கண்ணாமூச்சி ரே ரே – 45

(Tamil Sex Story - Kannamoochi Rae Rae 45)

Raja 2014-06-25 Comments

“எங்க.. அந்தப்புள்ளையை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போய், அப்புறமா நிம்மதியா உக்காந்து சாப்பிடலாம்னு இருந்திருப்ப.. உன் கெட்டநேரம் எங்கிட்ட வந்து மாட்டிக்கிட்ட..!!”

“…………………………………..” ஆதிரா அவரையே மிரட்சியாக பார்க்க, அவர் இப்போது இதழில் ஒரு குரூரப் புன்னகையுடன்..

“இனிமே உனக்கு சாப்பாடு அடுத்த ஜென்மத்துலதான்.. தெரியுமா..??” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டதும், ஆதிராவின் கண்களில் அப்பட்டமான ஒரு பயத்தை காணமுடிந்தது.. உடம்பை ஒருமாதிரி ‘விழுக் விழுக்’கென்று வெட்டிக் கொண்டாள்..!!

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!”

மணிமாறன் இப்போது சற்றே குனிந்து.. ஆதிராவின் மார்புத்திமிறலை ஒருகணம் வெறித்துவிட்டு.. ஒருகையை நீட்டி அவளது கன்னத்தை மென்மையாக தடவினார்.. அவளுடைய முகத்தில் வழிந்திருந்த கூந்தலை ஒழுங்குபடுத்தியவாறே, மிக மிக கூலாக சொன்னார்..!!

“பயப்படாத.. இன்னைக்கே நீ சாகவேணாம்..!! இன்னும் ரெண்டு நாள் இங்கயே இருந்து.. நான் பண்ற சித்திரவதைலாம் நல்லா அனுபவிச்சுட்டு.. அப்புறமா செத்துப்போ..!! நானே உன்னை நல்லவிதமா அனுப்பி வைக்கிறேன்.. சரியா..??”

ஆதிராவின் விழிகள் இப்போது மிரட்சியில் இன்னும் அதிகமாக விரிந்து கொண்டன.. உடலில் ஒருவித நடுக்கம் உற்பத்தியாகி, வெடவெடக்க ஆரம்பித்திருந்தது..!! ஒரு மனநிலை பிறழ்ந்தவனிடம் வகையாக மாட்டிக்கொண்டோம் என்ற நினைவே அவளை சில்லிட்டுப்போக வைத்தது..!!

“ம்ம்ம்… உண்மையை சொல்லனும்னா.. கல்யாணம் ஆகாத கன்னிப்பொண்ணுகளைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஒரு தனிப்ரியம்னு வச்சுக்கயேன்..!! பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கை பிடிச்சுட்டான்னு சொல்வாங்க.. ஹாஹா.. என் விஷயத்துல அவ்வளவு மோசம் இல்ல..!! கன்னிப்பொண்ணுகளை பிடிக்கப்போய், கடைசில கல்யாணம் ஆன உன்னை புடிச்சுட்டு வர்ற மாதிரி ஆய்டுச்சு..!! பரவால.. அவசரத்துக்கு எதோ ஒன்னு..!!”

“………………………………..”

“ஹ்ம்ம்ம்ம்.. நாலஞ்சு மாசம் ஆகிப்போச்சா.. கைலாம் அப்படியே பரபரன்னு இருக்குதும்மா..!!”

மணிமாறன் ஸாலடை சுவைத்துக்கொண்டே.. மிக இயல்பாக, மிக மிருதுவான குரலில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.. அந்த மென்மையான குரலில் ஒலித்த வார்த்தைகளில் மட்டும் அப்படியொரு குரூரம்..!!

“அந்தப்பொண்ணு பேரு தென்றல்தான..?? உன் வீட்டுல வேலை செய்ற பொண்ணுல..??”

“………………………………..” ஆதிரா உடம்பை திமிறி துடித்துக்கொண்டே.. அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள்..!!

“ஹ்ம்ம்ம்ம்… நீ கெடக்கவெண்டிய எடத்துல அவ கெடக்கவேண்டியது.. ஜஸ்ட் மிஸ்..!! எட்டிப் புடிக்கிறதுக்குள்ள தபதபன்னு கீழ எறங்கிட்டா.. எதிர்பாக்கவே இல்ல நான்..!! சரி நம்மளும் எறங்கிறலாம்னு பாத்தா.. ஒரே வழுக்குப்பாறைம்மா.. ஸ்லிப் ஆனா அப்டியே தலை செதறிடும்..!! வயசாகிப்போச்சுல.. தைரியமா எறங்க மனசுல தெம்பு இல்ல..!! சரி எப்படியும் மேலதான வந்தாகனும்னு.. அங்கேயேதான் மரத்துக்கு பின்னாடி நின்னுட்டு இருந்தேன்.. கரெக்டா நீ வந்து மாட்டுன..!! வெளையாடுறதுக்கு எனக்கு ஒரு பொண்ணு கெடைச்சிடுச்சு.. திருப்தியா, சந்தோஷமா இருக்கு..!!”

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!” மணிமாறன் பேசுவதை கேட்டுக்கொண்டே, அவ்வப்போது உதடுகளை பிரிக்க முடியாமல் முனகினாள் ஆதிரா..!!

“என்னடா.. பாக்குறதுக்கு டீசண்டா இருக்கான்.. பக்கா சைக்கோ மாதிரி பேசுறான்னு நெனைக்கிறியா..?? தெரியலம்மா.. நான் இப்படித்தான்.. எனக்கு இந்த வெளையாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு.. என்ஜாய் பண்ணி செஞ்சிட்டு இருக்குறேன்..!!”

“………………………………..” Pundai Nakkum Tamil Sex Story

– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top