அசோக் காலிங் அசோக் – 14

(Tamil Sex Stories - Ashok Calling Ashok 14)

Raja 2014-03-17 Comments

“என்ன மச்சி.. இன்னைக்கு எக்ஸாம்னு சொன்ன..? ஜாலியா பூ.. ம்ம்ம்ம்.. காலாட்டிக்கிட்டு டிவி பாத்துக்கிட்டு இருக்குற..?”

3

“இல்ல மச்சி.. இன்னைக்கு எக்ஸாம் இல்ல..!! சென்டர் இன்னைக்கு லீவாம்.. காலைலதான் கால் வந்தது..!!” அவன் சந்தோஷமாக சொல்ல, சீனியர் தன் வேலையை செய்துவிட்டார் என்று நானும் சந்தோஷமானேன்.

“வேற எங்கயும் வெளில போற மாதிரி ப்ளான் இருக்கா மச்சி..??”

“ஹஹா.. லீவு நாள்ல நான் என்னைக்கு வெளில போயிருக்கேன்..? இன்னைக்கு பூரா ரூம்லதான் இருக்கப் போறேன்.. ஜாலியா டிவி பார்க்கப் போறேன்..!!”

நானும் அவனுடம் அமர்ந்து கிறிஸ்டினாவின் காட்டுக்கத்தலை கொஞ்ச நேரம் கேட்டேன். அப்புறம் லேகா என் அறைக்கே வந்து என்னை பிக்கப் செய்து கொண்டாள். இருவரும் அவளுடைய ஸ்கூட்டியில் கிளம்பினோம்.

முதலில் ஒரு கோயிலுக்கு சென்றோம். அவளுக்கு மிகவும் பிடித்த பிள்ளையார்..!! அப்புறம் அவளுடைய வாட்ச் ஏதோ ஓடவில்லை என்று, ஒரு ஷாப் சென்று ரிப்பேருக்கு கொடுத்தோம். அந்த ஷாப் இருந்த ஷாப்பிங் மாலிலேயே கொஞ்ச நேரம் சுற்றி திரிந்தோம். மதியம் ஒருமணி வாக்கிலேயே ஒரு பிஸ்ஸா உணவகத்தில் புகுந்து கொண்டோம். பிஸ்ஸாவும், கார்லிக் ப்ரெடும், பாஸ்தாவும் என கலவையாக கலந்து கட்டி அடித்தோம். தொண்டையை நனைத்துக் கொள்ள கோக்..!! அப்புறம் அருகிலிருந்த ஐநாக்ஸில் ஒரு ஆங்கில ரொமாண்டிக் காமடி மூவி பார்த்து சிரித்தோம்.

என்னவென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. எப்போதையும் விட, லேகா அன்று ரொம்பத்தான் என்னிடம் இழைந்தாள். கோவிலில்.. கட்டிக்கொண்டவளாட்டம் என் கைவிரல்கள் கோர்த்துக் கொண்டாள். உணவகத்தில்.. உரிமையுள்ளவளாட்டம் பிஸ்ஸா ஸ்லைஸ் ஊட்டி விட்டாள். ஷாப்பிங் மாலில் அவளுடைய தோளில் கை போட்டு, எல்லா இடத்துக்கும் என்னை அழைத்து செல்ல சொன்னாள். தியேட்டர் இருட்டில் தைரியமாக அவளே என் தோள் மீது கை போட்டுக் கொண்டாள். எனது கன்னம், காது, கழுத்து, உதடுகள் என.. சிக்கிய பாகங்களில் எல்லாம் தன் எச்சில் பூசினாள். அவ்வளவு சந்தோஷமாய் அவளை நான் பார்த்ததே இல்லை. அவளிடம் அந்த மாதிரி திகட்ட திகட்ட முத்தம் பெற்றதில், நானும் சற்றே கிறக்கத்தில் இருந்தேன்.

படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இடையில் சீனியரிடம் இருந்து கால் வந்தது. ‘முக்கியமான கால்..’ என்று லேகாவிடம் சொல்லிவிட்டு நான் வெளியே வந்து பேசினேன். தன் திட்டப்படி எல்லாம் நடக்கிறதா என்று சீனியர் விசாரித்து தெரிந்து கொண்டார். ‘ஜானி ரூமில் தான் இருக்கிறானா..?’ என்று ஒருமுறை கால் செய்து செக் பண்ணிக்கொள்ள சொன்னார். நானும் அவனுடய நம்பருக்கு கால் செய்து, அங்குதான் இருக்கிறான் என்பதை கன்ஃபார்ம் செய்து கொண்டேன்.

படம் முடியும்போது நான்கு மணி ஆகியிருந்தது. சுற்றியது போதும், வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம். என்னுடைய ரூமில் என்னை ட்ராப் செய்துவிடுமாறு லேகாவிடம் சொன்னேன். இருவரும் ஸ்கூட்டியில் என் அறையை நோக்கி பறந்தோம். என் அறையை நெருங்க நெருங்கவே, மேலே இருந்த நீல வானம் மெல்ல மெல்ல ப்ளாக் கலரில் மேக்கப் போட்டுக்கொள்ள ஆரம்பித்தது. திரள் திரளாய் கருநிற மேகங்கள், ஒன்று கூடி மீட்டிங் போட்டு, மழை கொட்டுவது பற்றி டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தன.

என் ரூம் இருந்த சந்துக்குள் வண்டி நுழையும்போதே, ‘பட்.!!’ என் ஒரு மழைத்துளி லேகாவின் பட்டு தோளில், பட்டு சிதறியது. பின்பு எனது நெற்றியிலும் ஒரு துளி..!! வீட்டுக்கு முன் ஸ்கூட்டி வந்து நின்றபோது, பொலபொலவென தூற ஆரம்பித்தது..!! வண்டிக்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு, இருவரும் கேட் திறந்து வீட்டுக்குள் நுழையும் முன்னரே, மழை பலமாக வலுத்திருந்தது. பக்கவாட்டில் இருந்த படிக்கட்டுகளில் படபடவென ஏறி, தபதபவென ஓடி, மாடிக்கு செல்லுவதற்குள், சடசடவென பெய்த மழையில் நானும் லேகாவும் தொப்பலாக நனைந்திருந்தோம்.

அவசரமாக ரூம் கதவை உள்ளே தள்ளியவன், அது திறக்காதது கண்டு சற்றே அதிர்ந்து போனேன். கதவு தாழிடப் பட்டிருப்பது அப்புறம்தான் உறைத்தது. அப்படியானால்..??? ஜானி ரூமில் இல்லையா..?? இந்த மழைநேரமும் அதுவுமாய் எங்கே போய் தொலைந்தான்..?? எங்கள் திட்டப்படி அவன் ரூமில் இருக்க வேண்டுமே..?? எதுவும் புரியவில்லை எனக்கு..!!

பாக்கெட்டில் இருந்த மாற்று சாவியை தேடி எடுத்து கதவை திறந்தேன். இருவரும் உள்ளே நுழைந்தோம். ஜில்லென்று எங்கள் மேலே ஊற்றிய மழை நீர், இருவரது உடல்களையும் வெடவெடவென நடுங்க செய்திருந்தது. லேகாவின் சிவந்த செர்ரிப்பழ உதடுகள், குளிரில் தடதடத்ததை பார்க்கும்போது, எனக்கு உள்ளுக்குள் என்னவோ செய்தது..!! அவளுடைய முகமெங்கும் முத்துமுத்தாய் மழைத்துளிகள்..!! அவளது கூந்தலிலிருந்து.. ஒரு கற்றை மட்டும் பிரிந்து.. ஈரத்தை சொட்டியபடி.. அந்த அழகு முகத்தின் குறுக்கே கிடந்து ஓடியது..!! ஈரமான இமைகளை அவள் அகலமாக திறந்து கொள்ள.. அவளது கரிய, பெரிய விழிகள் கிறக்கமாய் என் மீது பாய்ச்சிய பார்வை.. என் மூளையை ஊடுருவ.. என் ஹார்மோன்களை ஹார்மோனியம் வாசிக்க சொல்லி.. அந்த அறிவுகெட்ட மூளை கட்டளையிட்டது..!!

“தலையை தொவட்டிக்கோ லேகா..”

நான் ஒரு டவலை எடுத்து, அவளை நோக்கி தூக்கிப் போட்டேன். அவளும் கேட்ச் பிடித்து, தன் கூந்தல் ஈரத்தை அந்த பூந்துவாலையில் ஏற்றினாள். அவள் ஹாலில் இருந்து தலை துவட்டிக் கொண்டு இருக்க, நான் எனது அறைக்குள் புகுந்தேன். ஈரம் சொட்டிய டி-ஷர்ட்டையும், ஜீன்சையும் அவிழ்த்து போட்டுவிட்டு, பனியன், லுங்கிக்கு மாறினேன். இன்னொரு டவல் எடுத்து எனது தலையை துவட்டிக் கொண்டே வெளியே வந்தேன்.

லேகா துவட்டி முடித்தும், இன்னும் ஈரமாக நின்றிருந்தாள். நான் வெளிப்பட்டதும், என்னையே ஒருமாதிரி வெறித்த பார்வை பார்த்தாள். எனது கைகள் ரெண்டும் மேலே உயர்ந்திருக்க.. எனது புஜங்களின் தசைகள் திரண்டு துடித்துக் கொண்டிருக்க.. அங்கேதான் அவளது பார்வை நிலைத்திருந்தது…!! ஆசையாக, ஏக்கமாக பார்த்தாள்..!! நான் அவள் முன்னே கை நீட்டி அசைத்து அவளது கவனத்தை கலைத்தவாறே கேட்டேன்.

“ஹேய்.. லேகா.. என்னாச்சு..???”

“ஒ..ஒண்ணுல்ல அசோக்..!!

“அப்புறம் ஏன் அப்படி பாக்குற..?”

“ம்ம்ம்ம்… சூச்சூ..!!” என்றாள்

“என்னது..???” எனக்கு புரியவில்லை.

“சூச்சூ போகணும்டா..!!”

அவள் ஒருவித முக சுளிப்புடன், ஒருகையின் எல்லா விரல்களையும் மடக்கி, சுண்டு விரலை மட்டும் காட்ட, உடனே எனக்கு புரிந்து போனது.

“ஓ..!!”

என்று ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தவன், அவளை என் அறைக்கு அழைத்து சென்றேன். உள்ளே அறையோடு அட்டாச் ஆகியிருந்த டாய்லட்டை நோக்கி கைநீட்ட, அவள் அதை நோக்கி நகர ஆரம்பித்தாள். நான் கதவை சாத்தி வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினேன். இன்னும் ஈரமாக இருந்த தலையை பரபரவென துவட்டினேன். அப்போதுதான் என் செல்போன் ரிங் டோன் ஒலித்தது. யார் அது இந்த நேரத்தில்..?? எடுத்து பார்த்தேன்..!! சீனியர்..!!!!!!

செல்போனை எடுத்துக் கொண்டு, பால்கனிக்கு வந்தேன். பின்னால் லேகா வருகிறாளா என ஒருமுறை பார்த்துக் கொண்டே, பிக்கப் செய்து பேசினேன்.

“சொல்லு சீனி.. என்ன.. கிரெடிட் கார்ட் விக்கிறவன் மாதிரி.. இன்னைக்கு சும்மா சும்மா கால் பண்ணுற..?”

“எல்லாம் ப்ளான் படி நடக்கணுமேன்னு கவலை.. அதான்..!! ஆமாம் எங்க இருக்குறீங்க இப்போ..??”

“இப்போத்தான் ரூமுக்கு வந்தோம் சீனி.. இங்க ஒரே மழை..”

“ம்ம்ம்.. எனக்கும் நல்லா ஞாபகம் இருக்கு ஜூனி.. மறக்க கூடிய நாளா அது..?? ம்ம்ம்ம்… வேற ஒரு பிரச்னையும் இல்லையே..??”

“அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல சீனி.. எல்லாம் ஸ்மூத்தா போயிட்டு இருக்கு..!! இந்த ஜானிப்பயலைத்தான் ஆளைக் காணோம்.. எங்கே போனான்னு தெரியலை..!!”

நான் சொல்ல சொல்ல, சீனியரின் முகம் இப்போது குப்பென ஒரு பலத்த அதிர்ச்சிக்கு போனது..!! விழிகளை அகலமாய் விரித்து.. வாயை ‘ஓ’வென திறந்து.. மிரண்டு போனவராய் காட்சியளித்தார்..!! பதறிப்போன குரலில் கேட்டார்..!!

“டேய்.. என்னடா சொல்ற..? ஜானி இல்லையா..??”

“ஆமாம் சீனி.. ஆளைக்காணோம்..”

“ஐயோ… அவன் ரூம்ல இருக்குறதுதானடா நம்ம ப்ளானே..?? அப்புறம் என்ன.. ப்ளான் மசுரு ஸ்மூத் மசுரா போகுதுன்னு சொல்ற நீ..??”

“ஏன் சீனி.. இதுக்கு போய் இப்படி டென்ஷன் ஆகுற..?? அவன் இங்க இருந்து என்ன பண்ணப் போறான்..?”

“ப்ச்.. புரியாதவனா இருக்குறியே..? ஜானி அங்க இருந்தாதான்.. லேகா தயங்குவா.. உன் மேல கை வைக்க மாட்டா..!! அவன் இல்லைன்னா.. அவளுக்கு துணிச்சல் ஜாஸ்தி ஆயிடும்..!! நீ தப்பிக்க முடியாது..!!”

Comments

Scroll To Top