நெஞ்சோடு கலந்திடு – 27

(NENJODU KALANTHIDU 27)

Raja 2014-01-28 Comments

“லீவா..?? வெளையாடாதீங்க ஸார்.. வாங்க.. வந்து எடுத்துக் குடுங்க..!!”

“வரவா..? நான் இப்போ ஆதம்பாக்கத்துல இருக்கேன் தம்பி.. உடனே அங்க வர முடியாது..!!”

“என்ன ஸார் இப்படி சொல்றீங்க..? அது எனக்கு ரொம்ப முக்கியமான வாட்ச் ஸார்.. நீங்க சரி பண்ணாட்டா கூட பரவால.. உடனே வந்து எனக்கு எடுத்து குடுங்க..!!”

“ஏன் தம்பி.. வாட்ச்சதான ஒப்படைச்சுட்டு போன..? என்னமோ உன் வாழ்க்கையையே ஒப்படைச்சுட்டு போன மாதிரி இப்படி பதர்ற..? நாளைக்கு வந்து வாங்கிக்கப்பா..!!”

“இல்லை ஸார்.. உங்களுக்கு புரியலை.. எனக்கு அந்த வாட்ச் ரொம்ப முக்கியம்.. அதை பிரிஞ்சு நான் ஒருநாள் கூட இருந்தது இல்ல..!! ப்ளீஸ் ஸார்..!!”

“என்னப்பா நீ..? அவன் அவன் இங்க வாக்கப்பட்டு வந்தவளையே பிரிஞ்சு போய் உக்காந்திருக்கான்.. நீ வாட்சை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு சொல்ற..?”

“என்ன ஸார் சொல்றீங்க..?”

“பொண்ணு மேட்டரா..? உன் ஆளு உனக்கு வாங்கி கொடுத்ததா..?”

“ஆமாம்.. ஏன் கேக்குறீங்க..?”

“நெனச்சேன்.. நான் அப்போவே நெனச்சேன்..!!” அந்த ஆள் இப்போது பெரிதாக கத்தினான்.

“என்னாச்சு ஸார்.. ஏன் இப்போ டென்ஷனாகுறீங்க..?”

“நம்பாத தம்பி.. இந்த பொண்ணுகளை மட்டும் நம்பவே நம்பாத..!! நம்பினேன்னு வச்சுக்கோ.. என்னை மாதிரி இப்படி பார்ல உக்காந்து ஒண்டியா பாட்டில் போட உட்ருவாளுக..!!”

“கடையை அடைச்சுப்போட்டு.. பாருக்கு போயிருக்கீங்களா..?”

“பின்ன என்ன போருக்கா போயிருக்கேன்..? பாருக்குதான் தம்பி..!! ஹ ஹ ஹ ஹ..” அந்த ஆள் இப்போது அழ ஆரம்பித்தான்.

“ஸார்.. ஏன் ஸார் அழறீங்க..?”

“எ..என் பொண்டாட்டி.. என் பொண்டாட்டி.. என்னை விட்டு ஓடிப்போயிட்டா தம்பி..!!”

“ஐயையே.. என்ன ஸார்.. இதுலாம் எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கீங்க..?”

“ஏன்.. சொன்னா என்ன..? ஊருக்கே தெரிஞ்சு போச்சு.. உனக்கு தெரிஞ்சா என்ன..? அவளுக்காக நான் காலநேரம் பாக்காம வாட்ச் கடைல கெடந்து ஒழைச்சேன்.. அவ என்னடான்னா எங்க காலனி வாட்ச்மேனை கரெக்ட் பண்ணிட்டு.. ஓடிப்போயிட்டா தம்பி..!!”

“ஸார்.. அழாதீங்க ஸார்..”

“அதான் சொல்றேன்.. இந்த பொண்ணுகளை நம்பாதீங்க.. நட்டாத்துல விட்டுட்டு போயிடுவாளுக..!! அவளுகளுக்கு செலவு பண்ற காசலாம் ஏதாவது அநாதை விடுதிக்கு டொனேஷனா குடுங்க.. கொஞ்சம் புண்ணியமாவது கெடைக்கும்..!!”

“ஐயையே.. என்ன ஸார் நீங்க.. முன்னப்பின்ன தெரியாத எங்கிட்ட வந்து.. அழுது பொலம்பிக்கிட்டு..? அழாதீங்க ஸார்..”

அசோக் அந்த சிட்டிபாபுவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவனுடைய நம்பருக்கு இன்னொரு கால் வந்தது. புது நம்பராக இருந்தது. ‘யார் இது..?’ என்று ஓரிரு வினாடிகள் குழம்பினான். அப்புறம் சிட்டி பாபுவிடம்,

“ஸார்.. எனக்கு இன்னொரு கால் வருது.. நான் அப்புறமா உங்களை கூப்பிடுறேன்..”

“சரி தம்பி.. நான் சொன்னதை மட்டும் மறந்துடாதீங்க..!! பொண்ணுகளை நம்பாதீங்க.. பொண்ணுகளை மட்டும் நம்பவே நம்பாதீங்க..!!”

“சரி ஸார்.. நம்பலை..நம்பலை..”

அசோக் சிட்டிபாபுவின் காலை கட் செய்துவிட்டு, அடுத்த காலை அட்டன்ட் செய்தான்.

“ஹலோ..” என்றான்.

“அசோக் செல்லம்..” அடுத்த முனையில் குழைவாக ஒரு ஆண் குரல்.

“ஹலோ.. யாரு..?”

“யாருன்னு தெரியலையா செல்லம்.. ஹாஹா.. ஹாஹா..”

அடுத்த முனை சிரிக்க ஆரம்பித்ததும், இப்போது அசோக்கிற்கு தெளிவாக தெரிந்து போனது.. அது யாரென்று..!! திவாகர்..!!

“திவாகர்..!!”

“பரவாலையே.. கரெக்டா கண்டு பிடிச்சுட்ட..??”

“என் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்..?”

“ஜஸ்ட் இப்போத்தான்.. திவ்யாவோட ஹேன்ட் பேக் திறந்து. அவ செல்போனை நோண்டி கண்டு பிடிச்சேன்..!!”

“ஓ.. சரி என்ன விஷயம்.. சொல்லுங்க..!!!”

“எனக்கு உன்கிட்ட சொல்றதுக்கு என்னப்பா இருக்குது..?? லாட்ஸ் அண்ட் லாட்ஸ் ஆஃப் தேங்க்ஸ்..!!”

“என்ன.. நக்கலா..??”

“நோ.. சீரியஸ்..!! திவ்யா எனக்கு கெடைப்பாளோ மாட்டாளோன்னு ரொம்ப கவலைல இருந்தேன் ராஜா.. நீ அடிச்ச கூத்துல.. நான்தான் கதின்னு என் காலுல விழாத குறையா எங்கிட்ட வந்து செட்டில் ஆகிட்டா..!! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அசோக்.. என் மனசார சொல்றேன்.. ஃப்ரம் மை ஹார்ட்..!! ஹஹாஹஹாஹஹா…!!”

“ரொம்ப சிரிக்காதீங்க திவாகர்.. திவ்யாவுக்கு கூடிய சீக்கிரமே உங்களை பத்தி தெரிய வரும்..!!”

“ஹாஹா.. அது தெரியிறப்போ பாத்துக்கலாம் செல்லம்.. இப்போ என்ன அவசரம்..?? ம்ம்ம்ம்.. அப்புறம்..?? திவ்யாவை நீயும் லவ் பண்ணுனியா கண்ணா.. ம்ம்.? ம்ம்..? ஹஹாஹஹா..!! எவ்வளவு பழகிருக்கோம்.. எங்கிட்ட கூட நீ சொல்லலை பாத்தியா..? ஹஹாஹஹா..!!” திவாகரின் கிண்டல் அசோக்கிற்கு எரிச்சலை கிளப்பியது,
“திவாகர்.. உங்க நக்கலுக்குலாம் நான் ஆளு இல்ல.. எனக்கு வேற வேலை இருக்கு..!!”

“இருப்பா இருப்பா.. உன்கிட்ட இன்னொன்னு சொல்லணும்..!!”

“என்ன..??”

“முன்னாடிலாம் நான்தான் திவ்யாகிட்ட கெஞ்சிட்டு இருப்பேன் அசோக்.. இப்போ என்னடான்னா.. அவ கெஞ்சுறாப்பா..!! நான் ஒன்னு சொன்னா.. அதை எப்படி விழுந்து விழுந்து பண்ணுறா தெரியுமா..?? எல்லாம் உன்னாலதான்..!! ம்ம்ம்ம்.. போற போக்கை பாத்தா.. எனக்காக என்ன வேணா செய்வா போல இருக்கு..!! என்ன வேணா..!!!” இரண்டாவதாக சொன்ன ‘என்ன வேணா’விற்கு திவாகர் எக்ஸ்ட்ரா அழுத்தம் கொடுக்க, அசோக் இப்போது டென்ஷன் ஆனான்.

– தொடரும்

நெஞ்சோடு கலந்திடு – 27

What did you think of this story??

Comments

Scroll To Top