ஆண்மை தவறேல் – 22

(Tamil Hot Sex Stories - Aanmai Thavarael 22)

Raja 2013-12-04 Comments

அசோக் அமைதியான குரலில் சொல்லி முடிக்க, நந்தினி தன் கணவனின் முகத்தையே ஒருமாதிரி ஆசையும், ஏக்கமுமாய் பார்த்தாள். அவளுடைய மனதுக்குள் அந்த குரல்.. ‘ஆமாம்.. நானும் அப்படித்தான் நினைத்து இந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தேன்.. ஒரு கணவனாக உன்னிடம் எதையும் எதிர்பார்க்க கூடாது என்ற எண்ணத்துடன்தான் உனக்கு கழுத்தே நீட்டினேன்..!! ஆனால்.. ஆனால் இப்போது.. என்னால் அப்படி இருக்க முடியவில்லை.. என் மனம் அலைபாய ஆரம்பித்து விட்டது.. மயக்கி விட்டாய் என்னை நீ..!! ஓரிரு மாதங்களாய் சேர்ந்திருந்த உன்மீதான நல்ல அபிப்ராயத்துடன்.. நீ என்னை எந்த அளவு காதலித்திருக்கிறாய் என்ற உண்மையும் நேற்று கலந்துவிட.. என் மனம் உன் மீது சாய்வதை என்னால் தடுக்க முடியவில்லை..!! புரிகிறதா உனக்கு..?? இல்லை.. உனக்கு புரியாது.. புரியவே புரியாது..!!’

“ஏய்.. என்னாச்சு.. என் மூஞ்சியையே அப்படி பாக்குற..??” அசோக் கேட்க,

“ஒ..ஒண்ணுல்ல..” நந்தினி வேறுபக்கமாய் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

“கமான் நந்தினி.. நீ இப்படி டல்லா இருக்குறது எனக்கு சுத்தமா புடிக்கலை..”

“இ..இல்லை.. நான் நார்மலாத்தான் இருக்கேன்..”

“நோ..!! உன் முகமே சரியில்ல.. அந்த க்யூட் ஸ்மைல் எங்க போச்சு.. காணோம்..?? ம்ம்ம்..?? கமான் நந்தினி.. சிரி.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!”

அசோக் கெஞ்சவும், நந்தினி வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை உதட்டில் கொண்டு வந்து நிறுத்தினாள். இப்போது அசோக்கும் முகம் மலர்ந்து மெலிதாக புன்னகைத்தான்.

“ம்ம்.. இப்படித்தான் சிரிச்சுட்டே இருக்கணும்.. ஓகேவா..??”

“ஓகே..!!”

“ஃப்ரண்ட்ஸ்..??” சொன்ன அசோக் தனது வலது கையை அவளிடம் நீட்ட, அவளும்

“ஃப்ரண்ட்ஸ்..!!” என்றவாறு அந்தக்கையை பற்றி குலுக்கினாள்.

“நானும் உன்கிட்ட இருந்து எதுவும் எதிர்பார்க்க மாட்டேன்.. நீயும் எங்கிட்ட எதுவும் எதிர்பார்க்க கூடாது.. ரெண்டு பேருக்கும் எந்த பிரச்னையும் இல்ல..!! ஓகேவா..??”

“ஓகே..!!”

குலுக்குவதற்காக கோர்த்துக்கொண்ட அசோக்கின் கையை நந்தினிக்கு விட மனசில்லை. இன்னும் இறுகப் பற்றியிருந்தாள். ஒரு சில வினாடிகள் பொறுத்துப் பார்த்த அசோக், அவனே தனது கையை அவளிடம் இருந்து உருவிக் கொள்ள வேண்டியிருந்தது. கையை உருவிக்கொண்டவன் நந்தினியை ஏறிட்டு வித்தியாசமாக பார்க்க, அவளோ கண்களை இடுக்கி அவனை குறும்பாக பார்த்தாள். அவளுடைய பார்வை அசோக்கை என்னவோ செய்தது. நெடுநேரம் அந்த பார்வையை அவனால் பார்க்க முடியவில்லை. வேறுபக்கமாய் திரும்பிக்கொண்டே சொன்னான்.

“கீழ போலாமா..??”

“இன்னும் ஒன்னே ஒன்னு கேக்கணும்..”

“என்ன..?”

“ஆறு வருஷம் முன்னாடி.. நீங்க என்னை எந்த அளவு லவ் பண்ணுனீங்கன்னு.. கௌரம்மா நேத்து சொன்னாங்க..”

“ஓ..!! நீதான் அந்த பொண்ணுன்னு கௌரம்மாட்ட சொல்லிட்டியா..?”

“இல்ல.. யாரோ ஒரு பொண்ணுன்னு சொன்னாங்க.. நாந்தான்னு அவங்ககிட்ட காட்டிக்கலை..”

“நல்லவேளை..!! நீதான்னு சொல்லிருந்தா.. தேவையில்லாத கன்ஃப்யூஷன்..!! அதுலாம் யாருக்கும் தெரியவேணாம் நந்தினி.. நமக்குள்ளே இருக்கட்டும்..!!”

“ம்ம்.. சரி.. சொல்லலை..!!”

“சரி.. நீ என்னவோ கேட்க வந்தியே.. என்ன..?”

அசோக் ஆர்வமாக கேட்க, நந்தினி அவன் கண்களையே கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்தாள். அப்புறம் மெல்லிய குரலில் கேட்டாள்.

“என்னை பத்தி கௌரம்மாட்ட சொல்றப்போ.. ‘எனக்கு இன்னொரு அம்மா கெடைச்சிருக்கா..’ன்னு சொன்னீங்களாமே.. உண்மையா..?”

ஒருமாதிரி ஏக்கமாய் நந்தினி அந்த கேள்வியை கேட்டாள். அசோக் அந்த கேள்வியை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை. சற்றே திகைத்தான். தடுமாறினான்.

“அ..அது.. அது..”

“சொல்லுங்க அசோக்.. அப்படி சொன்னீங்களா..??”

“ஆ..ஆமாம்.. சொன்னேன்..!! அ..அப்போ எனக்கு அப்படித்தான் தோணுச்சு..!!”

‘இப்போ அப்படி தோணலையா..??’ – இது நந்தினி தன் மனதுக்குள் ஏக்கமாய் கேட்டுக் கொண்டது. அசோக் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

“………………. அப்புறம் அதெல்லாம் இல்லைன்னு ஆயிடுச்சு.. நானும் மனசை தேத்திக்கிட்டேன்.. ‘ரெம்பலாம் ஆசைப்படாத.. ரெண்டு அம்மா போதும் உனக்கு..’ன்னு..!!”

சொல்லிவிட்டு அசோக் சிரித்தான். ஆனால் அதை சொல்லும்போதே அவனுடைய குரலில் ஒருவித சோகம் எத்தனித்ததை நந்தினியால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

‘இவன் ஒரு பெண்ணுடைய அன்புக்காக இன்னும் ஏங்குகிறான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை..!! ஆனால்.. முன்பு அந்த அன்பை வேண்டி.. இவன் என்னிடம் வருகையில்.. அப்போது நான் ஏற்படுத்திய காயம்.. இவன் மனதின் ஆழத்தில் இன்னும் ஒரு ஆறாத ரணமாக இருக்கிறது..!! அதனால்தான் அத்தகைய அன்பே எனக்கு வேண்டாம் என்று அடம் பிடிக்கிறான்..!! இந்த விஷயத்தில் இப்போது அவசரப்படுவது ஆபத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது.. ‘நீ எனக்கு வேண்டாம்..’ என்று இவன் முழுமையாக உதறிவிட்டால்..?? இல்லை.. அவசரப்படாதே.. பொறுமையாக இரு.. கொஞ்சம் கொஞ்சமாய் இவனுக்கு உன் அன்பை புரிய வை.. நிச்சயம் மாறுவான்.. அதுவரை காத்திரு..!!’

மனதுக்குள் ஒரு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த நந்தினி, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தாள்.. இவனை விட்டுப் பிடிக்கலாம் என்ற முடிவு..!! முடிவெடுத்ததும், முகத்தில் ஒரு மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டு, கணவனை பார்த்து புன்னகையுடன் சொன்னாள்.

“ம்ம்.. புரிஞ்சிடுச்சு..!! இப்போ கீழ போலாம்..??” Sunni Oombum Tamil Hot Sex Stories

– தொடரும்

ஆண்மை தவறேல் – 22

What did you think of this story??

Comments

Scroll To Top