இதயப் பூவும் இளமை வண்டும் – 34

(IDHAYAPOOVUM ILAMAIVANDUM 34)

Raja 2015-02-20 Comments

This story is part of a series:

”லைன்ல இருங்க…” என எழுந்து கதவைத் திறந்து வெளியே போனான்.
மாடி வெராண்டா காலியாக இருந்தது. எல்லா வீடடுக் கதவுகளும் சாத்தியிருந்தது.
”நீங்க வரலாம்.. இங்க யாரும் இல்ல. .” என்றான்.

”இருதயா வீடு.. சாத்தியிருக்கா.?”

”ம்..ம்ம்..! சாத்திருக்கு..!” அந்த வீடுதான்.. குமுதா வீட்டுக்கு நேர் எதிர் வீடு.

”வரட்டுமா..?”

”வாங்க…”

”யாரும் இல்லையே..?”

”இல்ல வாங்க..”

”அப்படியே.. கீழ யாராவது இருக்காங்களானு பாரு..” என்றாள்.

எட்டிப் பார்த்தான். யாரும் தெண்படவில்லை.
”யாரும் இல்ல.. வாங்க..” என அவன் சொல்ல..

”சரி.. வரேன்.. எதுக்கும்.. வராண்டாலயே நில்லு..! யாராவது தெரிஞ்சா.. அப்படியே மாத்திக்க..! நான் குடுத்ததும் வந்துருவேன்.. ஏதாவது வம்பு பண்ணாத.. என்ன..? ” என்று போனைக் கட் பண்ணினாள்.

சசியும் பயத்துடன்தான் காத்திருந்தான். அண்ணாச்சியம்மா அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.
அடுத்த சில நிமிடங்களில் படியேறி வந்தாள்.
அவள் கையில்.. துணி பக்கெட் இருந்தது. அதற்குள் மூடி வைத்திருப்பாள்.!
அவன் முன்னால் போய் கதவைத் திறக்க.. அவளும் வந்து…சட்டென அவன் பின்னாலேயே நுழைந்து கொண்டாள்.!
கதவைச் சாத்தியதும் நெஞ்சில் கை வைத்து..
”ஹப்பா…” என நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

”உள்ள வாங்க..” என்றான் சசி.

அவள் முகம் கழுவி.. பிரெஷ்ஷாக வந்திருந்தாலும்…அவளது முகத்தில் வியர்வை முத்துக்கள் பூத்திருந்தன.
”யாரும் பாக்கல.. இல்லடா..?” என்றாள்.

”இல்ல.. உள்ள வாங்க…” அவள் பக்கத்தில் போனான் சசி.

”இந்தா.. நீ சாப்பிடு…நான் போறேன்..” என பக்கெட்டுக்குள் இருந்த…துணிகளுக்குள்ளிருந்து.. டிபன் கேரியரை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

வாங்கினான் ”உடனே போகனுமா..?”

”பின்ன.. உன்கூட இருந்து குடும்பம் நடத்த சொல்றியா..?”என்றாள் அண்ணாச்சியம்மா……!!!!!!!

-வளரும்…..!!!!!!

இதயப் பூவும் இளமை வண்டும் – 34

What did you think of this story??

Comments

Scroll To Top