பருவத்திரு மலரே – 20

(paruvathiru malarae 20)

Raja 2014-07-13 Comments

This story is part of a series:

மறுபடி.. காதல் வானில் சிறகடிக்கத் தொடங்கினாள் பாக்யா.
பரத்தின் காதல். . அவளை உல்லாசமாக்கியது. மனதை மயக்கத்தில் ஆழச்செய்தது.

காளீஸின் வீடு. .!!
இருட்டிய பின்னர்தான் வந்தான் பரத்.
”வந்து நேரமாச்சா..?” என பாக்யாவிடம் கேட்டான்.
”ம்..”தலயசைத்தாள் ”ஏன் லேட்டு. .?”
கண் சிமிட்டினான் ”ஒறம்பரை வந்துட்டாங்க..”

”யாரு. .?” முத்து கேட்டாள்.
” சித்திங்க..” என சேரை எடுத்து அவர்கள் பக்கத்தில் போட்டு உட்கார்ந்து கொண்டான்.

பேசிச்சிரித்தவாறு டிவி பார்த்துக்கொண்டிருந்த போது.. சட்டென பவர் கட்டானது.
வீடு இருளில் மூழ்கியது.

”போச்சு. .” என்றாள் முத்து.
” வர்றதுக்கு ஒரு மணிநேரம் ஆகும். .” பரத்.

வீடு இருளில் தத்தளிக்க…பாக்யாவின் தோள் தொடப்பட்டது.
இருட்டுக்குள்ளேயே அவள் திரும்ப… அவள் கன்னத்தில் அழுத்தமான ஒரு…
‘பச்சக்க்க்..’

3

அவள் இருட்டில் தடுமாற… மறுபடி ‘பச்.. பச் ‘ சென இரண்டு முறை முத்தமிட்டு விட்டான்.

காளீஸ் விளக்கை ஏற்றி விட… பரத் எழுந்து வெளியே போனான்.
பாக்யாவுக்கு படபடப்பாகி விட்டது. அதை வெளியே காட்டிக்கொள்ளவே இல்லை.

போன கரண்ட் வரவே இல்லை. அவர்கள் கிளம்பும் நேரமாகிவிட்டது.

”போலாமா.. பாகீ..! நேரமாகிருச்சு..” எனக் கேட்டாள் பாக்யா.
” ம்.. போலாம்..” என்றவள் விடைபெற்றுக் கிளம்பினர்.

சிறிது நேரம் போனதும். ..முத்துவிடம் சொன்னாள் பாக்யா.
” கரண்ட் போச்சில்ல… அப்ப ஒன்னு நடந்துச்சு..”
”என்ன. ..?”
”கரண்ட் போனதுமே… பரத் என் தோள்ள கை வெச்சுட்டான்”
” ஆ… அப்றம்…?”
” போடி…” என்றாள் சட்டென வந்த வெட்கத்தால்…!
” ஏய்.. சொல்லுப்பா.. என்ன செஞ்சான்..?” என ஆர்வமாகக் கேட்டாள் பாக்யா.
”பெருசா.. ஒன்னுல்ல…”
”என்ன.. கட்டிப்புடிச்சானா..?”
” ம்..” என்றாள்.
உண்மையில் அவன் கட்டிப்பிடிக்கவே இல்லை.
”ஐயோ. ..”சந்தோசத்தில் கூவினாள் முத்து ”அப்றம்… அப்றம்…?”

–வரும். …!!!!

-உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.. நண்பர்களே..!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top