கண்ணாமூச்சி ரே ரே – 59

(Tamil Kamakathaikal - Kannamoochi Rae Rae 59)

Raja 2014-07-15 Comments

“தாமிராஆஆ.. தாமிராஆஆ..!! அக்காகிட்ட வாடி.. ப்ளீஸ்டி..!!” விட்டத்தை நோக்கி கையை நீட்டியவாறு பிதற்றினாள் மனநிலை பிறழ்ந்த ஆதிரா.

“ஐயோ கடவுளே.. என்னை ஏன் இப்படி சோதிக்கிற..?? ஒரு பொண்ணை பறிச்சுக்கிட்ட.. இன்னொரு பொண்ணை இப்படி ஆக்கிட்டியே..??” தணிகைநம்பி அழுது புலம்பினார்.

“குறிஞ்சி மேல பழியை போட்றலாம் ஐயா.. நானே கண்ணால பாத்ததா சாட்சி சொல்றேன்..!! நம்ம புள்ள பாவம்.. ஏதோ தெரியாம பண்ணிருச்சு.. ஒரு புள்ளையைத்தான் பறிகுடுத்துட்டோம், இன்னொரு புள்ளையையாவது காப்பாத்திக்குவோம்..!! இந்த விஷயம் என்னை விட்டு வெளில போகாது.. நான் பெத்த புள்ளைகளுக்கு கூட சொல்ல மாட்டேன்.. இது சத்தியம்..!!” உறுதியாக சொன்னாள் வனக்கொடி.

“ஆதிராவை இங்க வச்சிருக்குறது நல்லது இல்ல தணிகா.. ஆளாளுக்கு ஏதாவது கேள்வி கேட்பாங்க..!! பேசாம மைசூர் கூட்டிட்டு போய்டு..!!” அறிவுரை சொன்னார் திரவியம்.

மைசூரில் ஒரு மனநல மருத்துவமனையில்.. தரையில் உருண்டு புரண்டு அழுது கொண்டிருந்தது அந்த குழந்தை..!!

“என் பொம்மை.. என் பொம்மை..!!” என்று வீறிட்டது.

“குடுத்துடும்மா.. பாவம்ல அந்த கொழந்தை..!!” கரடி பொம்மையை பிடுங்கி வைத்திருந்த ஆதிராவை கெஞ்சினாள் பூவள்ளி.

“ம்ஹூம்.. குடுக்க மாட்டேன் போ..!! இது என் தாமிரா.. கீழ விழப்போனாளா.. நான் ஓடிப்போய் புடிச்சுக்கிட்டேன்.. என் தங்கச்சியை நான் காப்பாத்திட்டேன்மா..!! என் தங்கச்சியை யார்கிட்டயும் குடுக்கமாட்டேன் போ..!!” பச்சைஉடை அணிந்திருந்த ஆதிரா குழந்தையை போல பேசினாள்.

“இப்போ நல்ல இம்ப்ரூவ்மன்ட் தெரியுது.. சீக்கிரமே முழுசா குணமாகிடுவாங்க.. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!! நீங்க மட்டும் கொஞ்சம் கவனமா பாத்துக்கங்க.. போதும்..!!” மனநல மருத்துவர் ஒருவர் ஆதிராவை வீட்டுக்கு அனுப்பிவைக்கயில் சொன்னது.

“எதுக்கு உன்கிட்ட முகம் குடுத்து பேசணும்.. என் தாமிரா சாகுறதுக்கு காரணமா இருந்தவ நீ.. உன் மூஞ்சில முழிக்கிறதே பாவமா நெனைக்கிறேன்..!!” ஆதிராவிடம் வெறுப்பை உமிழ்ந்த சிபி, அன்றிரவே ஐந்தாவது முறையாக அவள் தற்கொலைக்கு முயற்சிக்க, அடுத்த நாள் ஹாஸ்பிட்டலில்,

“ஸாரி ஆதிரா.. இனிமே அப்படி உன்னை ஹர்ட் பண்ண மாட்டேன்.. என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்..!! இந்தமாதிரிலாம் இனிமே பண்ணாத..!!” என்று அவளது கையை பிடித்துக்கொண்டு கெஞ்சினான்.

“சிபியும் சம்மதம் சொல்லித்தான்மா இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கேன்.. நீ அவன்மேல வச்சிருக்குற பாசத்தை அவன் புரிஞ்சுக்கிட்டான்மா..!! நடந்ததை எல்லாம் மறந்துட்டு புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பி..!!” ஆதிராவிடம் சொன்னார் தணிகைநம்பி.

“இதுலாம் இப்போவே வேணாம் ஆதிரா.. கொஞ்ச நாள் ஆகட்டும்.. நம்ம மனசு இதுக்கு செட் ஆகட்டும்.. வெயிட் பண்ணுவோம்.. சரியா..??” முதலிரவன்று சொன்ன சிபி, உடனே முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.

“யெஸ்..!! கல்யாணம் ஆகி ஒருமாசம் ஆகியும்.. இத்தனை நாளா இதை விட்டு வச்சுட்டோமேன்னு இப்போ ஃபீல் பண்றேன்..!!” ஒருமாதம் கழித்து கன்னத்தில் குழுவிழ சொன்னான்.

“அப்போ.. இன்னொன்னு..??” கேட்டுக்கொண்டே சிபி ஆதிராவின் தோளில் கைபோட, அதே நேரத்தில் ‘படீர்ர்ர்ர்’ என கார்க்கண்ணாடியில் வந்து மோதியது அந்த காகம்..!!

பழைய நினைவுகளில் மூழ்கி திளைத்தவாறு ஆதிரா அமர்ந்திருக்க.. அவளது செல்போன் இப்போது சப்தம் எழுப்பியது..!!

“க்க்க்க்கிர்ர்ர்ர்… க்க்க்க்கிர்ர்ர்ர்…!!”

ஆதிரா கவனம் சிதறி போனவளாய்.. அந்த செல்ஃபோன் மீது பார்வையை வீசினாள்..!! அழைப்பு வந்திருந்த மொபைல் நம்பரை பார்த்ததும்.. மீண்டும் ஒரு பதற்றத்துக்கு உள்ளானாள்..!! அகழி வந்ததிலிருந்து இரண்டுமுறை இவளுக்கு மர்மமான அழைப்பு வந்ததே.. அதே மொபைல் நம்பர்.. ஆதிராவின் பழைய மொபைல் நம்பர்..!! தாமிராவை காப்பாற்ற முனைகையில், அவளுடன் சேர்ந்து குழலாற்றில் வீழ்ந்ததே.. அந்த மொபைலின் நம்பர்தான்..!!

பதற்றமாக காலை பிக்கப் செய்து பேசினாள்..!!

“ஹலோ..!!”

“…………………………….” அடுத்த முனையில் ஒரு நிசப்தம்.

“தா..தாமிராஆஆஆ…!!!” தடுமாற்றமாக அழைத்தாள் ஆதிரா.

“க்க்க்க்ர்ர்ர்ர்ர்… க்க்க்க்ர்ர்ர்ர்ர்… க்க்க்க்ர்ர்ர்ர்ர்… க்க்க்க்ர்ர்ர்ர்ர்…!!!!” – அந்தப்பக்கம் இப்போது ஒரு இரைச்சல்.

“தா..தாமிரா.. அக்காவை மன்னிச்சுடுடி..!!” ஆதிரா தழதழத்த குரலில் கெஞ்சினாள்.

“…………………………….” மறுமுனையில் மீண்டும் ஒரு நிசப்தம்.

“தாமிரா.. தாமிரா..!! தாமிரா.. தாமிரா..!!”

ஆதிரா திரும்ப திரும்ப அழைத்துக் கொண்டிருக்க.. அடுத்த பக்கத்தில் இருந்து இப்போது அந்த வார்த்தைகள் தெளிவாக அவளது காதில் வந்து விழுந்தன..!!

“GGGGGame or SSSSShame..??”

அதைக்கேட்ட ஆதிரா அப்படியே விக்கித்துப் போனாள்.. விழிகளை விரித்து வைத்தவாறு ஒரு சில வினாடிகள் அப்படியே திகைத்துப்போய் அமர்ந்திருந்தாள்..!! இறந்துபோன தங்கையின் எண்ணம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆதிராவுக்கு தெளிவாக.. அவளது கண்களிலும் முணுக்கென்று கண்ணீர் பூத்துக்கொண்டு கன்னம் நனைத்து ஓட.. திக்கித்திணறி சொன்னாள்..!! Kunju Oombum Tamil Kamakathaikal

“Game..!!!!!”

– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top