மலரே என்னிடம் மயங்காதே – 14

(Tamil Hot Sex Stories - Malarae Ennidam Mayangathae 14)

Raja 2014-02-23 Comments

“ஏண்டி இப்படி பண்ணின..?” என்று வெறுப்பை உமிழ்ந்தேன்.

“நா..நான் வேணும்னு பண்ணலத்தான்.. தெ..தெரியாம…” மலர் என் கோபத்தில் நடுநடுங்கினாள்.

“இல்லை.. நீ வேணும்னேதான் பண்ணிருக்குற.. எனக்கு தெரியும்..!!” ஆத்திரத்தில் நான் அபாண்டமான பழியை அவள் மீது சுமத்தினேன்.

“ஐயோ.. சத்தியமா நான் தெரியாமத்தான் பண்ணினேன்.. என்னை நம்புங்க..”

“நடிக்காதடி.. உன் ப்ளான்லாம் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்..”

“எ..என்ன பேசுறீங்க நீங்க..?”

“கயலோட நெனைப்பு மொத்தத்தையும் என்கிட்டே இருந்து அழிக்கனும்.. அப்டித்தான..? அந்த எடத்துல நீ வந்து உக்காரணும்.. அதுதானடி உன் திட்டம்..? ம்ம்ம்..?? சொல்லு..!!”

“ஐயோ.. சத்தியமா இல்லைத்தான்..!!”

3

மலர் இப்போது அழ ஆரம்பித்தாள். அவளுடைய கண்கள் சரம் சரமாய் நீரை சொரிய ஆரம்பித்தன. மிரட்சியாக என்னையே பார்த்தாள். இப்போது நான் அவளுடைய தோள்ப்பட்டையை இரண்டு புறமும் அழுத்திப் பிடித்து, அவளுடைய கண்களை வெறுப்பாக பார்த்தேன். அமிலத்தில் தோய்ந்த வார்த்தைகளை அவள் மீது அள்ளித் தெளித்தேன்.

“பொய் சொல்லாதடி.. என்னை மயக்கனும்னு ஒவ்வொரு நாளும் நீ பண்ற வேலையலாம் நானும் கவனிச்சுட்டுத்தான் இருக்குறேன்..!! மாயக்காரிடி நீ..!! வேஷக்காரி..!!”

“இல்லைத்தான்.. சத்தியமா இல்லை..” மலர் கண்களில் நீர் மல்க கெஞ்சினாள்.

“ச்சை.. உன்னை நெனச்சாலே.. எனக்கு அருவருப்பா இருக்குடி..!! என் மனசுல கயல் இருக்குற இடத்தை தொட்டுப் பாக்கனும்னு கூட நெனச்சிடாத.. எங்கயாவது தொலைஞ்சு போ..!!”

என்று கத்தியவாறு அவளை அப்படியே பிடித்து பின்னால் தள்ளிவிட்டேன். அவள் மெத்தையில் சென்று மல்லாக்க விழுந்தாள். அவளை திரும்பிக் கூட பார்க்காமல், படுக்கையறையை விட்டு வெளியே வந்தேன். பால்கனிக்கு சென்றேன். பாக்கெட் தடவி சிகரெட் பாக்கெட்டை எடுத்தேன். பதட்டத்துடன் ஒரு சிகரெட் உருவி, நடுங்கும் விரல்களால் நெருப்பு வைத்துக் கொண்டேன். குபுகுபுவென புகையை நுரையீரலுக்குள் இழுத்து, வெளியே ஊதினேன்.

மனம் முழுவதும் தீப்பற்றியது மாதிரி ஆத்திரத்தில் திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது. என்ன காரியம் செய்து விட்டாள் இந்த மலர் என்ற மாயக்காரி..?? என்னுடைய கயல்.. குயிலை விட இனிமையான அவள் குரல்.. தூக்கம் வராமல் நான் தவிக்கையில், என்னை தாலாட்டி விழி மூட வைக்கும் அந்த பாடல்..!! எல்லாம் அவ்வளவுதானா..?? இனி நான் கேட்கவே போவது இல்லையா..??

நினைக்க நினைக்க, ஆத்திரம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்ல, அடுத்தடுத்து இன்னொரு சிகரெட்டையும் பற்ற வைத்துக் கொண்டேன். அந்த சிகரெட்டும் முடியப் போகிற வேளையில்தான் உள்ளிருந்து அந்த சப்தம் வந்தது..!! இல்லை இல்லை.. சப்தம் இல்லை..!! பாடல்.. அந்த பாடல்.. என் கயலின் தேன் குரலில் நனைந்த அதே பாடல்..!!

“உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல..
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல..”

கயலுடைய குரலை கேட்டதும், என் உடலுக்குள் ஒரு பரவசம்..!! என் மனதில் மோதிய அத்தனை ஆத்திர அலைகளையும், ஒரே நொடியில் அமைதியாக்கியது என்னவளின் குரல்..!! கண்களில் முணுக்கென்று நீர் கோர்த்துக் கொண்டது..!! சிகரெட்டை தூக்கி எறிந்து விட்டு.. ஆனந்தமாய் அழுதுகொண்டே.. உள்ளே ஓடினேன்..!! உள்ளே..

கம்ப்யூட்டரில் அந்தப் பாடல் ஓடிக் கொண்டிருந்தது..!! கண்களில் நீர் பொங்கி வடிய.. மலர் அமைதியாக அதனருகே நின்றிருந்தாள்..!! நான் உள்ளே நுழைந்ததும் என்னை நிமிர்ந்து பார்த்தாள். மிக மிக பொறுமையாக, வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்..!! எனக்கு எதுவும் புரியவில்லை.. அழிக்கப்பட்ட ஃபைல் எப்படி திரும்பக் கிடைத்தது..?? எனது குழப்பத்தை மலரே புரிந்து கொண்டாள். நான் வாய் விட்டு கேட்காமலேயே, அவளாகவே என் கேள்விக்கு பதிலளித்தாள்..!!

“டெலீட் பண்ணின ஃபைலை திரும்ப எடுக்க முடியுமான்னு.. நெட்ல சர்ச் பண்ணினேன்..!! ஏதோ டேட்டா ரெகவரி சாஃப்ட்வேர் இருந்தா பண்ணலாம்னு தெரிஞ்சது.. அதை டவுன்லோட் பண்ணி ட்ரை பண்ணினேன்.. திரும்ப கெடைச்சிடுச்சு..!!”

அவள் சொன்ன விஷயங்கள் எனக்கு புதிது..!! டேட்டா ரெகவரி என்று ஒரு விஷயம் இருப்பதே அப்போதுதான் எனக்கு தெரியும்..!! அவள் சொல்ல சொல்ல, நான் இப்போது குற்ற உணர்ச்சியில் குறுகிப் போனேன். ச்சே.. ஆத்திரத்தில் அவசரப் பட்டு இவளை காயப் படுத்தி விட்டேனே..? அவளை ஒரு மாதிரி பரிதாபமாக பார்த்தேன். அப்புறம் அந்தப் பார்வை பார்க்க கூட திராணி இல்லாமல், தலையை கவிழ்ந்து கொண்டேன். மலரே தொடர்ந்து பேசினாள்.

“முக்கியமான ஃபைல்லாம் தனியா ஒரு காப்பி எடுத்து, ஸேஃ பா வச்சுக்கோங்கத்தான்.. இப்படி அசால்ட்டா போட்டு வைக்காதீங்க..!!”

உணர்ச்சியற்ற குரலில் அவள் சொல்லிவிட்டு, கதவை நோக்கி நடந்தாள். வழியில் தலை குனிந்தவாறு நின்றிருந்த என்னை, அவளும் தலை குனிந்தவாறே கடந்து சென்றாள். நான் பார்வையை திருப்பி.. அவள் செல்வதையே ஓரக்கண்ணால் பார்த்தேன். கதவை அடைந்த மலர், அப்படியே செல்லாமல் ஒருகணம் அங்கேயே நின்று.. திரும்பி.. என் விழிகளை கூர்மையாக பார்த்தாள். மிகவும் பரிதாபமான குரலில் சொன்னாள்.

“நீங்க என் மனசை புரிஞ்சுக்கிட்டீங்கன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தேன்-த்தான்..!! அது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்னு என் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க..!! அக்காவோட நினைவுகள்ல நீங்க இருக்குறதை பாத்துத்தான்.. உங்க மேல எனக்கு காதலே வந்தது..!! எனக்கு காதல் வர காரணமா இருந்த அந்த நினைவுகளை.. நானே எப்படி அத்தான் அழிப்பேன்..?? உங்க மனசுல அக்கா இருக்குற இடத்துக்கு நான் என்னைக்குமே ஆசைப்பட்டது இல்லத்தான்.. அவ்வளவு பெரிய மனசுல எனக்குன்னு கொஞ்சூண்டு.. ஒரு ஓரத்துல எடம் கிடைக்காதான்னுதான் ஏங்கினேன்..!! நீங்க என்னை புரிஞ்சுக்கவே இல்லத்தான்.. புரிஞ்சுக்கவே இல்ல..!!”

சொல்லும்போதே, அருவியாய் கண்ணீர் கொட்டி.. அவளுக்கு அழுகை பீறிட.. அதற்கும் மேலும் அங்கே நில்லாமல், அவளுடைய அறையை நோக்கி ஓடினாள். அவள் பேசிய வார்த்தைகள் என் மனசாட்சியை குத்திக் கிழிக்க, நான் அப்படியே தளர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தேன்.

அப்புறம் வந்த சில நாட்களில், எனக்கு மனநிம்மதி என்பது மருந்தளவுக்கு கூட சிக்கவில்லை. எந்த நேரமும் மனதுக்குள் ஒரு வித உணர்ச்சி அழுத்தம்..!! மலரை நான் காயப்படுத்தியதை எண்ணி எண்ணி.. என் இதயம் வேதனையில் வெந்து துடித்தது..!! கயலின் நினைவு எனக்கு முக்கியம்தான்.. ஆனால்.. மலரின் கனவை.. அதுவும் என் தவறால் நானே அவள் மனதில் உருவாக்கிய கனவை.. அழிப்பது என்ன நியாயம்..? திரும்ப திரும்ப.. நடந்ததையே எண்ணி.. தினம் தினம் மலருக்காக என் மனம் உருகியது.. கண்கள் அவளுக்காக கண்ணீர் சிந்தின..!! Bra Tamil Hot Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top