ஜெனி.. ஜெனி.. ஜெனிஃபர்..!! 2
அன்று பிற்பகல் பதினோரு மணி இருக்கும். நான் வாலிபால் கிரவுண்டில் இருந்தேன். பாலை எடுத்துக் கொண்டு சர்வீஸ் போடுவதற்காக கார்னர் சென்ற நான், தூரத்தில் முரளி ஓடிவருவதை பார்த்தேன். முரளி என்னுடைய க்ளாஸ்மேட். அவன் என்னை நோக்கித்தான் வருவது மாதிரி தெரிய, சர்வீஸ் போடாமல் அவனையே குழப்பமாக பார்த்தபடி நின்றிருந்தேன். அவன் மூச்சிரைக்க என் முன்னால் வந்து நின்றபடி சொன்னான்.
“அசோக்.. உன் அம்மா அங்க வந்து பிரச்னை பண்ணிட்டு இருக்காங்கடா..!!”
“எ..என்னடா சொல்ற..? எங்க..?”
“ஸ்டாஃப் ரூம் முன்னால.. ஜெனிஃபர் டீச்சரை.. அசிங்க அசிங்கமா திட்டிட்டு இருக்காங்க..!!”
எனக்குள் உடனே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. வாலிபாலை தூக்கி எறிந்துவிட்டு, ஸ்டாஃப் ரூம் நோக்கி ஓடினேன். முரளி என் பின்னால் ஓடிவந்தான். ஸ்டாஃப் ரூம் முன்னால் ஒரு பெரிய கூட்டமே கூடியிருந்தது. கூட்டத்தை விலக்கிக்கொண்டு நான் உள்ளே நுழைய நுழைய, அம்மாவின் அசிங்கம் பிடித்த பேச்சு, காற்றில் நாராசமாக ஒலித்தது. ஜெனிஃபர் டீச்சர் அவமானத்தில் கூனிக்குறுகிப் போய் நின்றிருக்க, அவள் மீது அமிலத்தில் தோய்த்த வார்த்தைகளை, அம்மா அள்ளி வீசிக் கொண்டிருந்தாள்.
“அரிப்பெடுத்த சிறுக்கி..!! உனக்கு கூடப் படுத்துக்க ஆள் வேணும்னா.. தெருவுல போற எவனையாவது கூப்பிட்டு படுத்துக்க வேண்டியதுதானடி..? உன் அரிப்புக்கு எம்புள்ளைதான் கெடைச்சானா..? வசதியான வீட்டுப் பையன்.. வளைச்சுப் போட்டுக்கலாம்னு பாக்குறியா..?”
“உங்களை கையெடுத்து கும்பிடுறேங்க.. தயவு செஞ்சு அப்டிலாம் பேசாதீங்க.. நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை..!!” டீச்சர் கண்ணீருடன் அம்மாவை கையெடுத்து கும்பிட்டாள்.
– தொடரும்
What did you think of this story??
Comments