பயில்வான் ராவுத்தர் தாத்தாவும் ஊர் திண்ணையும்

(Payilvan Ravuthar Thathavum Oor Thinaium)

maamu 2018-03-02 Comments

இதை சாலம்மாவோட அனுமதி இல்லாமத்தான் சொல்றேன். அவளும் மறுக்கமாட்டாள். இனி காலம்பூரா அவளுக்கு நானும் எனக்கு அவளும் துணை. அல்லா எங்களை காப்பாத்துவான். உங்களையும் காப்பாத்தட்டும் என்று சொல்லி விட்டு சைக்கிளை எடுத்து கொண்டு சாலம்மா வீட்டுக்கு வந்து அவளை அழைத்து கொண்டு ஊரை விட்டு கிளம்பினார். அதுவரை ராவுத்தர் தாத்தாவாக பார்த்த மொத்த ஏரியாவும் மெளனமாக நின்றாலும் சிலர் கண்களில் கண்ணீர், சிலர் கைதட்டினார்கள். சிலர் ஊர் வரம்பை மீறி வாழ்க கோஷம் போட்டார்கள்.

ராவுத்தர் தாத்தாவோ ஒரு ஹீரோவைப்போல் தன் கம்பீரம் குறையாமல் ஊரை கடந்து போனார். தாத்தா ஊரை விட்டு கிளம்பி போன பிறகு அந்த ஏரியாவை களை இழந்தது. எதையோ இழந்ததைப்போல் தவித்தது. பலர் ஒருவருக்கு ஒருவர் சபித்து கொண்டார்கள். எல்லா பாவத்துக்கும் நீதி கிடைக்காது. நீதி தேவைப்படாத பாவங்கள் செய்தபோது ஏன் சில பாவத்துக்கு மட்டும் நீதி தேடி தங்களை நிந்தித்து கொள்கிறார்கள் என்கிற வாக்கியம் ராவுத்தர் தாத்தா போன பிறகு ஒவ்வொருவர் மனதிலும் வந்து போனது.

அதற்கு பிறகு ஏரியாவில் பல தீர்க்க முடியாத பிரச்சனைகள். சிலர் குழந்தை பேரின்றி வாழாவெட்டியாக ஊரில் வாழ்ந்து வருகிறார்கள். சிலர் பிரச்சனையை தீர்க்க ராவுத்தர் தாத்தாவை ஊர் ஊராக தேடி அலைகிறார்கள். ராவுத்தர் தாத்தா யார் கண்ணிலும் சிக்கவில்லை. சாலம்மாவுக்கே ஆயுசு கணக்கு சொன்ன ராவுத்தர் தாத்தாவுக்கா தன் எதிர்காலம் பற்றிய பயம் வருகிறது.

எங்கேயோ ஏதோ ஒரு ஊரில் பள்ளிவாசல் அருகில் தான் அவர்கள் தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் சத்தியமாக இனி ராவுத்தர் தாத்தா யாருக்காகவும், எதற்காகவும் ஓத மாட்டார். இனி அவர் வாழப்போவது அவர் வாழ்க்கையை மட்டுமே சாலம்மாவோடு…

நன்றி..!

What did you think of this story??

Comments

Scroll To Top