நெஞ்சோடு கலந்திடு – 21

(Tamil Hot Stories - Nenjodu Kalanthidu 21)

Raja 2014-01-21 Comments

‘கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான் தானே

அத்தை நான் மேனகைக்கு அத்தை
வா கத்துத் தாரேன் வித்தை
அந்த வித்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே’

உள்ளே நுழைந்த அசோக், அமர்வதற்கு இடம் தேடி.. அந்த மங்கலான வெளிச்சத்தில் அங்குமிங்கும் பார்வையை வீசிக்கொண்டிருந்தான். டிவி பார்ப்பதற்கு வசதியாக.. ஏதாவது காலி இடம் இருக்குமா என அவனது கண்கள் தேடிக்கொண்டிருந்தன. அப்போதுதான் அந்தக்குரல் அவனுக்கு பின்னால் இருந்து உரக்க ஒலித்தது..!!

“ஹலோ.. மிஸ்டர் அரவிந்த்..!!”

குரல் கேட்டு திரும்பி பார்த்த அசோக், பக்கென அதிர்ந்து போனான்..!! அங்கே.. கால்களை அகலமாக விரித்தவாறு.. சோபாவில் ஹாயாக சாய்ந்தவாறு.. வாயிலிருந்து வழியும் புகையுடன்.. அமர்ந்திருந்தான்.. திவாகர்..!!!! எதிரே கிடந்த சோபா காலியாக இருக்க, அவன் முன்பிருந்த டேபிளில் விஸ்கி கிளாசும், தந்தூரி சிக்கனும்..!! அசோக் திவாகரை சுத்தமாக அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை..!! அவனையே திகைப்பாக பார்த்தான்..!! ‘இவன் இங்கே என்ன செய்கிறான்..? சிகரெட் பழக்கம் கூட இருக்கிறதா இவனுக்கு..?’ அசோக் அப்படி திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே,

“இங்க எடம் இருக்கு பாருங்க அரவிந்த்.. இங்க வாங்க..!!”

திவாகர் மீண்டும் அழைத்தான். அசோக் இப்போது தடுமாறினான். ‘செல்லலாமா.. வேண்டாமா..’ என ஒரு சில வினாடிகள் தயங்கியவன், திவாகர் திரும்ப திரும்ப அழைக்க.. வேறு வழியில்லாமல் அவனை நோக்கி நடந்தான். அசோக் திவாகருக்கு எதிரே கிடந்த சோபாவில் அமர்ந்து கொள்ள, திவாகர் இப்போது தன் இதழ்களை அகலமாக விரித்து புன்னகைத்தான்.

“அப்புறம் மிஸ்டர் அரவிந்த்.. எப்படி இருக்கீங்க..?”

“எ..என் பேரு அ..அரவிந்த் இல்ல..” அசோக் தடுமாற்றமாக சொன்னான்.

“அப்புறம்..?”

“அசோக்..”

“அசோக்கா..?? அன்னைக்கு அரவிந்த்னுதான சொன்னீங்க..??”

“இ..இல்லையே.. அ..அசோக்னுதான் சொல்லிருப்பேன்..!!” அசோக் திணறலாய் சமாளிக்க முயல, திவாகர் சிரித்தான்

“ஹாஹா.. சரி விடுங்க..!! I know..!!” .

“What do you know..?”

“I know.. I know everything..!! ஹாஹா..!!”

“இல்ல.. நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியலை..!!” அசோக் சொல்ல, திவாகர் இப்போது பட்டென ஒருமைக்கு தாவினான்.

“இங்க பாரு.. அன்னைக்கு நீ அரவிந்த்னுதான் சொன்ன.. எனக்கு நல்லா தெரியும்..!! நீ ஏன் அப்படி சொன்னன்னு கூட எனக்கு தெரியும்..!!”

“ஏ..ஏன்..?”

“அப்போத்தான நான் ஏதாவது உளறுவேன்.. அதை அப்படியே போய் திவ்யாட்ட போட்டுக் கொடுக்கலாம்..!! என்ன அசோக்.. கரெக்டா..??”

திவாகர் சொல்லிவிட்டு தனது வெண்பற்கள் தெரியுமாறு அழகாக புன்னகைத்தான். அசோக் திகைத்தான்.

“இ..இல்ல திவாகர்.. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க..!!” அசோக் பதற்றமாக சொல்ல,

“ரிலாக்ஸ் அசோக்.. ரிலாக்ஸ்..!! நான் உன்னை இப்போ எதுவுமே சொல்லலையே..? ஏன் பதர்ற..? ம்ம்ம்ம்…??? சரி.. அந்த மேட்டரை விடு..!!” என்ற திவாகர், அந்தப்பக்கமாக திரும்பி,

“டேய்.. வேங்கடேசா..” என்று பேரரை அழைத்தான். உடனே அந்த வெங்கடேசன் இவர்கள் டேபிளை நோக்கி ஓடி வந்தான்.

“சொல்லுங்க ஸார்..” என்றான் பணிவாக.

“ஸாருக்கு என்ன வேணும்னு கேட்டு குடு..!!” திவாகர் அசோக்கை நோக்கி கைநீட்டினான்.

“ம்ம்.. சொல்லுங்க ஸார்..” பேரர் அசோக்கிடம் திரும்பினான்.

“ரெண்டு லார்ஜ்..” அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

“ப்ளண்டர்ஸ் ப்ரைட்.. ஒரு ஸ்ப்ரைட்.. ஒரு ஃப்ரஞ்ச் ஃப்ரை..!! கரெக்டா அசோக்..? ம்ம்ம்.. போய்.. அதை கொண்டு வா வெங்கடேசா..!!” திவாகர் அசோக்குக்கு பதிலாய் ஆர்டர் செய்துவிட்டு, அப்புறம் அசோக்கிடம் திரும்பி இளித்தான்.

“உங்களுக்கு..??” என்று அவனிடம் கேட்ட பேரரிடம்,

“எனக்கு போதும்..!!” என்றான்.

பேரர் ஆர்டர் குறித்துக்கொண்டு நகர, திவாகர் அசோக்கிடம் திரும்பினான். கொஞ்ச நேரம் அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்த்தவன், பின்னர் மிக கேஷுவலான குரலில் சொன்னான்.

“ஆறு மணில இருந்து இங்கயே உக்காந்துட்டு இருக்கேன் அசோக்.. அல்ரெடி அஞ்சு லார்ஜ் ஆகிடுச்சு..!!”

“ஓ..!!”

“உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. தெரியுமா..?” திவாகர் சொல்ல, அசோக் மெலிதாக அதிர்ந்தான்.

“எனக்காகவா..?”

“ம்ம்ம்..!!! நீ வெட்னஸ்டே வெட்னஸ்டேதான் இந்த பாருக்கு வருவியாமே.. வெங்கடேசன் சொன்னான்..!!”

“ஆ..ஆமாம்..!!”

“அதான் ஆறு மணில இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..!! ஆமாம்.. அது என்ன வெட்னஸ்டே கணக்கு..?”

“அ..அது.. அன்னைக்குத்தான் எனக்கு.. நைட் ஆன்சைட் கால் இருக்காது..!! சீக்கிரம் ஆபீஸ்ல இருந்து கிளம்பிடுவேன்..!!”

“ஓஹோ..!! குட்..!! ம்ம்ம்ம்… சாஃப்ட்வேர் இஞ்சினியர்.. இல்ல..??”

“ஆமாம்..!!”

அசோக் சொல்ல, திவாகர் அவன் முகத்தையே கொஞ்ச நேரம் கூர்மையாக பார்த்தான். அப்புறம் தன் தலையை லேசாக கவிழ்த்துக் கொண்டான். கருவிழிகளை மேலே உயர்த்தி அசோக்கையே ஒரு கழுகுப்பார்வை பார்த்தான். குரலை இறுக்கமாக மாற்றிக்கொண்டு, கிசுகிசுப்பாக சொன்னான்.

“ஆனா.. பண்றதெல்லாம் சல்லித்தனமான வேலை..??”

“எ..என்ன சொன்னீங்க..?” அசோக் தன் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்பமுடியாமல் கேட்க,

“நத்திங்.. நத்திங்..!!” திவாகர் வெண்பற்கள் தெரிய சிரித்தான்.

அசோக்கிற்கு அந்த சூழ்நிலை இப்போது ஏனோ அவஸ்தையாக தோன்றியது. திவாகரின் செய்கைகள் அவன் மனதில் லேசாக கிலியை கிளப்பிவிட்டன. ‘எந்த மாதிரியான மனநிலையில் இவன் இருக்கிறான்..? கோபமாக இருக்கிறானா.. இல்லை.. இயல்பாக இருக்கிறானா..? புரியவில்லையே..?? இவன் அழைப்பை ஏற்று இங்கு வந்து அமர்ந்தது தவறோ..? இதனால் ஏதும் பிரச்னை வெடிக்க வாய்ப்புள்ளதோ..? நைஸாக நழுவியிருக்க வேண்டுமோ..? கூடிய சீக்கிரம் இங்கிருந்து கிளம்பி விடவேண்டும்..!!’

அதற்குள் பேரர் ஆர்டர் செய்தவைகளை கொண்டு வந்து டேபிளில் பரப்பினான். அசோக் பொறுமையாக விஸ்கியையும், ஸ்ப்ரைட்டையும் ஊற்றி மிக்ஸ் செய்தான். ‘சியர்ஸ்..!!’ என்றவாறு திவாகர் நீட்டிய க்ளாஸுடன், தனது க்ளாஸை இடித்துக் கொண்டான். நிதானமாக விஸ்கியை உறிஞ்ச ஆரம்பித்தான்.

திவாகருக்கு இப்போது தலை நிலைகொள்ளாமல் தள்ளாடியது. கருவிழிகள் கடிகார முள் போல சுழன்றன. ஒரு சிகரெட்டை பற்ற வைக்க, ஏழெட்டு குச்சிகள் வீணாக்கினான். அவன் போதையின் உச்சத்தில் இருக்கிறான் என்று அசோக்கிற்கு தெளிவாக தெரிந்தது. கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்த திவாகர் அப்புறம் மெல்ல ஆரம்பித்தான். Pundai Nakkum Tamil Hot Stories

– தொடரும்

நெஞ்சோடு கலந்திடு – 21

What did you think of this story??

Comments

Scroll To Top