அசோக் காலிங் அசோக் – 11

(Tamil Sex Stories - Ashok Calling Ashok 11)

Raja 2014-03-13 Comments

“ம்ம்ம்ம்… அப்படியா சொல்ற..? ம்ம்ம்ம்…” சொன்ன சீனியர் யோசனையில் ஆழ்ந்தார். அப்புறம் ஏதோ ஐடியா வந்தவர் போல சொன்னார்.

“ஒரு நிமிஷம் இரு ஜூனி.. வந்துர்றேன்..”

3

சீனியருடன் வீடியோ கால்தான் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எழுந்து செல்ல, என்னுடைய செல்போன் வெறும் சேரை மட்டும் இப்போது காட்டியது. ஓரிரு நிமிடங்கள்..!! அப்புறம் சீனியர் அந்த புத்தகத்துடன் அந்த சேரில் வந்து அமர்ந்தார். இல்லை இல்லை.. அது புத்தகம் இல்லை.. டைரி..!! என்னுடைய இந்த வருட டைரியாகத்தான் இருக்க வேண்டும். இதோ.. என் அறையில் புத்தம் புதிதாக இருக்கும் இதே டைரி, சீனியரின் கையில் பழுப்பேறிப் போய் பழசாய்..!! சீனியரிடம் ஆர்வமாக கேட்டேன்.

“சீனி.. அது நம்ம 2011 டைரிதான..?”

“ஆமாம் ஜூனி.. இதுல நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.. ஏதாவது ஐடியா கெடைக்குதான்னு பாக்கலாம்..!!”

சீனியர் சொல்லிவிட்டு டைரியில் எழுதியிருப்பதை வாசிக்க ஆரம்பித்தார். நான் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். நாளைக்கு அந்த டைரியில் நான் எழுதப் போவதை, இப்போது சீனியர் என் கண்முன்னே வாசித்துக் கொண்டிருந்தார். வாசிக்க வாசிக்க, காக்காவுக்கு மேக்கப் போட்டிருந்த மாதிரியான அவருடைய முகம் மேலும் கருத்தது. ஒருமாதிரி கவலை தோய்ந்த முகத்துடன் என்னை நிமிர்ந்து பார்த்தார்.

“என்னாச்சு சீனி..?” நானும் அவருடைய கவலை தொற்றிக் கொண்டவனாய் கேட்டேன்.

“நாளைக்கு ரொம்ப ரொம்ப டேஞ்சரான நாள் ஜூனி..” அவர் சொல்ல,

“என்னய்யா சொல்ற..?” இப்போது என்னையும் லேசாக பதற்றம் பற்றிக் கொண்டது.

“இப்போ இதை படிச்சதும்தான் எனக்கு நெறைய விஷயம் புரியுது..”

“என்ன புரியுது..?”

“இன்னும் ரெண்டு நாள்ல உனக்கு பேராப்பு வரப் போகுதுல..?”

“வரப்போகுதுன்னு முடிவே பண்ணிட்டியா..? சரி சொல்லு..!!”

“அந்த பேராப்புக்கு புள்ளையார் சுழி போட்ட மேட்டர் நாளைக்குத்தான் நடக்கப் போகுது..!!”

“யோவ்.. இது காமடி கதைன்ற நெனைப்பு கொஞ்சமாவது உங்களுக்கு இதுக்குதாயா..? ஏதோ.. பெரிய த்ரில்லர் ஸ்டோரி ரேஞ்சுக்கு.. இந்த பில்டப்பு கொடுக்குறீங்களே..? நாளைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுய்யா..!!”

“என்ன நடக்கப் போகுதுன்றது முக்கியம் இல்ல ஜூனி.. அதை நாம எப்படி அவாய்ட் பண்றோம்ன்றதுதான் முக்கியம்..!!”

“சரி.. அதை எப்படி அவாய்ட் பண்ணனும்னாவது சொல்லித்தொலை..!!”

“நான் சொல்றேன்.. ஆனா அதை கேட்டுட்டு நீ சிரிக்க கூடாது..!!”

“ஐயோ.. சிரிக்கலைப்பா.. சொல்லு..!!”

“நீ நாளைக்கு காலேஜுக்கு போறப்போ..”

“ம்ம்.. காலேஜுக்கு போறப்போ..??”

“ஜட்டி போட்டுட்டு போகணும்..!!!”

“என்னது..?????” காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாதவனாய் நான் ஒரு முகச்சுளிப்புடனே கேட்டேன்.

“நீ ஜட்டி போட்டுட்டு போகணும்..!!!”

சீனியர் அழுத்தம் திருத்தமாக சொன்னார். அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, பட்டென கால் கட்டாகி என் செல்போன் ஸ்க்ரீன் இருண்டது. ஐயையோ..!! என்ன இது..?? கால் ஏன் கட் ஆகிவிட்டது..?? சீனியர் கட் செய்தாரா..?? இல்லை வேறு ஏதும் ப்ராப்ளமா..?? எனக்கு எதுவும் புரியவில்லை..!! ஒரு அரை மணி நேரம் இருக்கும்.. நான் வெற்று ஸ்க்ரீனை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். சீனியரிடம் இருந்து திரும்ப கால் வருமென்று காத்திருந்தேன். ஆனால் கால் வரவே இல்லை..!! காது வரை கிழியும் கொட்டாவியுடன் தூக்கம்தான் வந்தது..!! எந்தக்கவலையும் இல்லாமல் வாய் பிளந்தவாறு உறங்கிப் போனேன்.

காலையில் எழுந்த போதுதான் சீனியர் சொன்னது ஞாபகம் வந்தது. இன்று பிரச்னையான நாள் என்ற உண்மை உறைத்தது. என்ன பிரச்னை என்று எனக்கு தெரியாது. ஆனால் அந்த பிரச்னையில் இருந்து தப்பிக்கும் உபாயம் என்னுடைய ஜட்டி என்பது மட்டும் தெரியும். என்னிடம் மொத்தம் ஐந்து ஜட்டிகள் உண்டு. ஐந்துமே VIP..!! ப்ளூ கலரில் ரெண்டு.. பிரவுன் கலரில்… சரி சரி.. அந்த டீட்டெயில் எல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறேன்..!! அதில் ஏதாவது ஒன்றை இன்று அணிந்து செல்லவேண்டும்.. அவ்வளவுதான்..!! அதுதான் எனது இன்றைய லட்சியம்..!!

எங்கள் ரூமை ஒட்டியிருக்கும் பால்கனியில் ஒரு கொடி கட்டியிருப்போம். அதில்தான் துணிகளை எல்லாம் காயப் போடுவது. என்னுடைய ஜட்டிகள் எல்லாம் அங்குதான் தொங்கும். குளித்து முடித்து வெளியே வந்து, அந்த கொடியை பார்த்தவன் நிஜமாகவே ஷாக்காகி போனேன். நேற்று இரவு பெய்த பலத்த மழை அப்போதுதான் எனக்கு நினைவிற்கு வந்தது. என்னுடைய நான்கு ஜட்டிகள் மழையில் நனைந்து போய், தலை துவட்டி விட ஆளில்லாமல் ஈரமாக தொங்கிக் கொண்டிருந்தன. பொலபொலவென கண்ணீர் கொட்டியபடி பரிதாபமாக காட்சியளித்தன.

ச்சே..!! என்ன கொடுமை இது..??? ஈரத்துடன் இருக்கும் இவைகளை எப்படி அணிந்து செல்வது..??? நான் சில வினாடிகள் எரிச்சலும் சலிப்புமாய், என் ஈர ஜட்டிகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நேற்று அணிந்து சென்ற ஜட்டியை, கல்லூரி முடிந்து வந்ததும், சேரில் கழட்டி வீசியது ஞாபகம் வந்தது. சீனியர் எச்சரித்திருக்கிறார்.. ஜட்டி அணிந்து செல்ல வேண்டும் என்று..!! அழுக்கு ஜட்டியாக இருந்தாலும் பரவாயில்லை.. அணிந்து செல்லலாம் என்று முடிவுக்கு வந்தேன்.

ஹாலுக்கு சென்றேன். நேற்று கழட்டிப்போட்ட அந்த சேரில் என் ஜட்டியை தேடினேன்.. தேடினேன்.. தேடினேன்… காணோம்..!!!! ஐயையோ.. என்ன இது..?? எங்கே போனது என் ஜட்டி..?? நேற்று இங்கேதானே கழட்டிப் போட்டேன்..?? அதற்குள் எங்கே சென்றிருக்கும்..?? ஒன்றுமே புரியவில்லை..!! ச்சை.. காலேஜுக்கு ஒரு ஜட்டி அணிந்து செல்வதில் இவ்வளவு கஷ்டமா..??

நான் உச்சபட்ச எரிச்சலில் இருக்கும்போதே, ஜானி அறைக்குள் நுழைந்தான். அவன் கையில் எங்கள் இருவருக்குமான காலை டிபன் பார்சல்..!! நான் எதையோ தேடிக்கொண்டிருந்ததை பார்த்தவன், பார்சலை தரையில் வைத்தவாறே ஆர்வமாக கேட்டான்.

“என்ன மச்சி தேடினு இருக்குற..?”

“என் ஜட்டிடா..!! நைட்டு இங்க கழட்டிப் போட்டேன்.. இப்போ காணோம்..!! எங்க போச்சுன்னு தெரியலை..!!”

“ஓ..!! அது உன் ஜட்டியா..??” அவன் இப்போது சற்றே ஷாக்கான மாதிரியான வாய்சில் கேட்டான்.

“ஆமாம்.. ஏன்.. பாத்தியா நீ..?”

நான் தேடுவதை விட்டுவிட்டு அவன் முகத்தை ஏறிட்டபடி கேட்டேன். அவன் இப்போது இனிமா குடித்த குரங்கு மாதிரி விழித்தான். அப்புறம் ‘ஹிஹிஹி…’ என அசட்டுத்தனமாய் ஒரு இளிப்புடன் சொன்னான்.

“ஸாரி மச்சி..”

“ஸாரியா..? எதுக்கு ஸாரி..”

“அது என் ஜட்டினு நெனச்சு எடுத்து போட்டுக்கினேன் மச்சி… கோவிச்சுக்காத..!!”

அவ்வளவுதான்…!! அப்போது மட்டும் என் கையில் ஒரு உருட்டுக்கட்டை இருந்திருந்தால், அவனை அடித்தே கொன்றிருப்பேன். அந்த அளவுக்கு அவன் மேல் ஆத்திரம்..!! இரண்டு வருடங்களாக இந்த நாயை ரூம் மேட்டாக வைத்துக் கொண்டு, இம்சையை தவிர வேறு ஏதாவது நான் அனுபவித்திருக்கிறேனா..? எங்கிருந்துதான் என் வாழ்வில் வந்து நுழைந்ததோ இந்த எடுபட்ட நாய்..!! ஆத்திரத்துடன் கத்தினேன்..!!

“த்தா..!! மானங்கெட்ட மடக்கூ…!! அறிவில்ல உனக்கு..? இத்தனை நாளா என் பேன்ட், ஷர்ட்லாம் எடுத்து போட்டுக்கிட்ட.. இப்போ ஜட்டியையும் போட ஆரம்பிச்சுட்டியா..?? கேடு கேட்ட கேனைக்கூ..!!”

“ஏன் மச்சி திட்டுற..? நான்தான் தெரியாம போட்டுட்டேன்னு சொல்றேன்ல..?”

“அப்டித்தாண்டா திட்டுவேன்.. அறிவுகெட்ட முட்டாக்கூ..!! சோத்தைத்தான திங்கிற..??” நான் கண்ணா பின்னாவென்று திட்ட ஆரம்பிக்க, இப்போது ஜானியும் கடுப்பானான்.

“என்ன மச்சி.. ரொம்ப ஓவராத்தான் திட்டுற..? இந்தா உன் ஜட்டி.. நீயே வச்சுக்கோ.. என்ஜாய் பண்ணு..!!”

சொன்னவன் பட்டென்று குனிந்து, லுங்கிக்குள் கைவிட்டு, என் ஜட்டியை அவிழ்த்து வீசினான். என் முகத்தை நோக்கி அந்த ஜட்டி பறந்து வர.. விஷ வாயு தாக்கிவிடக் கூடாதென்று.. விலகிக்கொண்டேன் நான் அவசரமாக..!! அவன் அவிழ்த்து வீசிவிட்டு, ஆத்திரத்துடன் அவனுடைய ரூமுக்குள் புகுந்து கொண்டான்.

நான் தலையை திருப்பி கீழே கிடந்த என் ஜட்டியை பார்த்தேன். ‘இப்படி செல்லக் கூடாத இடத்துக்கு சென்று வந்துவிட்டோமே’ என்று.. சோகமாக.. சுனங்கிப்போய்.. சுருண்டு கிடந்தது என் ஜட்டி..!! பார்க்கவே பரிதாபமாக இருந்தது..!! இனி இந்த ஜட்டியை வைத்து எப்படி என்ஜாய் செய்வது..? பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி ஈமச்சடங்குதான் நடத்த வேண்டும்..!!

அப்புறம் அன்று ஜட்டி அணியாமல்தான் காலேஜுக்கு சென்றேன். சில நேரங்களில் எனக்கு இந்த மாதிரி நேர்ந்திருக்கிறது… ஜட்டி அணியாமல் செல்வது..!! ஹிஹி…!! என்னவென்று எனக்கு சொல்ல தெரியவில்லை.. அன்றெல்லாம் எனக்கு ஒரு புதுவித உற்சாகமாக இருக்கும்..!! குளுகுளுவென.. ஜிலுஜிலுவென..!!

Comments

Scroll To Top