஓட்டிவந்த ப்ரியா, சரியாக அவனது தொண்டைக்குமிழ் வந்ததும் நிறுத்தினாள். அதே நேரம் அவளுடைய இன்னொரு கையால் அசோக்கின் பின்னந்தலையை தாங்கி பிடித்துக் கொண்டாள். அசோக்கிற்கு ஒன்றும் புரியவில்லை.

“ஏ..ஏய்.. என்னாச்சு..??” தொண்டைக்குமிழ் அசையாத வண்ணம் மிக சிரமப்பட்டு பேசினான்.

“எங்க.. சொல்லு பார்ப்போம்..!!” என்றாள் ப்ரியா.

“சொ..சொல்லவா..?? என்ன சொல்ல..??”

“ஐ.. லவ்.. யூ..!! சொல்லு பார்ப்போம்.. ஐ.. லவ்.. யூ..!!” குழந்தைக்கு பேச சொல்லி தருவது போல ப்ரியா சொல்ல, அசோக் இப்போது டென்ஷன் ஆனான்.

Comments

Scroll To Top