மலரே என்னிடம் மயங்காதே – 3

(Tamil Kama Stories - Malarae Ennidam Mayangathae 3)

Raja 2014-02-12 Comments

‘டா..டாக்டர்..!! கொழந்தைக்கு என்ன ஆனாலும் பரவால்ல.. என் வொய்ஃபை எப்டியாவது காப்பாத்திடுங்க.. அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா.. என்னால தாங்கிக்க முடியாது..!! ப்ளீஸ் டாக்டர்..!!’

அன்று ஆப்ரேஷன் தியேட்டர் வாசலில் நின்று, அழுகிற விழிகளுடன் அரற்றியது.. இப்போது என் மனதில் பளீரென மின்னல் மாதிரி வெட்டியது..!! மூளை நரம்புகள் அனைத்திலும் இப்போது பலவித குழப்ப எண்ணங்கள், குறுக்கும் நெடுக்குமாய் ஓடின..!! கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். தலையை இருகையாலும் அழுத்தி பிடித்துக் கொண்டேன். குழப்பத்தில் இருந்து விடுபடாமலேயே குழந்தையை மலரிடம் நீட்டினேன். அவள் வாங்கிக்கொண்டதும், சோபாவில் இருந்து எழுந்தேன். முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, வறண்டு போன குரலில் சொன்னேன்.

“நா..நான் வரலை மலர்.. நீ போயிட்டு வா..”

“ஏன்த்தான்..?”

“ப்ச்.. வரலைன்றேன்ல..? விடு..”

“அதான் ஏன்னு கேக்குறேன்..?”

“எ..எனக்கு மனசு சரியில்ல மலர்.. நான் வரலை..”

“அக்காவும் இன்னைக்குத்தான் நம்மை விட்டு போனாளேன்னா..?”

“……” நான் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றேன்.

“பேசுங்கத்தான்..”

“என்ன பேச சொல்ற..?”

“ஓ..!! அப்போ இன்னைக்கு பூரா இப்படித்தான் இருக்கப் போறீங்களா..?”

“என்னால முடியலை மலர்.. கண்ணை தொறந்தாலும் மூடுனாலும்.. கயல்தான் வந்து நிக்கிறா..!!”

“இங்க பாருங்கத்தான்.. அக்கா இறந்தது ரொம்ப கொடுமைதான்..!! இல்லைன்னு சொல்லலை.. ஆனா அதுக்காக அபியை நீங்க பழி வாங்குறது என்ன நியாயம்..??” அவளுடைய குரல் என்னை குற்றம் சாட்டுவது போலிருக்க,

“என்ன சொல்ற நீ..? நான் என்ன பழி வாங்குறேன்..?” நான் இப்போது சூடாக கேட்டேன்.

“பின்ன என்ன..? இவன் முகத்தை பாருங்கத்தான்.. இவன் என்ன பாவம் பண்ணினான்..? இன்னைக்கு இவனோட ஃபர்ஸ்ட் பர்த்டே.. இன்னைக்கு போய்.. நீங்க இப்படி அழுது வடிஞ்சுட்டு உக்காந்திருக்குறது.. கொஞ்சங்கூட நல்லால்ல..!! இவனோட அப்பா நீங்க.. கோயிலுக்கு போய் இவன் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணனும்னு கூட உங்களுக்கு தோணலையா..? அக்கா இறந்தது உங்களுக்கு சோகமா இருக்கலாம்.. ஆனா.. அந்த கோவத்தை தயவுசெஞ்சு அபிகிட்ட காட்டாதீங்க..!!” அவள் படபடவென பொரிந்தாள்.

“எனக்கு யார் மேலயும் கோவம் இல்ல மலர்..!! என் மேலதான் எனக்கு கோவம்..!!”

“ஏன்..?”

“கயல் இறந்ததுக்கு காரணமே நான்தான..?”

“ஐயோ.. ஏன்த்தான் இப்டிலாம் பேசுறீங்க..?”

“உண்மைதான..? அன்னைக்கு நான் மொட்டை மாடில அவ்ளோ நேரம் வேடிக்கை பாத்துட்டு நிக்கலைன்னா.. உன் அக்கா மாடிக்கே வந்திருக்கமாட்டா.. அப்படி ஒரு கொடூரமும் நடந்திருக்காது..!!”

“என்ன பேசுறீங்க நீங்க..? அக்கா இறந்தது ஒரு ஆக்சிடன்ட்..!! ஆக்சிடன்ட்னாலே யார் மேலயும் எந்த தப்பும் இல்லைன்னுதான அர்த்தம்..?? நீங்க ஏன் உங்களை காரணமா நெனச்சுக்கிறீங்க..?? அப்படி பாத்தா.. அன்னைக்கு.. ‘காஞ்ச துணிலாம் எடுத்து வச்சுட்டு போடீ..’ன்னு அக்கா எங்கிட்ட சொன்னா.. நான்தான் ஊருக்கு கெளம்புற அவசரத்துல மறந்துட்டு போயிட்டேன்..!! அப்போ.. அக்கா இறந்ததுக்கு காரணம் நாந்தான்னு நான் சொல்லிக்கவா..?? இல்ல.. ஊர்வலத்தை பாத்துட்டுத்தான அவ்ளோ நேரம் மாடில நின்னீங்க..? உங்களை அவ்ளோ நேரம் அங்க நிக்க வச்ச.. அந்த சாமியை குத்தம் சொல்லலாமா..??”

அவள் சற்றே காட்டமாக கேள்விக் கணைகளை என் மீது வீச, நான் பேச்சிழந்து போனேன். தலையை குனிந்தவாறு அமைதியாக நின்றேன். மலர் சில வினாடிகள் என்னையே பாவமாக பார்த்தாள். அப்புறம் மிக மிக சாந்தமாக தன் குரலை மாற்றிக் கொண்டு சொன்னாள்.

“அத்தான்.. அக்காவை மறக்குறது.. எங்களுக்கும் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்குது..!! ஆனா.. அதையே மனசுல போட்டு கொழப்பிக்கிட்டு.. நீங்க ஒவ்வொரு நாளும் உருகி உருகி..!! உங்களை நெனச்சாத்தான் எங்களுக்கு ரொம்ப கவலையா இருக்கு..!! இப்போவே ஒரு வருஷம் ஆகிப் போச்சு.. இன்னும் எத்தனை நாள்தான் இப்படியே இருக்கப் போறீங்க..?”

“…..”

“நான் சொல்றதை கேளுங்கத்தான்.. கொஞ்சம் கொஞ்சமா மனசை மாத்திக்க முயற்சி பண்ணுங்க.. அக்காவை மறந்துட்டு.. அடுத்து என்னன்னு யோசிங்க..!! அபியை கொஞ்சம் நெனச்சு பாருங்கத்தான்.. அவனுக்காகவாவது நீங்க மாறித்தான் ஆகணும்..!! இன்னைல இருந்து ஆரம்பிங்க.. கெளம்புங்க.. கோயிலுக்கு போயிட்டு வரலாம்..!!”

மலர் நீளமாய் பேசி முடிக்க, நான் உடலில் இருந்த ஜீவன் எல்லாம் வற்றி போனவனாய் பொத்தென்று சோபாவில் அமர்ந்தேன். அபி என்ன நினைத்தானோ, திடீரென வீறிட்டு அழ ஆரம்பித்தான். எனக்கும் மலருக்கும் இடையில் நிலவிய ஒரு இறுக்கமான சூழ்நிலை.. அவனையும் பாதித்திருக்க வேண்டும். அழுகிற குழந்தையை, ‘ச்சோ.. ச்சோ.. ச்சோ..’ என்று முதுகில் தட்டிக்கொடுத்து சமாதானப் படுத்தியவாறே, மலர் நான் எடுக்கப் போகும் முடிவுக்காக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எனது மனம் அவள் சொன்ன வார்த்தைகளையே தீவிரமாய் அசை போட்டுக் கொண்டிருந்தது. அவள் பேச்சிலிருந்த நியாயம் மனதை உறுத்த.. லேசாய் வலித்தது..!!

அபிக்காகவாவது மலர் சொல்வது போல நான் மாறித்தான் ஆகவேண்டும் என்று தோன்றியது. என் மனைவி இறந்ததன் பாதிப்பு என்னோடு போகட்டும். என் மகனுக்கு அந்த பாதிப்பு வேண்டாம். அபி பெரியவனாகும் போது.. ‘தன்னுடைய பிறந்த நாள் என்பது.. தன் தாயின் இறந்த நாளும் கூட..’ என்ற உண்மை அவனுக்கு தெரிய வந்தால், அது எவ்வளவு மோசமான பாதிப்பை அவனுக்குள் ஏற்படுத்தும்..? அவன் பிறந்த தினத்தை அவனே வெறுத்து ஒதுக்குவது எவ்வளவு கொடுமையான விஷயம்..? இல்லை.. அந்த உண்மை அவனுக்கு இறுதி வரை தெரியவே கூடாது..!! ஒரு முடிவுக்கு வந்தவனாய் சோபாவில் இருந்து எழுந்தேன்.

“ரெடியாயிரு.. ஒரு அரை மணி நேரத்துல கெளம்பலாம்..” நான் சொல்லிவிட்டு விடுவிடுவென உள்ளே நடந்தேன்.

“தேங்க்ஸ்த்தான்..” என் முதுகுக்கு பின்னால் மலரின் குரல் சந்தோஷமும், நன்றியும் சரிவிகிதத்தில் கலந்து ஒலித்தது.

அடுத்த அரை மணி நேரம் கழித்து, மூவரும் கோயிலுக்கு கிளம்பினோம். அருகிலேயே இருக்கும் ஒரு விநாயகர் கோயில். காரை விடுத்து நடந்தே சென்றோம். அபியின் பெயரில் அர்ச்சனை செய்தோம். கோயிலில் இருந்த பதினைந்து நிமிடமும், கயல் பற்றிய எண்ணங்கள் என் கவனத்தை சிதைக்காமல் பார்த்துக் கொண்டேன். அபி எந்தக்குறையும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வேண்டும் என்று மனமுருக ஆனைமுகத்தானிடம் வேண்டிக் கொண்டேன். கோயிலை விட்டு வெளியே வந்த போது,

“ஸார்.. வூட்டுக்கார அம்மாவுக்கு ஒரு மொழம் மல்லிப்பூ வாங்கி கொடு ஸார்..”

சொல்லிவிட்டு வெள்ளந்தியாய் சிரித்தாள், அந்த பூ விற்கும் பெண்மணி. நான் சற்றே அதிர்ந்து போனேன். என்னையும் மலரையும், மலர் கையில் இருக்கும் குழந்தையையும் பார்த்து.. நாங்கள் இருவரும் கணவன் மனைவி என்று நினைத்து விட்டாள் போலிருக்கிறது. நான் இப்போது திரும்பி மலரை பார்த்தேன். அவள் ஒரு மாதிரி அவஸ்தையாய் நெளிந்து கொண்டிருந்தாள். எந்த மாதிரி ரியாக்ட் செய்வது என்று கூட புரியாதவள் மாதிரி காட்சியளித்தாள். ஓரிரு வினாடிகள். அப்புறம் நான் மலரை பார்த்து மெலிதாக புன்னகைக்க, இப்போது அவளும் இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தாள்.

“பூ வாங்கிக்கிறியா..?” நான் மலரிடம் இயல்பாக கேட்க,

“இல்லத்தான்.. வேணாம்..” அவள் தயங்கினாள்.

“வெள்ளிக்கெழமையும் அதுவுமா புஷ்பத்தை வேணான்னு சொல்லக் கூடாது தாயி..” பூவை எப்படியும் விற்று விட வேண்டும் என்று, புதிதாய் லாஜிக் எல்லாம் தயாராக வைத்திருந்தாள் பூக்காரி. Mulai Tamil Kama Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top