கண்ணாமூச்சி ரே ரே – 63

(Tamil Kama Stories - Kannamoochi Rae Rae 63)

Raja 2014-07-21 Comments

‘அப்போது.. இங்கே.. அவளை.. அவளை மட்டுமல்ல அவரையும்..’

மனதுக்குள் அந்த எண்ணம் தோன்றியதுமே, மறுபடியும் பரபரப்பானாள் ஆதிரா.. கண்ணில் வழிந்த நீரை துடைத்தவாறு, கையில் டார்ச்சுடன் ஓடினாள்..!! சிங்கமுக சிலையின் பக்கவாட்டு மலைக்கு சென்றாள்.. மலையை குடைந்து அமைக்கப்பட்டிருந்த அந்த குகையை அடைந்தாள்..!! சற்றே குனிந்து பார்த்து, குகைக்குள் டார்ச் அடித்தாள்..!!

வட்டமாக குவிந்த டார்ச் வெளிச்சத்தில்.. குகைக்குள் படுத்திருந்த சிபி பார்வைக்கு வந்தான்..!! மகிழம்பூக்களால் ஆன மலர்ப்படுக்கையில் மகாராஜாவை போல அவனை கிடத்தியிருந்தாள் தாமிரா.. நீண்டதொரு மயக்கத்தில் அவனை ஆழ்த்தியிருந்தாள் என்று தோன்றியது..!! கணவனின் முகத்தை பார்த்ததும் ஆதிராவின் மனதுக்குள் அப்படியொரு உன்னதமான சிலிர்ப்பு.. கண்களில் நீர் முட்டியது.. உடலும், உதடுகளும் படபடத்தன.. பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துவிட்டது என்ற திருப்தி பரவ, அப்படியே ‘ஓ’வென்று அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு..!!

“அத்தான்ன்ன்..!!!” – ஆதிரா அலறிக்கொண்டே சிபியை நோக்கி ஓட,

“விஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்க்..!!!” என்று எங்கிருந்தோ வந்து அவளை இடைமறித்தாள் தாமிரா.

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!” என்று கோரமாக ஒரு சிரிப்பு சிரித்தாள்.

“தாமிராஆஆ..!!” தவிப்பாக சொன்னாள் ஆதிரா.

“அவ்வளவு ஈசியா அவரை எடுத்துட்டு போக விட்டுடுவனா..?? ஹாஹா..!!”

தாமிரா அகங்காரமாக சிரித்தாள்..!! கழுத்தை முறுக்கி நெளித்து, கண்களை விரித்து செவ்விழிகளை உருட்டி காட்டினாள்.. வாயை அகலமாக திறந்து, கூர்பற்களை கடித்து நெரித்து காட்டினாள்.. ‘ஆஆஹ்.. ஆஆஹ்..’ என்று ஆதிராவை கடித்துவிடுவது போல பாய்ந்தாள்.. அக்காவை பயமுறுத்தி பதறவைக்க முயன்றாள்..!!

ஆதிராவோ முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் அசையாமல் நின்றிருந்தாள்..!! முன்பு இதே தாமிரா உயிரோடு இருந்தபோது.. தனது போர்வைக்குள் நுழைந்து முகத்தில் டார்ச் அடித்து தன்னை பயமுறுத்தியதெல்லாம்.. ஆதிராவுக்கு இப்போது ஞாபகம் வந்தது.. உடனே அவளது உதட்டில் ஒரு வறண்ட புன்னகை..!! அப்போதெல்லாம் ‘பேய்.. பிசாசு..’ என்று பதறித்துடித்த ஆதிரா.. இப்போதோ கொஞ்சம்கூட பயமில்லாமல் விறைப்பாக நின்றிருந்தாள்..!!

“போதுண்டி.. நிறுத்து.. உன்னை பார்த்து எனக்கு பயமில்ல..!!” என்று துணிச்சலாக சொன்னாள்.

“பயப்பட மாட்டியா..?? பயப்பட மாட்ட..?? ம்ம்..??” தாமிரா தலையை அப்படியும் இப்படியும் விகாரமாய் அசைத்தவாறு கேட்டாள்.

“பயப்படமாட்டேன்..!! உன்னை பார்த்து நான் ஏன் பயப்படனும்..?? நீ என் தங்கச்சி.. என்மேல உயிரையே வச்சிருந்த என் குட்டித்தங்கச்சி..!!”

ஆதிரா கண்களில் நீர்பனிக்க சொன்னாள்.. அதைக்கேட்டு தாமிராவும் அப்படியே அடங்கிப்போனாள்.. அவளது சீற்றம் வெகுவாக குறைந்து போனது.. ‘உஷ்ஷ்ஷ்.. உஷ்ஷ்ஷ்..’ என்ற பெருமூச்சு மட்டும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது..!!

“வெளையாண்டது போதும் தாமிரா.. அவரை எங்கிட்ட ஒப்படைச்சிடு..!!” ஆதிரா கேட்க,

“முடியாது..!!” தாமிரா மறுத்தாள்.

சற்றே எரிச்சலான ஆதிரா தங்கையின் உருவத்தை மீறி குகைக்குள் செல்ல முயன்றாள்.. அவளால் முடியவில்லை.. பாறையில் மோதியதுபோல பின்புறமாக உந்தித்தள்ளப் பட்டாள்..!! தாமிரா ஒருவித ஆவேசத்துடன் முன்னோக்கி நகர.. ஆதிரா பின்னோக்கி அடியெடுத்து வைத்தாள்.. இருவரும் இப்போது குகையை விட்டு வெளியே வந்திருந்தனர்..!!

“ப்ச்.. எங்கிட்ட இருந்து இன்னும் என்னதான் எதிர்பாக்குற..?? நீ வச்ச கேம்லயும் நான் ஜெயிச்சுட்டேன்.. ப்ளீஸ்.. அவரை விட்ரு..!!”

“கேம் வச்சது அவரை கண்டுபிடிக்கிறதுக்குத்தான்.. கொண்டுபோறதுக்கு இல்ல..!!”

“எ..என்னது..??”

“கொண்டுபோறதுக்கு இன்னொரு கேம்..!!”

“இன்னொரு கேமா..??” தங்கை சொன்னதை கேட்டு ஆதிரா சற்றே கலங்கினாலும்,

“சரி சொல்லு.. என்ன கேம்..??” என்று உடனடியாய் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டுகேட்டாள்.

“அதை நீதான் கண்டுபிடிக்கணும்..!!”

“எ..என்ன சொல்ற.. எனக்கு புரியல..!!”

“என்ன கேம்ன்றதையே நீதான் கண்டுபிடிக்கணும்..!!” சொல்லிவிட்டு தாமிரா விகாரமாக சிரித்தாள்.

“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!” Pundai Kizhikkum Tamil Kama Stories

– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top