ஐ ஹேட் யூ பட் – 23

(Tamil Hot Stories - I Hate U But 23)

Raja 2013-10-21 Comments

Tamil Hot Stories – “காட்டுறேன்.. நீ நெனைக்கிற அளவுக்கு நான் கேவலமானவன் இல்லன்னு காட்டுறேன்..!!”

அசோக் தன் பாக்கெட்டில் இருந்த செல்போனை அவசரமாய் எடுத்தான். ராஜேஷின் நம்பருக்கு கால் செய்தான். அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் ப்ரியா திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள். ராஜேஷ் காலை பிக் செய்து ஹலோ சொல்வதற்கு முன்பே..

“ஏய்.. எனக்கு அர்ஜண்டா ஒரு பொண்ணு வேணும்..!!” என்றான் அசோக் அவசரமாய்.

“டேய்.. நான் ராஜேஷ்டா.. உன் அண்ணன்..!!” அடுத்த முனையில் ராஜேஷ் பதறினான்.

“ஆமாம்.. அதுக்கு என்ன..??” அசோக் புரியாமல் கேட்டான்.

“இல்ல.. திடீர்னு கால் பண்ணி அர்ஜண்டா பொண்ணு வேணும்னு சொல்றியே.. அதான்.. வேற யாருக்கும் பண்ண வேண்டிய காலை எனக்கு பண்ணிட்டியோன்னு..!!”

“அடச்சை..!! நான் கல்யாணம் செஞ்சுக்குறதுக்கு சொன்னேன்டா..!!” அசோக் ராஜேஷிடம் சொல்ல, ப்ரியா இப்போது அசோக்கை உஷ்ணமாக முறைத்தாள்.

“அதான்.. நீயே பாத்துக்குறேன்னு சொல்லிட்டியே..??”

“ஆமாம்.. அப்படித்தான் சொன்னேன்.. ஆனா நான் பாத்தது ஒன்னும் சரி இல்ல.. எல்லாம் திமிர் புடிச்சவளுகளா இருக்காளுக..!!” அசோக் ப்ரியாவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னான்.

“ஓஹோ..!!”

“நீ என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது.. கூடிய சீக்கிரம் எனக்கு ஒரு பொண்ணு பாக்குற..!! நீ யாரை கொண்டு வந்து நிறுத்தினாலும்.. நான் அவ கழுத்துல தாலி கட்டுறேன்.. அது யாரா இருந்தாலும் சரிதான்..!! எல்லாம் உன் இஷ்டந்தான்.. புரியுதா..??”

“சரிடா சரிடா.. புரியுது..!! நான் பாத்துக்குறேன்.. விடு..!!”

அசோக் காலை கட் செய்தான். ப்ரியாவை ஏறிட்டு எகத்தாளமாய் ஒரு பார்வை பார்த்தான். ப்ரியா அசோக் மீது எழுந்த கோவத்தில்.. வேகவேகமாக மூச்சு விட்டதில்.. அவளுடைய மார்புகள் விம்மி விம்மி சுருங்க.. இவனையே முறைத்து பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள்..!! ஒரு சில வினாடிகள் இருவரும் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க.. அப்புறம் அசோக் ‘ஹ்ம்ம்..’ என்று சலிப்பாக சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். ப்ரியா அவன் போவதையே ஆத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதே நேரம்.. அங்கே அசோக்கின் வீட்டில்.. ராஜேஷ் தலையை சொறிந்தவாறு அமர்ந்திருந்தான்..!! தம்பி சொன்ன வார்த்தைகளை நம்புவதற்கு.. அவனுக்கு நிறைய நேரம் பிடித்தது..!! ஒரு வழியாய் நம்பிக்கை வந்ததும்.. என்ன செய்யலாம் என்று யோசித்தான்..!! ‘உடனே வேண்டும் என்று வேறு சொல்கிறானே.. இப்போதுதான் அவனுக்கு நான் அண்ணன் என்ற மரியாதையே வந்திருகிறது.. இந்த வாய்ப்பை விடக்கூடாது.. உடனடியாய் இவனை அமுக்கிப் போட வேண்டும்..’ என்று நினைத்தவன், கையிலிருந்த செல்போனை எடுத்து காண்டாக்ட் லிஸ்டில், அவன் எப்போதோ ஸேவ் செய்து வைத்திருந்த ஒரு நம்பரை இப்போது தேடினான். தேடிய நம்பர் கிடைத்ததும் கால் செய்து காதில் வைத்துக்கொண்டான். அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்படும் வரை காத்திருந்தான். பிக்கப் செய்யப்பட்டதும்..

“ஹலோ.. மிஸ்டர் வரதராஜன்..??” என்றான்.

அத்தியாயம் 14

அசோக்கிற்கு திகில் படங்கள் பார்ப்பதென்றால் அலாதி ப்ரியம்..!! அதுவும் நள்ளிரவில்.. கும்மிருட்டுக்குள்.. தனியாக அமர்ந்து பார்க்கவேண்டும்..!! தனது லேப்டாப்பில்.. ஆங்கில மொழியில் வெளியான பேய்ப்படம் ஒன்றை ஓட விட்டு.. காதுக்கு ஹெட்ஃபோன் கொடுத்து.. கண்களிலும் இதயத்திலும் பயம் நிரம்பி வழிய வழிய.. ஒருவித பதைபதைப்புடன் பார்க்கவேண்டும்.. பார்க்கும்போதே இதயம் படக் படக்கென பதறி துடிக்கவேண்டும்.. அதில் அவனுக்கு ஒரு ஆனந்தம்..!!

அன்றும் அந்த மாதிரிதான்.. நேரம் நள்ளிரவு 12 மணியை தாண்டியிருந்தது..!! அசோக் தனது படுக்கையில் கால்களை இறுக்க கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்பிருந்த லேப்டாப்பில் புதிதாக வெளியாயிருந்த ஒரு ஆங்கில பேய்ப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அறையின் இரவு விளக்கு கூட அணைக்கப்பட்டிருக்க, லேப்டாப் மட்டுமே செவ்வக வடிவத்தில் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. படம் முழுக்கவே அவ்வப்போது வந்த பயமுறுத்தும் காட்சிகளால் அசோக் திகிலடைந்து போயிருந்தான். இப்போது படத்தின் க்ளைமாக்ஸ் ஓடிக்கொண்டிருந்தது. பார்ப்பவர்களை உச்சபட்சமாய் பயமுறுத்தி பார்க்கிற படலம்..!!

இருண்டு போன பேய் பங்களா ஒன்றில் தனியாக மாட்டிக்கொண்ட கதாநாயகன், ஒரு அறைக்குள் இருந்து வினோத ஒலி கிளம்புவதை கேட்கிறான். சுற்றிலும் இருள் மண்டிக்கிடக்க, கையில் இருக்கும் ஒரு சிறிய விளக்குடன் அந்த அறையை நோக்கி மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கிறான். சிறு ஓசை கூட இல்லாமல் ஒரே நிசப்தமாய் காட்சி நகர, அசோக் அந்த காட்சியுடன் மிகவும் ஒன்றிப்போய் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய விழிகள் விரிந்து போய் லேப்டாப்பை வெறித்துக் கொண்டிருக்க, அவனது இதயம் சுருங்கி விரியும் சப்தத்தை கூட அவனால் தெளிவாக கேட்க முடிந்தது. அப்போதுதான் திடீரென அவனுடைய முதுகுப்பக்கம் கிடந்த செல்போன் வீறிட்டது..!!

“நாக்ரதனா திரனனா தனனா.. தன நாக்ரதனா தன திரனனா திரனா..!!”

‘எந்த நேரமும் பேய் தனது கோர முகத்தை காட்டப்போகிறது..’ என்று திரையையே வெறித்துக் கொண்டிருந்த அசோக், அவனுக்கு பின்பக்கமாக இருந்து செல்போன் திடீரென அலறியதும் அப்படியே குலை நடுங்கிப் போனான். அவனுடைய கட்டுப்பாடின்றியே ‘ஆஆவ்…!!’ என்று கத்திவிட்டான். நாடி நரம்பெல்லாம் இன்ஸ்டண்டாய் ஒரு பய மின்சாரம் ஓட, உடல் உதறல் எடுத்துக் கொண்டது.. குப்பென வியர்த்துப் போனது..!! இருதயம் உச்ச பட்ச வேகத்தில் திடுக் திடுக் என அடித்துக் கொண்டது. மார்பு குபுக் குபுக்கென விரிந்து விரிந்து சுருங்க, மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கினான்.

செல்போன்தான் அடித்தது என்று அவன் புத்திக்கு புரிந்த பின்னும், மிரண்டு போன அவனது இதயம் தனது துடிப்பின் வேகத்தை குறைக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. அவனுடைய உடலில் எழுந்த பய அதிர்வும் அடங்க சில வினாடிகள் பிடித்தன. கண்களை மூடி சுவாசத்தை சீராக்க முயற்சி செய்தான்.

அவனுடைய மனதும் உடலும் ஓரளவு ஆசுவாசம் அடைந்ததும், ‘இந்த நேரத்துல எந்த எழவெடுத்த நாயி..??’ என்று உலகமாக ஆத்திரத்துடன், இன்னும் நடுங்கும் விரல்களாலேயே அவசரமாய் தன் செல்போனை எட்டி எடுத்தான். எடுத்து டிஸ்ப்ளே பார்த்தவன் இன்னும் அதிகமான ஆத்திரத்துக்கு உள்ளானான். ப்ரியா கால் செய்திருந்தாள்..!!

‘ச்ச.. பகல்லதான் பத்திரகாளி மாதிரி அந்த ஆட்டம் ஆடுறான்னா.. ராத்திரிலயும் ரத்தக்காட்டேரி மாதிரி.. இப்படி ஃபோன் பண்ணி கிலியை கிளப்புறாளே..?? மனுஷனை நிம்மதியாவே இருக்க விடமாட்டாளா..??’ என்று பற்களை நறநறவென கடித்தான். அந்த ஆத்திரத்துடனே கால் பிக்கப் செய்து காதில் வைத்தான். ப்ரியா ஹலோ சொல்வதற்கு முன்பே இவன் அவளை கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தான்..!!

“பிசாசு.. பிசாசு.. பேய்.. காட்டேரி..!!”

“ப்ச்.. ஏண்டா திட்டுற..??” அடுத்த முனையில் ப்ரியா எரிச்சலாக கேட்டாள்.

“பின்ன என்ன.. ஃபோன் பண்றதுக்கு உனக்கு வேற நேரமே கெடைக்கலையா..?? நடுச்சாமத்துல ஜகன்மோகினி மாதிரி..!!”

“எ..எனக்கு உன்கிட்ட பேசணும் போல இருந்தது..!!”

“இந்த நேரத்துலயா..??”

“ஹ்ம்ம்..!!”

“ஏன்..??”

“எனக்கு தூக்கமே வரலை..!!”

“ஓ.. தாலாட்டு பாடணுமா நான்..??” அசோக் எரிச்சலும் கேலியுமாய் கேட்டான்.

“இ..இல்ல..!!”

“அப்புறம்..??”

“எ..என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லணும்..!!” ப்ரியா ஒருமாதிரி பரிதாபமான குரலில் சொல்ல, இப்போது அசோக் சற்றே ஆத்திரம் தணிந்தான்.

“எதுக்கு மன்னிப்பு..??” என்றான் கம்மலான குரலில்.

1

“நா..நான்.. சத்தியமா உன்னை ஹர்ட் பண்ணனும்னு இன்னைக்கு காலைல அப்படி சொல்லலடா.. எப்போவும் போலதான் வெளையாட்டுக்கு சொன்னேன்..!! நாம பேசிட்டு இருந்த சிச்சுவேஷன் சரி இல்லாததால.. உனக்கு தப்பா தோணிருச்சு..!! நீயே கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு அசோக்.. உன்னைப்போய் நான் அப்படிலாம் நெனைப்பனா.. எவ கட்டிப்பான்லாம்.. ம்ம்ம்..?? உனக்கு என்னடா கொறைச்சல்..?? உன்னை கட்டிக்க பொண்ணுகலாம் நான் நீன்னு போட்டி போடுவாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்..!!”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. இதை சொல்லத்தான் இந்த நடுராத்திரில கால் பண்ணினியா..??”

“ஆமாம்..!! அப்புறம்.. உன் லீவ் கேன்சல் பண்ணினது கூட நான் வேணும்னு பண்ணல.. எனக்கு வேற வழி தெரியலை அசோக்.. கிரிட்டிக்கல் வொர்க்.. உன்னை விட்ட எனக்கு வேற யார் இருக்கா.. சொல்லு..!! உனக்கு கண்டிப்பா லீவ் வேணும்னா.. பாலாட்ட பேசு.. அவர் ஓகே சொன்னா.. நான் அப்ரூவ் பண்றேன்..!!”

“பரவால.. நான் அவனுக்கு ஃபோன் பண்ணி வர முடியாதுன்னு சொல்லிட்டேன்..!!”

“ஹ்ம்ம்.. எனக்கு இன்னிக்கு பூரா அதே நெனைப்பாவே இருந்தது அசோக்.. நான் சொன்னதை நீ தப்பா எடுத்துக்கிட்டியேன்னு நெனச்சு நெனச்சு.. எந்த வேலையுமே ஓடலை..!! இப்போ படுத்து இவ்வளவு நேரம் ஆகியும் தூக்கமே வரலை.. எவ்வளவு நேரந்தான் சும்மா கண்ணை மூடிட்டே கெடக்குறது..?? அதான்.. உன்கிட்டயே பேசிடலாம்னு தோணுச்சு..!!”

Comments

Scroll To Top